❤️அமரனின்🔱சித்ராம்பிக்கை❤️
💕பாகம் 32
டாக்டர் - சித்ரா யாருடைய குழந்தையை வயிற்றில் சுமந்தாலோ அந்த உயிருக்கு சொந்தமான தம்பதிகள் பிள்ளையை திரும்ப கேட்கிறார்கள்......
அமரன் - 🙄🙄🙄
என்று டாக்டர் சொன்னதும் அமரனின் தலையில் இடி விழுந்ததைப் போல இருக்க.....
அமரன் - என்ன டாக்டர் சொல்றிங்க அது எப்படி..
டாக்டர் - அது ஒரு பெரிய கதை அமரன், என்னால உங்ககிட்ட போன்ல பேச முடியாது, நீங்க அதனால சித்ராகிட்ட விஷயத்தை சொல்லி அவளை இங்க அழைச்சிட்டு வாங்க, நான் அவளை நேர்ல பார்த்து பேசுறேன்
அமரன் - சரி டாக்டர் நான் இப்போவே கிளம்பி வரேன்
டாக்டர் - இல்ல இல்ல இப்போ வேணா, நீங்க நாளைக்கு சித்ராவை அழைச்சிகிட்டு வாங்க, நான் என் தம்பி கிளினிக்ல தான் இருப்பேன்
என்று சொன்ன dr.கைபேசி அணைப்பை துண்டிக்க..அமரனின் இதயம் இயல்புக்கு மாறாக துடிக்க.. அதே சமயம் பக்கத்து அறையில் இருந்து பிள்ளை அழும் சத்தம் கேட்டு அமரன் அந்த அறைக்குள் ஓடி போனவன் குழந்தையை தன் மார்போடு அணைத்துக்கொண்டு
அமரன் - இல்ல பாப்பா, நீங்க அழாதீங்க, நான் உங்கள யார்கிட்டயும் தர மாட்டேன், உங்கள நான் தரவே மாட்டேன்
என்று அமரன் பேசும் சத்தம் கேட்டு சித்ரா சமையல் அறையில் இருந்து இவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தவள்
சித்ரா - ஏய் அமரா என்னாச்சு உனக்கு.. டேய் உன்னை தான் டா, என்னடா ஆச்சு
அமரன் - ஆங்.....அது.....அது ஒண்ணுமில்ல
சித்ரா - சரி சரி பாப்பா அழுவுறா பாரு என்கிட்ட குடு...
அமரன் - ம் இந்தா
சித்ரா - தா
அமரன் சித்ராவின் கரங்களில் பிள்ளையை தந்தவன் குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு...
அமரன் - நான் யாருக்கும் உன்னை தரவே மாட்டேன்
என்று சொன்னதும் சித்ரா அமரனின் தலையில் குட்டு வைத்தவள் அவனை பார்த்து....
என்ன தர மாட்ட..டேய் நீ என்ன லூசா நீ தரமாட்டினா என்ன... நீயே பால் தர போறியா
என்று சித்ரா கேட்டதும் அமரன் சட்டென்று சூழநியையை புரிந்து கொண்டவன் கண்ணாடியை கழட்டியபடி அந்த அறையில் இருந்து வெளியே செல்ல பார்க்க
சித்ரா - அமரா கொஞ்சம் நில்லு
அமரன்- ம்
சித்ரா - யாரு போன்ல
அமரன் - என்ன.....என்ன போன்
சித்ரா -- இல்ல உனக்கு எதோ போன் வந்த மாதிரி இருந்துச்சு....யாரு போன்ல
அமரன் - அது ....ஆங் அது என் வேலையில இருந்து பண்ணாங்க
சித்ரா - ஓ
அமரன் - சரி நீ பிள்ளைக்கு பசியாத்து
சித்ரா - அமரா
அமரன் - ம்
சித்ரா - வேற ஒன்னும் பிரச்சனை இல்லையே
அமரன் - ஆங்.... இல்ல இல்ல அதெல்லாம் இல்ல.... நீ அழகியை பாரு
என்று சொன்ன அமரன் அவன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொள்ள.. சித்ராவிற்கு அமரனின் நடத்தையில் மாற்றம் தெரிந்தாலும் அவள் எதையும் பெரிது படுத்தாமல் இருக்க.... மறுநாள் காலை பொழுது புலரும் முன்பு அமரன் குளித்து முடித்து வெளியே கிளம்பியவனை பார்த்த சித்ரா...
