❤ சிறுநகை 48

Începe de la început
                                    

"ஸாரிமா! நான் எப்பவுமே ட்ரிம்மர் தான் யூஸ் பண்ணுவேன். அத வேணும்னா யூஸ் பண்ணிக்குறியா?" என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்டவனிடம் எரிச்சலுடன் உச்சுக்கொட்டியவள்,

"அப்பா கிட்ட என்னத்துக்குங்க அப்டி பேசுனீங்க? உங்களுக்கு கொழுப்பு தானுங்களே? அவர சமாளிக்குறதுக்குள்ள எனக்கு நாக்கு தள்ளிருச்சு!" என்றாள்.

"நீங்க இப்டி இருந்தா உங்களுக்கு எப்டி கல்யாணம் நடக்கும்னு கேட்டாரு? ஓகே ஃபைன்... அப்போ அது நடக்க வேண்டாம்னு சொல்லிட்டு வந்தேன்! ஏம்மா எதுவும் தப்பா சொல்லிட்டேனா?" என்று கேட்டவனிடம்,

"தப்பா சொல்லிட்டனவா.....?
....ங்கொப்பன் மவனே..... ஏன்டா நீ இப்டி பேச மாட்ட? அவந்தான் உன் ஆளு, அவந்தான் உன் ஆளுன்னு உங்க வூட்ல இருக்கிறவிய்ங்க ஒட்டுக்கா சொல்லி சொல்லி என்னைய கிட்டத்தட்ட ஒம்பொண்டாட்டியா நெனக்க வச்சு வளத்து வச்சிருக்கானுவடா தடிமாடு!"

"வேண்டாம்..... இதெல்லாம் எனக்கு வேண்டாம்னு ஓடித் தொலைய நெனைச்சாலும் எவனும் அதுக்கும் உட்டுத்தொலையல. குழந்த கண்ணு முன்னாடி சாக்லேட்ட காட்டுறது மாதிரி தெருவோர தையக்கடையில இருந்து என்னைய இன்னிக்கு பகுமானமா நிக்குற ஒரு தையக்கடைக்கு தூக்கிட்டு வந்துட்டாய்ங்க!"

"எல்லாத்தையும் செஞ்சுட்டு கொட்டாவி உட்டுட்டு மேல வேற போயித் தொலைஞ்சுட்டான் அந்த பொன்னுரங்கம் கெழவன்..... இப்ப மட்டும் உசுரோட இருந்துருந்தான்னா போயா நீயுமாச்சு ஒவூட்டுப் புள்ளையுமாச்சுன்னு அவங்கிட்ட சொல்லிட்டு போயிட்டே இருந்துருப்பேன்! இப்ப அதுக்கும் வழியில்ல.........."

"உன் வீட்ல இருக்கிறவிய்ங்க உனக்காக எத்தனைய பண்ணியிருக்காய்ங்கன்னு
ஒரு எழவும் தெரியாம நீ எங்கணயோ பரதேசம் போயிட்டு வந்து இப்ப ஏன்டா இருக்கிறவிய்ங்க உசுரெல்லாம் சேத்து குடிக்கிற?" என்று கேட்டவள் சட்டென அவனுக்கு முகம் காட்டாமல் முதுகைக் காட்டி திரும்பி நின்று கொண்டாள்.

மிக மிக மெலிதாக அவள் மூக்கை உறிஞ்சும் சப்தம் கேட்டதும் சஞ்சீவ் முகம் சுருக்கி அந்த அறைக்கதவை சாற்றி விட்டு அவளருகில் வந்தான்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Unde poveștirile trăiesc. Descoperă acum