7

12.8K 356 39
                                    

ஆதிராவின் புறம் திரும்பிய மதன்.,.,

"உனக்கு ஒன்னு தெரியுமா உங்க வீட்ல நீ எவன்கூடயோ ஓடிப் போய்டனு நம்பிட்டாங்க. உன்ன தூக்குன எனக்கு அது கஷ்டமா என்ன ஒரே ஒரு போன் கால் தான் நம்பிட்டாங்க கல்யாணமும் நின்றுச்சு. உன்ன உங்க வீட்லையும் சேத்துக்க மாட்டாங்க ஒரு வேல உன்ன சேத்துக்கிட்டாலும் கல்யாணத்துக்கு முதல் நாள் ஓடிப்போன பொண்ணுனு எவன் உன்ன கட்டிப்பான் ஒரு வேல உன்ன ஒரு கிறுக்கன் கட்டிக்கிட்டாலும் நீ சந்தோஷமா இருந்துருவியா ஓடிப்போன நீ எவன் கூடயோ ஒரு நாள் இருந்துருக்க நீ போனமாறி தான் திரும்பி வந்தியானு ஒரு நாளாச்சுக் கேக்கமாட்டான் "...என தன் வாய்க்கு வந்தபடி பேச அதை கேட்டவள் மண்டியிட்டு அழ ஆரம்பித்தாள்.

"அழறியா அழு எனக்கு அதான் வேனும் நீ வாழ்க்கப் பூரா அழனும் அத நான் ரசிச்சு பாக்கனும் டி .என்ன வேண்டானு சொல்லி அசிங்கப்படுத்துனல்ல அனுபவிடி"...என்றவன் உரக்க சிரிக்க..

பளார்...சக்தி மதனை அறைந்துவிட்டான்.

"என்ன ஏன்டா அடிக்குற "...என்ற மதனை எரித்துவிடுவதுப் போல் முறைத்தவன்...

"நீ பன்ன காரியத்துக்கு உன்ன கொன்னுப்போட்டாலும் தப்பில்லடா"...

" நான் உன் பிரண்டு அவ உன்
பிரண்ட அவமானபடுத்துனவ அவளுக்குப்போய் சப்போட் பன்ற"...

"ச்சீ வாயமூடு உன்ன போய் என் ப்பிரண்டா நினைச்சேன் பாரு என்ன சொல்லனும். உனக்கு பொண்ணுங்கனா அவ்ளோ இளக்காரமா போச்சா?... உன்னால அந்த பொண்ணு வாழ்க்கைய இழந்துட்டு நிக்கிறா. ஒழுங்கா என் கூடவா நாம போய் அவங்க வீட்ல நடந்தத சொல்லி மன்னிப்பு கேட்டுட்டு வரலாம்"...

"ஹே என்ன விளையாட்றியா அப்றம் எல்லாம் வேஸ்ட்டா போயிடும் "...என கூறியபடி மதன் அங்கிருந்து நகர முயற்சிக்க...

அவனை தடுத்து நிறத்திய சக்தி ,, "நீ ரொம்ப தப்பு பன்ற மதன் நான் சொல்றத கேளு"...

"நீ சொல்றத கேக்கனுமா யாருடா நீ?.. இப்ப தான சொன்ன நான் உன் பிரண்டு இல்லனு அப்றம் எப்படி நீ சொல்றத கேக்க முடியும்.என்றவன் நகர முயற்சிக்க ...

இதய திருடா Where stories live. Discover now