என்ன அமரா காலையிலேயே கிளம்பிட்ட எதாவது முக்கியமான வேலையா..??
என்று சித்ரா அவள் பிள்ளையை மார்பில் சுமந்து கொண்டு அமரனை கேள்வி கேட்க....அமரன் விழித்தவன் சற்று இயல்பான முகபாவனையில்
அமரன் - ஆங் ஆமா சித்ரா இன்னைக்கு பிரான்ஸ்ல இருந்து எங்க கம்பெனி ஆளுங்க வராங்க....அதான் அவுங்கள ரிஸிவ் பண்ணிட்டு அப்படியே அவுங்கள ஹோட்டல்ல தங்க வச்சிட்டு ப்ராஜெக்ட் விஷயமா பேசிட்டு வரலாம்ன்னு கிளம்புறேன்...
சித்ரா - ஓ சரி சரி....நீ இரு நான் டிபன் ரெடி பண்றேன்
அமரன் - நோ நோ நான் வெளிய சாப்பிடுகிறேன்...
சித்ரா - வரக்காபியாவது குடி
அமரன் - இல்ல வேணா
சித்ரா - நீ மட்டும் தான் போறியா...குரேஷி அண்ணா வரலையா
அமரன் - இல்ல அவனும் தான் வரான்...அதோ கிளப்பிட்டான் பாரு
குரேஷி - போகலாமா மச்சான்
சித்ரா - அண்ணா நீங்களும் ஏதும் சாப்பிடலையா..
குரேஷி - இல்ல மா நாங்க வெளிய பாத்துக்குறோம்..
சித்ரா - ம் சரி..
அமரன் - சித்ரா பாப்பாவை பாத்துக்கோ
சித்ரா - ம்... நீ பாத்து போயிட்டு வா
அமரன் - ம் ......டேய் போய் காரை எடு
என்று சொன்னவன் பிள்ளையின் நெற்றியில் முத்தமிட்டபடி வெளியே செல்ல....குரேஷியும் இவனும் பயணித்த கார் அந்த தெரு முனையை தாண்டியதும்
அமரன் - டேய் ரைட்ல திரும்பு
குரேஷி - மச்சான் ஏர்போர்ட் left ல இருக்கு டா
அமரன் - நம்ம ஏர்போர்ட் க்கு போகல
குரேஷி - பின்ன
அமரன் - சித்ராவை பிரசவம் பார்த்த டாக்டர் வீட்டுக்கு போகிறோம்
குரேஷி - அங்க ஏன் டா போகணும்
அமரன் - சித்ரா யாரோட பிள்ளைக்கு வாடகை தாயாக இருந்தாளோ..அந்த நபர் மீண்டும் பிள்ளையை கேக்குறாங்களாம்
குரேஷி - என்னடா சொல்ற
அமரன் - ஆமா டா.. நேத்து நைட்டு தான் அந்த டாக்டர் போன் பண்ணி விஷயத்தை சொன்னாங்க
குரேஷி - அவ என்ன லூசா
அமரன் - அவுங்க சித்ராவையும் என்னுடன் அழைச்சிட்டு வர சொன்னாங்க... பட் நான் தான் முதல்ல நம்ம போய் பேசி பாக்கலாம்ன்னு வந்தேன்
குரேஷி - என்னடா இது இப்படி எல்லாம் நடக்குமா
அமரன் - ம் இப்போ இதெல்லாம் பேச நேரம் இல்ல... நீ முதல்ல நான் சொல்ற வழியில காரை விரட்டு
என்று அமரன் சொல்ல....குரேஷி சில நிமிடங்களில் அவன் விரட்டிய காரை அமரன் சொன்ன முகவரியில் கொண்டு போய் நிறுத்த...
