தாரிணி சிவாவை சந்திக்கும் போது பெஸ்ட் இயர் ஸ்ட்டூடன் ஆனால் இது மூன்றூ வருடம் கழித்து அதாவது இது நான்காம் வருடம் படிப்பவள் இந்த மூன்று ஆண்டு வரை திருமணம் நஞ்சு என்ற கோட்பாட்டில் இருந்தவள் இந்த ஆண்டு தான் 'இந்தியனை மணக்கலாம்' என்ற கோட்பாட்டை விதித்து கொண்டாள்
இதை பற்றி ஜானிடம் கூறியதும் வேஷ்டி சட்டை உடுத்து வந்து கண் முன் நின்று விட்டான். "நான் தமிழன்" என்று உலறியும் தள்ளினார்.... இவ்வளவு நடந்தும் அவள் மனதில் நுழையவே இல்லை ஜான்.
ஈர்ப்பு என்பது தனக்காக ஒருவர் மாற தயார் என்பதற்க்காக மட்டுமே வந்து விடாது அல்லவா அது ஒரு அழகான உணர்வு....யார் மேல் யாருக்கும் வரலாம் 'ஏன் இந்த ஈர்ப்பு?' என்று கேள்வி கேட்க்கவும் முடியாது 'ஏன் உனக்கு என் மேல் ஈர்ப்பு இல்லை?' என்று கேள்வி கேட்க்கவும் முடியாது
இந்த ஆண்டு படிப்பு முடிந்த கையோடு வேறு வீடு வாங்க நினைத்தவள் அந்த எண்ணத்தை கை விட்டு விட்டு இந்தியா போவோம் என்ற எண்ணத்தை கையில் எடுத்து கொண்டாள் காரணம் ஜோனின் காதல் வேகம் கூடியது தான்.
அடுத்த ஒரு மாதத்தில் அவளது வீடு விற்று காசும் வந்தது உடனே வாடகை ஹாஸ்டலில் சென்று தங்கினாள். ஆறு மாதத்தில் படிப்பு முடிந்ததும் ஜாப்போடு இந்தியா வந்தாள்.
பால்காடு தான் அவள் பிறந்த மண் ஆனால் அங்கு போக பிடிக்காது சென்னையில் வீடு வாங்கி வாழ ஆரம்பித்தாள். அப்போது அவளுக்கு கிடைத்த வேலை சிவாவின் உடை காம்பனியில் மனேஜர் போஸ்ட் அது கூட சிவாவின் தந்தைதான் அவளை மனேஜராக சிலக்ட் செய்தார்....
தான் தன் நண்பன் சிவாவிடம் வேலை பார்க்கின்றேன் என்ற விடயமே அவளுக்கு தெரியாது... ஒரு நாள் மாலை நேரம் கென்டீனில் சாப்பிட்டு கொண்டு இருந்த தாரிணி தூரத்தில் காரில் சிவா பெக்ட்டரியை சுற்றி பார்ப்பதை கண்டு அதிரந்தாள் வேகமாக சென்று காருக்கு முன் பாயாது மெதுவாக சென்று காரில் இறங்கி எதையோ பார்த்து பார்த்து நான்கு பேருடன் பேசி கொண்டு இருந்தவனது அருகில் சென்று நின்றாள்.
YOU ARE READING
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)
General Fictionகல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே த...
35-தாரிணி
Start from the beginning