அந்த அறையில் உள்ளப் பொருட்களை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தூசிப் படிந்திருந்தது.
மூலைக்கு மூலை சிலந்தி வலை பின்னப்பட்டிருந்தது.
டேபுளின் மேல் நிறைய நாவல்கள் அடுக்கியபடி இருந்தது.ஒரு சிறிய பீரோ இருந்தது.அருகில் கட்டில் அதில் பழைய புடவை ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. அறையின் தரையில் தூசிப் படிந்தமையால் சக்தி வந்து போனதற்கான கால்தடம் இருந்தது.
அந்த அறையையே சுற்றும் முற்றும் பார்த்தவளின் கண்ணில் ஒன்று பட அதை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நம் நாயகி ஆதிரா.
வேறொன்றும் இல்லை சுவரில் மாட்டப்பட்டிருந்த போட்டோவை தான் பார்த்தாள்.அதில் போதிய உயரம் வசீகரமான முகம் கள்ளம்கபடம் இல்லா சிரிப்பு இவை அனைத்தையும் பெற்ற ஒரு பெண் சுமார் நாற்பது நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண் இருந்தார்.அவர் தோளின் மேல் கைப்போட்டு சிரித்தபடி நின்றுக்கொண்டிருந்தான் நம் சக்தி. இது வரை சக்தியின் முகத்தில் கண்டிராத சிரிப்பும் பாவனையும் அவன் முகத்தில் தெரிந்தது.
ஆம் அவர் சக்தியின் அம்மா செல்வி. அதை ஆதிரா யூகிக்காமல் இல்லை.
தன்னையும் அறியாமல் ஆதிராவின் கரம் அந்த போட்டோவை வருடியது.
அப்போது ஒரு காகிதம் அவள் காலடியில் விழ அதை எடுத்துப் முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தாள் கடிதம் போல் தெரியவும் அதில் என்ன எழுதியிருக்கும் என்ற ஆர்வத்தில் பிரித்துப் பார்க்க அதில் என் அன்புள்ள மறுமகளுக்கு என துவங்கப்பட்டிருந்தது.
சட்டென கடிதத்தை மடித்தவள் " அன்புள்ள மருமகளுக்குனு எழுதி இருக்கு ஒரு வேள அவங்க இறக்கரத்துக்கு முன்பே சக்திக்கு பெண் பார்த்திருப்பாரோ இந்த லட்டர அந்த பொண்ணுக் கொடுக்கரத்துக்கு முன்னாடியே அவங்க இற,,... இறந்துட்டாங்களா"என செல்வியைப் பார்த்தாள்.
இதை படிக்கலாமா வேண்டாவா என்ற குழப்பத்தில் இருந்தவள் சிறு தயக்கத்திற்கு பின் கடிதத்தை படிக்கத் தொடங்கினாள்.
என் அன்புள்ள மரு மகளுக்கு ......
இந்த கடிதம் உன்னவந்தடையறப்ப நான் உயிரோடு இருப்பேனானு தெரியலமா. கொஞ்சனாளாவே உடம்புக்கு ஒரு மாதிரி இருக்கு வேலுக்கு தெரிஞ்ச துடிச்சி போயிருவான் மா அதான் நான் சொல்லல.அவன் என்னோட உயிருக்கும் மேலடா. அவன விட்டுப் பிரிய எனக்கு மனசு இல்லடா.எல்லாம் விதி கைல. அவர் போனப்பறம் எனக்குனு யாரும் இல்ல வேலு மட்டும் தான். அவர் இருந்தப்ப மதிச்ச உறவுக்காரங்களாம் அவர் போனப்பறம் எங்கள மதிக்கல. என் பையன அவங்க முன்னாடி நல்ல நிலமைக்கு உயர்த்தனும்னு நினைச்சேன் முடிஞ்சளவு உயர்த்திட்டேன்.அவனுக்கு அங்க இருக்கறதுல விருப்பம் இல்ல எனக்கும் தான். ஆனா அத வெளிக்காட்டிக்கல. ஆனா அவன் புரிஞ்சிக்கிட்டான் என்ன இந்த டவுனுக்கு கூட்டியாந்துட்டான்.எனக்கு அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கைத்துணைய குடுக்கனும்னு ஆசை. அவன்கிட்ட சொன்னேன் ஆனா மறுத்துட்டான்மா.இந்த கூட்டுக்குள்ள நம்ம மட்டும் இருக்கலாம் வேற யாரும் வேண்டானு சொல்லிட்டான்.