அமரன் - நீயும் வா
என்று அமரன் சொல்ல.... இவர்கள் இருவரும் உள்ளே செல்ல.. வாசலில் வாட்ச் man இடம் இவர்கள் வந்ததை தெரியப்படுத்த சொல்லி அமரன் சொன்ன அடுத்த சில நொடிகளில் டாக்டரின் அனுமதியுடன் இவர்கள் இருவரும் வீட்டிற்குள் போக
டாக்டர் - வாங்க mr அமரன் உள்ள வாங்க
அமரன் - ம்
டாக்டர் - சித்ரா வரலையா
அமரன் - இல்ல டாக்டர் actually சித்ராவிற்கு நீங்க நேத்து call பண்ணது தெரியாது
டாக்டர் - ஓ
அமரன் - என்ன ப்ரோப்லேம் டாக்டர்... யாரு அவுங்க...அவுங்க ஏன் என் அம்மாவை கேக்கணும்
டாக்டர் - என்ன உங்க அம்மாவா
அமரன் - ஆமா டாக்டர் சித்ரா பெத்து எடுத்தது என்னோட அம்மாவை.. என் அம்மாவை நான் யார்கிட்டயும் தர மாட்டேன்
டாக்டர் - கூல் அமரன்
குரேஷி - மச்சான் இரு டா ஏன் உணர்ச்சிவச படுற
டாக்டர் - listen அமரன் actually சித்ராவுக்கு கல்யாணம் ஆகாம i mean அவ கன்னித்தாயா இந்த பிள்ளையை சுமக்கவே சட்டத்துல இடமில்லை... அப்படி இருந்தும் அவளை இந்த விஷயத்துல நான் இழுத்துவிட காரணம் அந்த நிமிடம் இருந்த சூழ்நிலை தான்... அன்னைக்கு அமராவதிக்கு ஆபரேஷன் பண்ண நமக்கு பணம் தேவை பட்டது..நாங்களும் எத்தனையோ உதவி பண்ற இடத்தை நாடினோம்..அங்கெல்லாம் சித்ராவை அனுபவிக்க தான் ஆசை பட்டாங்களே தவிர யாரும் உதவிக்கு வரல..ஒரு வேள கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு ஆயிரத்துல ஒரு மருத்துவர் இருக்கலாம்.. ஆனா அந்த சூழ்நிலையில அப்படி ஒரு மருத்துவர் எங்க கண்ணனுக்கு தென்படல.. வேற சூழ்நிலை இல்லாத காரணத்தால் தான் கன்னி தாயாக இருந்து சித்ரா அவள் குழந்தை அமராவதியை காப்பாற்றினா .. சித்ரா எந்த தம்பதியின் உயிரை தன் கருவில் சுமந்தாளோ அவுங்களும் சித்ராவுக்கு தேவையான பணத்தை தந்தாங்க.. ஆனா நாங்க சித்ராவின் கருவில் உயிரை செலுத்திய கொஞ்ச நாளிலேயே அந்த தம்பதி கருவுற்ற காரணத்தால் சித்ரா வயத்துல வளர்ந்த பிள்ளையை அவுங்க வேணான்னு சொல்லிட்டாங்க.. பட் நான் சித்ராகிட்ட இந்த விஷயம் ஏதும் சொல்லாமலையே அவள் வயத்துல வளருற குழந்தையை அபாட் பண்ண சொன்னேன்...ஆனா அவ ஒரு உயிரை காப்பாற்றிய திருவேன்னு போராடி இதோ இப்போ அந்த பிள்ளையை பெற்று எடுத்து இருக்கிறாள்....ஆனா இப்போ
அமரன் - இப்போ என்ன ப்ரொபெல்லம்
டாக்டர் - அந்த couples மறுபடியும் அவுங்க பிள்ளையை கேக்குறாங்க
குரேஷி - ஏன் அவுங்க தான் மாசமா இருக்காங்க இல்ல...இப்ப ஏன் எங்க பிள்ளையை கேக்குறாங்க
டாக்டர் - இல்ல...ஒரு accident ல அவுங்க கரு கலைந்துடுது..அது மட்டும் இல்லாம இனியும் ஒரு பிள்ளையை தாங்கும் சக்தி அவுங்களுக்கு இல்லைனு டாக்டர் சொல்லிட்டாங்க
அமரன் - சரி அதுக்கு நாங்க என்ன பண்ணனும்
டாக்டர் - அவுங்க நேத்து தான் எனக்கு கால் பண்ணாங்க..அவுங்க பிள்ளையை பற்றி என்கிட்ட விவரம் கேட்டாங்க.. அப்போதான் என் குழந்தையை எனக்கே திருப்பிக் கொடுத்துருங்கன்னு என்கிட்ட கெஞ்சி கேட்டாங்க.. நான் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.. இன்னைக்கு அவுங்களுக்கு கால் பண்றேன்னு சொல்லிட்டு தான் உங்களுக்கு நேத்து நைட்டு போன் பண்ணி விஷயத்தை சொன்னேன்..
