இறுகிப் போய் அமர்ந்திருந்தவன் ரிஷி குட்டியின் தீண்டலில் தளர்ந்தான்.
"உன் கேர்ள் பிரண்டுகிட்ட கோவிச்சுட்டு வந்துட்டியா".... என அவன் மீண்டும் கேள்வி எழுப்ப சக்தி ஆமாம் என்பதைப் போல் தலையசைத்தான்.
ரிஷி மேலும் அடுத்தடுத்த கேள்விகளைத் தொடுக்க சக்தி அதற்கு பதிலளித்துக் கொண்டிருந்தான்.
பின் ரிஷி விளையாடச் சென்று விட சக்தி அங்கேயே அமரந்திருக்க போன் ரிங் ஆனது.
திரையில் ஆதிரா என வர அதை எடுக்காமல் சைலன்ட் மோடில் போட்டான்.
வீடு திரும்பியவனுக்கு ஆதிராவின் மீதிருந்த கோபம் சற்றும் குறையவில்லை.
அங்கு அவள் சோபாவின் மேல் காலை குறுக்கி அதை அனைத்தவாறு அமர்ந்திருந்தாள்.
அவன் சென்றப்பின் அழுது ஓய்ந்தவள் என்ன செய்தோம் என இவ்வளவு கோவப்படுகிறான் என குழம்பிக் கொண்டிருந்தாள்.அதிலும் அவன் "டோன்ட் க்ராஸ் யுவர் லிமிட்ஸ் "...என முகத்தில் அடித்தார் போல் பேசியது அவளுக்கு கஷ்டமாக இருந்தது.அவனுக்கு பாரமாக இருந்து தொல்லை கொடுக்கிறோமெனத் தோன்றியது.
பலவாறாக யோசித்துக் கொண்டிருந்தவள் அவன் திரும்பி வராததால் சோபாவில் அமர்ந்துக் காத்துக் கொண்டிருந்தாள்.பலமுறை கால் செய்தும் அவன் போனை எடுக்கவில்லை.
கதவு திறக்கும் சத்தம் கேட்டு எழுந்து நின்றவள் விரு விரு வென அறையினுள் நுழைய போனவனிடம்"சக்தி சாப்பிட்டுட்டு போ"... என்றாள் சற்று தயங்கிய குரலில்.
அவளது முகம் பாராமல் "எனக்கு வேண்டாம் "...ஒற்றை பதிலளித்துவிட்டு அறையினுள் நுழைந்துக் கொண்டான்.
மீண்டும் கண்களில் நீர் தேங்க நின்றிருந்தவள் தானும் உண்ணாமல் படுத்துக் கொண்டாள்.
விடிந்து எழுந்தவன் ஆதிராவைப் பார்க்க அவள் தூங்கிக் கொண்டிருந்தாள்.
எப்பொழுதும் அவன் எழும் முன் எழுந்து தன் வேலைகளை தொடர்பவள் இன்று எழவில்லை.
YOU ARE READING
இதய திருடா
Romanceஎதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்