அவனுக்கு என் மேல அளவுக்கடந்த பாசம் அதான்.அவன் மனசு வெள்ளை மா நம்புனவங்கள கை விட மாட்டான்.என்ன கொஞ்சம் அழுத்தக் காரன் அவ்வளவுதான். என்ன விட்டு எப்படி இருக்கப்போறானு தெரியல.அவன் நல்ல மனசுக்கு நல்ல வாழ்க்கை அமையும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அந்த ஆண்டவன் கை விட மாட்டான்.எனக்கும் மகன் மருமக பேரன் பேத்தினு வாழ ஆசை ஆனா விதி அதோட பக்கத்துக்கு என்ன இழுக்குதே. நான் சாகறத்துக்குள்ள நீ வந்த உன்ன பாத்துட்டு போயிருவேன். எனக்கு அந்த பாக்கியம் இல்ல போல இன்னும் கொஞ்ச நாள் தான்.அவன பாத்துக்கோடா டக்குனு மனசுல உள்ளத வெளிய சொல்லமாட்டான். உன்ன ராணி மாதிரி பாத்துப்பான் எந்த குறையும் வைக்கமாட்டான். நீ வருவன்ற நம்பிக்கைல தான் நான் போறேன். உனக்கு நான் சேத்து வச்ச நகை அதுக் கூட ஒரு புடவையும் சுத்தி அந்த துணிப்பைல வச்சி பீரோவுல வச்சிருக்கேன் இப்பவே எடுத்துக்கமா ஏதோ இந்த அத்தையால முடிஞ்சது.இதுக்கு மேல என்னால எழுத முடியல நெஞ்சு வலிக்குது. கண்டிப்பா நீ என்னோட மகன நல்லாபாத்துப்பன்ற நம்பிக்கைல நான் போறேன்.
இப்படிக்கு உன் அன்புள்ள அத்தை
செல்வி
கடிதத்தை மடித்தவளின் கண்களில் நீர் வழிந்தோடியது. அதைத் துடைத்துக் கொண்டவள் இந்த ஆண்டவனுக்கு நல்லவங்க கெட்டவங்க யாருனு தெரியாது சாகற வயசா அவங்களுக்கு என நினைத்துக் கொண்டவள் அவர் குறிப்பிட்டபடியே அந்த துணிப்பையை எடுத்தாள் அதில் நகையும் கண்ணை பறிக்கும் அளவுக்கு அழகான மாம்பழம் நிற மஞ்சள் பட்டுப்புடவையும் இருத்தது.அனைத்தையும் பையினுள் வைத்தவள் அந்த கடிதத்தையும் அதனுள் வைத்து பீரோவினுள் வைத்து விட்டால். ஏனோ அதையெல்லாம் அவளுக்கென்று சொந்தம் கொண்டாட மனம் விரும்பவில்லை.அவர் கூறியது மருமகளுக்கென்றே.
தான் நிரந்தரமல்ல என தோன்றியது காரணம் அவர்களுக்கு திருமணம் நடந்த முறை, அன்று ரேஷ்மா கூறியதும் தான் .சக்தியின் மனதில் ரேஷ்மா இருந்தாள் அவளுக்குத் தானே இதெல்லாம் சொந்தம் என கருதினால்.
அந்த அறையிலிருந்து வெளியேறியவள் சக்தி மாடிப்படி ஏறிச்சென்றது நினைவு வர மொட்டை மாடிக்குச் சென்றால்.