அமரன் - ஏன் டாக்டர் நான் உங்ககிட்ட ஒன்னு கேட்டா நீங்க மனசாட்சியோட பதில் சொல்லுவிங்களா
டாக்டர் - என்ன கேளுங்க
அமரன் - தன்னோட உயிரை இன்னொரு பெண் சுமந்து பெத்து தர போகிறாள் என்று தெரிந்தும் இவர்கள் கருவுற்ற ஒரே காரணத்தால் தன் பிள்ளையை பற்றி கவலை இல்லாமல் அந்த பிள்ளையை கலைச்சிட சொல்லுங்கன்னு சொன்ன அந்த தம்பதிங்க நல்லவுங்களா......
டாக்டர் -🙄
அமரன் - இல்ல யாரோட பிள்ளையை நாம் சுமக்கிறோம் என்று தெரியாமல் ஒரு உசுரை சுமந்து அந்த பிள்ளையை பெற்று எடுக்க வேணும்னேன்று எண்ணிய என் சித்ரா நல்லவளா..??
டாக்டர் - ஐயோ அமரன் சித்ரா மாதிரி ஒரு பெண் எல்லாம் இனி பிறந்தால் தான் உண்டு... அவளோட தியாகம் எல்லாம் ரொம்ப பெருசு..
அமரன் - அப்படி நினைக்கிற நீங்க இந்த விஷயத்துல சித்ராவுக்கு பாவம் தான் பண்ணி இருக்கீங்க..
டாக்டர் - நானா..நான் என்ன பண்ணேன்
அமரன் - முதல்ல நீங்க கன்னித்தாயா சித்ராவை தேர்ந்து எடுத்தது தப்பு... அதன் பிறகு யாருக்காக அவள் பிள்ளையை சுமந்தாளோ அவுங்களுக்கு வேற பிள்ளை பிறக்க போகுதுனு தெரிந்ததும் அவுங்க சொன்னாங்கன்னு ஒரு டாக்டராக இருக்கும் நீங்க,சித்ரா கருவை கலைக்க சொல்லி அவளுக்கு மாத்திரை தந்தது அதை விட பெரிய தப்பு......
டாக்டர் - 🙄
அமரன் - இது எல்லாத்தையும் விட இப்போ நீங்க சித்ரா உயிர் தந்து பெத்து எடுத்த பிள்ளையை கருவிலே சாகட்டும்னு நினைக்கிற ரெண்டு பேர்கிட்ட தூக்கி கொடுக்கணும்னு நினைக்கிறது அதை விட பெரிய தப்பு...
டாக்டர் - அமரன்
அமரன் - எஸ் டாக்டர்..நீங்க தான் தப்பு.. இந்த விஷயத்தை நீங்க தான் இவ்வளவு தூரம் கொண்டு வந்து விட்டுருக்கீங்க..
டாக்டர் - இப்போ நான் என்ன பண்ணனும்னு சொல்றிங்க
அமரன் - அந்த தம்பதிங்க வந்தா நீங்க சொன்னதுமே சித்ரா பிள்ளையை கருவில் கலைச்சிட்டான்னு சொல்லி அவுங்களோட உயிரை வேற ஒரு வாடகை தாயை ஏற்பாடு செய்து அடுத்த பத்து மாதத்தில் பெற்று தர முயற்சி பண்ணுங்க......அதை விட்டுட்டு எங்க அம்மா...அதாவது சித்ரா பெற்ற குழந்தையை அவன் கேட்டான் இவன் கேட்டான்னு என்கிட்ட வந்து கேட்டிங்கனா நான் சட்டப்படி உங்களை சந்திக்க நேரிடும்..
