'ஓஹ் என்னை விட மூன்று வயசு சின்னவங்களா' என்று கேட்டு கொண்டே நாக்கை கடித்தவன் பின்பு எழுந்து ஆபிஸ் ரூம் சென்று எதையோ பேசிவிட்டு வெளி வந்து தன் ரூம் சென்றான்.
இந்த ஒரு மாதத்தில் கண்ணில் சிக்காத அந்த தாரணி அந்த சந்திப்பின் பின்பு பல முறை சந்திக்க நேர்ந்தனர்
ஒரு தடவை அவனுக்கு ஷ்ருதி கால் செய்த போது பேசி கொண்டு இருந்தான் அப்போது அவ்விடம் வந்த தாரணி அவனுடன் பேசுவதற்காக காத்திருந்தாள்.கொஞ்சம் தள்ளி மிகவும் இங்கிதம் தெரிந்தவளாக எததையோ பார்த்து கொண்டு இருந்த தாரணியை கண்டதும் மொபைலை ஆப் செய்து விட்டு "தாரணி" என்று அழைத்தான். உடனே அவன் அருகில் வந்து "அடுத்த மன்டேய் ஒரு எக்ஸேம் நடக்குமாம் அதுல பார்டிஸிபேட் பன்னா நம்பர்வன் கம்பெனில மனேஜர் போஸ்ட் கொடுப்பாங்களாம் ஸோ உங்க கிட்ட சொல்லலாம்ன்னு வந்தேன்" உடனே "வாவ் வட்ட க்ரேட் ஒபசியுனிடி நீங்க பார்டிஸிபேட் பன்ன போறீங்களா?"
"இல்லங்க நீங்க பார்ஸிபேட் பன்லாமே" என்றதும் அவள் வந்த நோக்கம் புரிந்து "தேங்க்யூ பட் எனக்கு எங்ப்பாவோட தொழில பெரிய லெவல்ல கொண்டு போக தான் ஆசை ஏன் நீங்க பார்டிஸிபேட் பன்லாமே"
"அச்சோ நான்லாம் பார்ஸ் ஆவேன்னு நினைக்குறீங்களா....நோ நோ" என்றாள் சிரித்தமுகமாக
"அது என்ன நம்பிக்கை இல்லாத பேச்சு ஊங்களால முடியும் தாரணி தைரியமாக பார்டிஸிபேட் பன்னுங்களேன்"
"பட்" எனறு எதோ சொல்ல போனவளை தடுத்து "நோ நோ கண்டிப்பா பன்னனும்" என்று விட்டு அவளை அழைத்து சென்று அவள் பெயரை கொடுத்தான்.
"என்ன சிவா இது எனக்கு அவ்ளோ டெலன்ட்லாம் இல்லப்பா நான் எப்டி?" என்று கேட்டு தயக்கத்தோடு நின்றவள் கையில் தன்னிடம் இருந்து புத்தகங்களை கொடுத்து "இதுலாம் எடுத்து படிங்க உங்ஙளால முடியும்" என்று நம்பிக்கை கொடுத்து அனுப்பி வைத்தான்.
அதன் படி ஒரு வாரம் நன்றாக படித்து விட்டு எக்ஸேம் எழுதும் போது எக்ஸேம் நடக்கும் இடம் சிவா வந்தூ இருந்தான்.
YOU ARE READING
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)
General Fictionகல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே த...
28-புது நண்பி
Start from the beginning