அங்கு சக்தி மொட்டை மாடியின் சுற்றுச்சுவரில் கையிரண்டையும் வைத்து வானத்தில் எதையோ வெறித்துப் பார்த்தபடி நின்றுக்கொண்டிருந்தது.சக்தி எந்த நிலையில் இருப்பான் என ஆதிராவால் ஊகிக்க முடிந்திருந்தது.மெல்ல சென்று அவன் அருகில் நின்றாள். அவள் வந்ததுக் கூட தெரியாமல் சக்தி அப்படியே நின்றுக் கொண்டிருந்தான்.இப்போது அவனிடம் என்ன பேசுவது என்ன சொல்லி சமாதானம் செய்வது என புரியாமல் நின்றுக்கொண்டிருந்தவள் அப்போது தான் கவனித்தாள் அவன் கண்களில் இருந்து கண்ணீர் வடிவதை. ஏனோ அவளால் அதைத் தாங்கிக் கொள்ள முனியவில்லை. மனம் பாரமாக இருந்தது.அவனை எப்படியாவது சமாதானம் செய்ய வேண்டும் எனத்தோன்றியது.
அவன் கரத்தின் மீது தன் கரத்தினை வைத்து அழுத்தினால் சக்தி அப்போது தான் மீண்டு வந்தான் ஆதிராவின் புறம் திரும்பினான். கண்கள் அழுது சிவந்து கண்ணங்கள் வீங்கியிருந்ததை கவனித்தாள்.மௌனத்தை உடைத்து ஆதிரா பேச ஆரம்பித்தாள்.
எந்த அம்மாவுக்கும் தன்னோட பிள்ளை அழுதா பிடிக்காது ரொம்ப கஷ்டமாதான் இருக்கும். நீ அம்மாவ கஷ்டப்படுத்தனும்னு நினைக்கிறியா சக்தி என்றாள் லேசாக.
சக்தி வெகு விரைவாக கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அழுகையை கட்டுப்படுத்தினான்.
அந்த தருணத்தில் ஆதிரா சக்தியை குழந்தையாகவே பார்த்தாள்.
ஒரு வித தாய்மை உணர்வுடன்
அவங்க உடல் மட்டும் தான் இங்க இல்ல மனதளவில் இங்கதான் இருக்காங்க.இதோ இப்பக் கூட இங்கதான் இருப்பாங்க.நீ அழறத பார்த்து அவங்களும் அழுதுட்டுதான் இருப்பாங்க.அவங்க சந்தோஷமெல்லாம் உன்னோட சந்தோஷம், சிரிப்புல மட்டும் தான் நீ அழறதுல இல்ல. இறப்புங்கறது உடல்ல இருந்து உயிர் பிரியறது மட்டும் தான் அந்த உயிர் எங்கையும் போகாது அவங்களுக்கு புடிச்சவங்கள சுத்தி தான் இருக்கும். நீ சந்தோஷமா இருக்கும் போது அம்மாவோட மனசு உன்ன சுத்தி வரத உணருவ பாரு என்று அவன் நோகாமல் பேசி முடித்தாள்.
அவளின் வார்த்தைகளெல்லாம் அவன் மனதில் பதிந்தாலும் மௌனமாகவே இருந்தான்.
அவன் முக அமைதியை கண்டவள் சற்று நிம்மதி அடைந்தாள்.இந்த தருணத்திலிருந்து அவனுக்கு உருதுணையாக இருக்க விரும்பினாள் ஒரு தோழியாக.
அவனை கீழே அறைக்கு அழைத்து வந்தவள் பெட்டில் படுக்கவைத்து போர்வையை போர்த்திவிட்டு அவன் தலையை மெல்ல வருடிவிட்டவள் எதையும் யோசிக்காமல் தூங்கு என கூறி பின் சோபாவில் படுத்துக்கொண்டாள்.
தூக்கமே வராமல் புரண்டு படுத்தவளுக்கு செல்வியின் கடிதமும் அவரது நினைவும் வந்தது.ஏனோ அவள் மனம் அவரை ஒரு முறையாவது பார்க்கமாட்டோமா என ஏங்கியது.
அவர் எழுதிய கடிதத்தை படித்த எனக்கே அவரை பார்க்கவேண்டும் என தோனுதே சின்ன வயசுலருந்து அவர் அருகில் இருந்தவனுக்கு எப்படி இருக்கும். இவனை நாம் தான் தேற்ற வேண்டும் என உறுதி மொழி எடுத்துக்கொண்டாள்.