டாக்டர் - 🙄
அமரன் - அப்புறம் நீங்க உங்க அப்பாவுக்கு மட்டும் தான் daughter ஆக இருக்க முடியும் சொல்லிட்டேன்..
டாக்டர் -🙄
அமரன் - டேய் குரேஷி வாடா போகலாம்
என்று சொன்ன அமரன் படபடவென்று பொரிந்து தள்ளியபடி அந்த இடத்தை விட்டு வெளியே வர..
குரேஷி - டேய் என்னடா நீ ஏன் இப்படி கோவப்படுற..
அமரன் - இது கோவமெல்லாம் இல்ல.. இது தான் நியாயம்...இப்போ சித்ரா பெற்ற பிள்ளையை கேக்குற அந்த தம்பதி கௌவரவத்துக்காக அவுங்களை அம்மா அப்பான்னு கூப்பிட ஒரு பிள்ளை வேணும்னு நினைக்கிறாங்களே தவிர..அந்த பிள்ளை மேல பாசத்தை எல்லாம் செலுத்த மாட்டாங்க...ஆனா சித்ரா அப்படி இல்லைடா.. அவ வாழற அந்த வறுமை வாழ்க்கையிலும் தன் பிள்ளைகளை மகாராணி போல வாழ வைக்கணும்னு நினைக்கிறா..அதனால் அழகிய சாமந்தி சித்ராகிட்ட தான் வளரனும்
குரேஷி - அப்போ நீ என்ன பண்ண போற
அமரன் - ம் நான் என் அம்மாகிட்ட வாழற போறேன்..
குரேஷி - அடப்பாவி
அமரன் - ஏன் மச்சான் பேசாம நான், சித்ரா, அமராவதி, அப்புறம் எங்க அம்மான்னு எல்லோரும் பிரான்ஸ் க்கு போயிட்டா எப்படி இருக்கும்..
குரேஷி - ஏன் டா இத்தனை பேரை கூப்பிட்டுட்டு போற... அப்போ என்னை கூப்பிட மாட்டியா
அமரன் - சரி சரி நீயும் வா போகலாம்
குரேஷி - நீ சொல்றது நல்லா தான் இருக்கு.. ஆனா இதுக்கு சித்ரா சம்மதிக்கணுமே
அமரன் - அவ ஒரு இம்சை டா... அவளை என்ன பண்ணலாம்
குரேஷி - அவளை எல்லாம் உன்னால ஒன்னும் பண்ண முடியாது
அமரன் - ம் பேசாம அவ கழுத்துல தாலி கட்டிடவா..
குரேஷி - உன்னை போட்டு தள்ளிடுவா பரவியில்லையா
அமரன் - ம் ஆமா யோசிக்க வேண்டிய விஷயம் தான்
குரேஷி - சரி சரி வா போய்க்கிட்டே யோசிக்கலாம்
அமரன் - டேய் எதுக்கும் இந்த டாக்டர் மேல ஒரு கேஸ் போட்டு விடுவோமா
குரேஷி - டேய் ஏன் டா அதெல்லாம் வேணா.. அதான் நீ இவ்வளவு வசனம் பேசி இருக்க இல்ல..கண்டிப்பா யோசிப்பாங்க வா போகலாம் வா..
என்று குரேஷி சொல்ல...அமரனும் குரேஷியும் மீண்டும் இவர்கள் வீட்டிற்கு செல்ல... சித்ரா இவர்களுக்குள் ஏதோ நடந்திருக்கிறது என்று யூகித்தவள் அமரனையே முறைத்தப்படி நின்று இருக்க
அமரன் - என்ன வாசல்லயே நிக்கிற,பாப்பாங்க என்ன பண்றாங்க..
சித்ரா - பாப்பா தூங்குறா...அமராவதி விளையாடுறா... அப்பா பக்கத்துல எங்கயோ கடைக்கு போய் இருக்காங்க... போதுமா
அமரன் - ம் நீயேன் வாசல்ல உக்காந்துகிட்டு இருக்க..
