💛❤️💛 காதலை💞 தேடி...💛❤️💛
K💞M Part -11
Time 8:30 ஆகுது இன்னும்....
முல்ல💞 வரலையே Phone எதும் பண்ணாளா!!??என்றார் முருகன்...கிளம்பிட்டேன்னு போன் பண்ணா...ங்க...வர்ற நேரம் தான் ... உங்களுக்கு தோசை ஊத்தவா... என்றாள் பார்வதி அம்மா...
இன்னைக்கு நான் தோசை ஊத்தி தரேன்...நீ இப்டி உக்காரு என்று..
சமையலறைக்கு வந்து தயாரானார்..என்ன திடீர்னு ஏதாச்சும் குண்டு போட போறீங்கலா....
அது ஒண்ணும் இல்லையே..
ஏன்? நான் செய்ய கூடாதா...அடுத்த Trip க்கு Sir ரெடி ஆயாச்சு...போலருக்கு
அதுக்கான ஐஸ்..ஸா இது....பார்வதி னா..பார்வதி தான்....
எப்படி?? கண்டுபிடிச்ச..எனக்கு தெரியாதாக்கும்...
காலிங் பெல் ஒலிக்க முருகன் சென்று கதவை திறந்தார்...
கையில் தோசை கரண்டியுடன் முருகன் நிற்க....
என்னாச்சு..ப்பா என்ன தப்பு பண்ணீங்க... அம்மா தண்டனை கொடுத்து இருக்காங்க...
என்றாள் முல்லை 💞நாளைக்கு Tour போறேன்ம்மா...
வர பத்து நாள் ஆகும்..Ohh.. அதானா..
அம்மாக்கு தெரியுமா???...
ம்ம்ம் அம்மா கண்டு பிடிச்சிட்டா..சரி நீ போய் குளிச்சிட்டு வாம்மா... அப்பா தோசை ஊத்துறேன்...
ம்ம்ம் சரிப்பா...
குளித்தபோது முல்லை💞க்கு
கதிரின் நியாபகம் வந்தது...நிகழ்ச்சி பதிவின் போது அவன் பேசியது அனைத்தும் அவளுக்கு இன்னும் காதருகே கேட்டது....
அப்படி பேச எவ்வளவு மனம் பக்குவபட்டிருக்க வேண்டும்...
ரொம்ப அபூர்வமாக தான் இப்படிப்பட்ட மனிதர்களை சந்திக்க நேர்கிறது... நிச்சயமாக கதிர் ஒரு சுவாரசியமான நபர் தான்...Coffee சாப்பிட அழைத்ததில் ஒரு கண்ணியம்.இருந்தது .. ரசிகனாக சொல்லிக்கொண்டு பரிசு தந்ததில் விகல்பமில்லா மனது தெரிந்தது..