அதனால என்னம்மா.. நீ பாரும்மா உனக்கு பிடிச்சிருந்தா ஓகே சொல்லிடும்மா...
நான் பாக்கலனா என்ன??...
அதிக நேரம் அம்மாவும் நீயும் தான் இருக்க போறீங்க.... உங்களுக்கு வசதியா இருக்கானு பாத்துக்கோங்க...அப்புறம் முல்ல💞.. இந்தா இதுல இருக்குற Details கரெக்டானு Check பண்ணிட்டு கொடும்மா நான் நாளைக்கு கிளம்பும் போது பேப்பர்ல விளம்பரம் கொடுத்துட்டு போய்டுவேன்..
என்னது??...ப்பா இது..
நாம பேசுனது தான் ம்மா
கல்யாணம் விஷயம்மா...முல்லை💞க்கு பதற்றம் ஏற்பட...
அப்பா இவ்ளோ அவசரம் தேவையா???...ஏங்க... எல்லாத்துக்கும் அவ கிட்ட Permission கேப்பிங்களா??...
அம்மா நான் சொல்றத கொஞ்சம்...
ஒண்ணும் பேசாத....
ஒரு 2 வருஷம் போகட்டும்மா..
2 வருஷம் கழிச்சு பண்ணிக்க
தானே போற... அத இப்போ பண்ணிக்கோயேன்..எனக்கு இப்போ கல்யாணத்துல... intrest இல்லம்மா..
மாப்ள பார்த்தா.... தானா.. Intrest வந்துடும்... இந்த வருஷம் போச்சுன்னா.. இன்னும் 5 வருஷத்துக்கு அப்புறம் தான்
உனக்கு குரு பலன் இருக்காம்..
ஜாதகரீதியா வேளை வந்தாச்சுனு ஜோசியர் சொல்லிட்டாரு...இன்னும் வேளை வரலன்னு இன்னொரு ஜோசியர விட்டு சொல்ல சொன்னா அமைதியா இருப்பியா??...
ஏண்டி இப்டி பிடிவாதம் பிடிக்கிற..
நீங்க ஏன் இவ்ளோ பிடிவாதம் பிடிக்கிறீங்க...
சொல்ல வேண்டாம் னு பாத்தா..என் வாய பிடுங்கி சொல்ல வைக்கிற.. இரு வரேன்... என்று சமையலறைக்கு சென்று..... செல்ஃபில் இருந்து... ஒரு தபால் கவரை எடுத்து வந்து நீட்டினாள் பார்வதி...
இத படிச்சு பாரு என்னோட கவலை பயம் உனக்கு புரியும்..
கைகளை கழுவி விட்டு
முல்லை💞 கேள்வி குறியோடு...
அந்த கவரை வாங்கினாள்.அந்த கவரின் முகவரி பகுதியின் முதல் வரியிலேயே திடுக் தரும் "திமிர்" இருந்தது...