சித்ரா - உங்களுக்காக தான் காத்துகிட்டு இருக்கேன்
குரேஷி - என்னமா கடைக்கு எங்கேயாவது போகணுமா
சித்ரா - அதெல்லாம் இல்ல அண்ண.. நீங்க ரெண்டு பேரும் இப்ப எங்க போயிட்டு வரீங்க
குரேஷி - நாங்க ரெண்டு பேரும்.... அது..... ஆங் இதோ அமரன் சொல்லுவான்..
அமரன் - என்ன பிரச்சனை சித்ரா உனக்கு
சித்ரா - நீங்க எங்க போயிட்டு வரீங்கன்னு கேட்டேன்
அமரன் - சொன்னேனே...வெளிநாட்டில் இருந்து ஆளுங்க வந்தாங்க அவங்கள போய் பாத்துட்டு வரோம்
சித்ரா - ஓ....ஒரு மணி நேரத்துல நீ வேலையில் இருந்து வந்தவங்கள பாத்துட்டு...அவங்கள கொண்டு போயி ஹோட்டல்ல விட்டுட்டு..அவங்களுக்கு தேவையானதெல்லாம் செஞ்சிட்டு வந்துட்டியா
அமரன் - ஏய் நீ என்ன வக்கீல் மாதிரி கேள்வி கேட்டுட்டு இருக்க..இப்ப என்ன பிரச்சனை உனக்கு..
சித்ரா - இல்ல நீ ஏதோ என்கிட்ட மறைக்கிற...நீ எங்க போயிட்டு வந்த இப்ப.. என்கிட்ட சொல்லியே ஆகணும்
அமரன் - சித்ரா எனக்கு வேலையில 1008 பிரச்சனை இருக்கும்..அதெல்லாம் உன்கிட்ட சொல்லனும்னு அவசியமில்லை புரியுதா.. போய் சாப்பாடு எடுத்து வை
சித்ரா - உனக்கு சாப்பாடும் கிடையாது ஒன்னும் கிடையாது....ஏன் இனி நானும் இங்க சாப்பிட மாட்டேன்..இந்த வீட்ல இன்னைக்கு எல்லாரும் பட்டினி இருக்கட்டும்
அமரன் - என்ன நீ சின்ன குழந்தை மாதிரி விளையாடிகிட்டு இருக்க..சரி இப்ப என்ன எனக்கு சாப்பாடு இல்ல அவ்வளவு தானே.. குரேஷி வா நம்ம ரெண்டு பேரும் பட்டினியா இருக்கலாம்
குரேஷி - அடேய்.. எலி காயறது நியாயம், எலிப்புழுக்கை எதுக்குடா காயணும்...
அமரன் - அப்போ நீ எலிப்புழுக்கையா..
சித்ரா - 😡
குரேஷு - அம்மா சித்ரா பசி உயிரை எடுக்குது மா சாப்பாடு போடுமா..
சித்ரா - இல்ல...இன்னைக்கி நீங்க ரெண்டு பேரும் மட்டும் இல்ல.. இந்த வீட்ல இருக்குற எல்லாரும் பட்டினி தான் .
அமரன் -🙄
சித்ரா - டேய் உன்னுடைய அம்மாவையும் சேர்த்து தான் சொல்றேன்..
அமரன் - என்ன சித்ரா... இப்ப உனக்கு என்ன தெரியனும்
சித்ரா - நீ எங்க போயிட்டு வந்தேன்னு எனக்கு தெரியணும்..
அமரன் - உண்மையாவே வேலை விஷயமா தான் போயிட்டு வந்தேன
சித்ரா - உன்னை நம்பலாமா
அமரன் - நீ இந்த ஒரு விஷயத்துலயாவது என்னை நம்பு
சித்ரா - சரி வா வந்து சாப்பிடு,
அமரன் - இப்பதான் சாப்பாடு எதுவும் இல்லைன்னு சொன்ன
சித்ரா - நான் உன்ன சாப்பிட சொன்னேன்.. அண்ண நீங்களும் வாங்க
என்று சித்ரா சொன்னதும் அமரனும் குரேஷியும் சித்ராவுடன் சேர்ந்து காலை உணவை சாப்பிட... சில நிமிடங்கள் கடந்த நிலையில் அமரன் குழந்தை இருக்கும் அறைக்குள் சென்றவன் குழந்தையின் கரங்களைப் பிடித்து தன் முகத்தில் பதித்த படி குழந்தையின் நெற்றியில் கை வைத்தவன்..
அமரன் - அம்மா...உங்கள என்கிட்ட இருந்து யாராலயும் பிரிக்க முடியாது...நான் வாழும் வரை என் உயிர் முழுதும் உங்களுக்கு மட்டும் தான் சொந்தம்..என்னுடைய எதிர்கால வாழ்க்கையின் மொத்த உருவமும் நீங்க மட்டும் தான்...உங்க ஒருத்தவங்களுக்காக மட்டும் தான் இனி நான் வாழனும்னே ஆசைப்படுறேன்
என்று தன் வாய்க்கு வந்தபடி குழந்தையை பார்த்து புலம்பிக் கொண்டு இருந்தவனை பார்த்தப்படி சித்ரா அறைக்குள் வந்து கதவை தாளிட..
அமரன் - இப்ப எதுக்கு கதவை சாத்துற
சித்ரா - ம் ஒருத்தவனை வெலுக்கணும் அதுக்காக...
அமரன் - என்ன அடிக்க போறியா... யார அடிக்க போற
சித்ரா - உன்ன தான்
அமரன் - ஏன் நான் என்ன பண்ணேன்
சித்ரா - இப்ப நீ குழந்தைகிட்ட என்ன சொல்லிக்கிட்டு இருந்த..
அமரன் - நானும் என் அம்மாவும் 1008 பேசுவோம்...உனக்கு என்ன வந்துச்சு
சித்ரா - இல்ல அமரா... நீ ஏதோ என்கிட்ட மறைக்கிற... நேத்து நைட்டு உனக்கு ஒரு போன் வந்துச்சு..அப்புறம் காலையில நீயும் அண்ணனும் எங்கேயோ வெளியே போனீங்க.. ஆனா நேத்துல இருந்தே நீ குழந்தைகிட்ட பேசுற விதமே சரியில்ல.. ஏன் என்கிட்டயும் சரியா பேச மாட்ற..உன் மனசுல நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க
அமரன் - என்ன சித்ரா நீ.. உன்கிட்ட நானே பேசினாலும் உனக்கு அது பிடிக்காது.. இப்போ உன்கிட்ட நான் சரியா பேசறது இல்லன்னு ஒரு குறையா சொல்ற
சித்ரா - குறையாவும் சொல்லல நிறையாவும் சொல்லல... நீ பேசுறது ரெண்டு வார்த்தையா இருந்தாலும் அதுல உண்மை இல்ல என்று தான் சொல்கிறேன்
அமரன் - நீ இவ்ளோ கவலை படுற அளவுக்கு ஒண்ணுமே நடக்கல...நான் வேலை விஷயமா தான் வெளியே போயிட்டு வந்தேன்...சரி சரி கதவைத் திற...சத்தம் போடாதே குழந்தை எழுந்திட போறா
என்று சொன்னபடி அமரன் அந்த அறையில் இருந்து வெளியே செல்ல பார்த்தவனின் கரங்களை பிடித்த சித்ரா..
சித்ரா - நில்லு அமரா... நான் கேக்குறதுக்கு பதில் சொல்லிட்டு போ
அமரன் - ஏய் என்ன நீ கை எல்லாம் பிடிச்சு கலாட்டா பண்ற....விடு விடு நான் வேலைக்கு போகணும்...அப்புறம் சொல்ல மறந்துட்டேன்...குளிர் நேரம் வருது இன்னைக்கி சாயங்காலம் நான் கடைக்கு போயிட்டு குழந்தைக்கு ஷோட்டர் இதெல்லாம் வாங்க போறேன்...அமராவதி பாப்பாவோட சைஸ் சொல்லு..அப்புறம் உனக்கு ஏதாவது வாங்கிட்டு வரட்டா
சித்ரா - நீ எனக்கு எல்லாம் ஒன்னும் கிழிக்க தேவையில்ல.... அதே மாதிரி என் குழந்தைகள் இரண்டு பேருக்கும் என்ன தேவையோ அத எனக்கு வாங்கிக்க தெரியும்....உன்னோட வேலை என்னமோ நீ அதை மட்டும் பாரு புரியுதா
அமரன் - ஏய் எத்தனை தடவை சொல்லி இருக்கேன் ..சும்மா என் குழந்தை என் குழந்தைன்னு பேசாதன்னு அமராவதியும்...சரி அழகியும் சரி என்னோட பிள்ளைங்க புரியுதா...
சித்ரா - இதோடா...இது என்ன புது கதையா இருக்கு... அவங்க ரெண்டு பேரும் என்னோட மகளுங்க ...நீ வந்தோமா பார்த்தோமா கொஞ்ஜனுமான்னு போய்கிட்டே இருக்கணும்..சொந்தம் கொண்டாடுற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காத... போ போ முதல்ல இந்த ரூம விட்டு வெளியே போ
அமரன் சித்ராவை முறைக்க..சித்ரா திமிராக அமரனை பார்த்தவ..ள் குழந்தையின் அருகில் சென்று அமர்ந்தபடி குழந்தையை தூக்கித் தன் மடியில் வைத்தவள்
சித்ரா - பாப்பா....நம்ப சீக்கிரமா குடிசையில போய் தங்கிக்கலாம்.... இந்த வீட்ல பிரான்ஸ் கொசு தொல்லை தாங்கல..சும்மா சும்மா காதாண்ட வந்து நைன்னு கத்திகிட்டே இருக்கு....நமக்கு இந்த வாழ்க்கை எல்லாம் நிரந்தரமே இல்ல..நீ கடைசி வரைக்கும் அம்மா கூட தானே இருக்க போற...அதனால நீ, நான், அமராவதி பாப்பாவும் குடிசையிலேயே தங்கிக்கலாம் புரியுதா..நீ இந்த சொகுசு வாழ்க்கைக்கு எல்லாம் அடிமையாகிக்காத...அப்புறம் எதிர்காலம் ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கும்
அமரன் - ஏய் குழந்தைகிட்ட என்ன பேசிகிட்டு இருக்க....யார் சொன்னது உன்னை நான் குடிசைக்கு அனுப்ப போறேன்னு...நீ,நானு, அமராவதி, அழகி பாப்பா நாலு பேரும் கூடிய சீக்கிரம் பிரான்ஸ்க்கு போக போறோம் புரியுதா..
சித்ரா - இதோடா.. நீ என்ன ஒரு ஒரு நாளைக்கு ஒரு ஒரு கதை சொல்லிக்கிட்டு இருக்க....நீ பிரான்ஸ்க்கு போ.. நாங்க என்னத்துக்கு உன் கூட வரணும்
அமரன் - இங்க பாரு சித்ரா...சுத்தி வளச்சி எல்லாம் எனக்கு பேச தெரியல.. என்னால குழந்தையை பிரிந்து இருக்க முடியாது..அதனால குழந்தை கூட சேர்த்து உங்க ரெண்டு பேரையும் நான் என் கூடவே வெளிநாட்டுக்கு அழைச்சிட்டு போலாம்னு முடிவு பண்ணிட்டேன்
சித்ரா - நீ முடிவு பண்ணா போதுமா...உன்னுடைய முடிவுக்கு நான் சம்மதம் சொல்லணும்
அமரன் -🙄
சித்ரா - என்ன சொன்ன... நீ என்ன சொன்ன...குழந்தைக்காக என்னையும் அமராவதியையும் நீ அழைச்சிட்டு போவியா...அப்போ இந்த குழந்தை இல்லனா.. சொல்லு இந்த குழந்தை இல்லன்னா என்னடா பண்ணுவ
அமரன் கோபம் கொண்டு சித்ராவின் கழுத்தை பிடிக்க..சித்ரா கண்கள் கலங்கி அமரனை பார்க்க.. அமரன் கடும் கோபத்துடன்.
அமரன் - ஏய் என்ன கேட்ட....குழந்தை இல்லன்னா என்ன பண்ணுவனா.. அடுத்த தடவை உன் வாயிலிருந்து இந்த வார்த்தை வந்துச்சு தொலைச்சிடுவேன் உன்ன...குடு குழந்தையை...
என்று கத்தியபடி குழந்தையை தூக்கிக் கொண்டு அமரன் அவன் அறைக்குள் செல்ல.. சித்ரா கண்களில் கண்ணீருடன் கட்டிலில் அமர்ந்திருந்த நேரம் அமரனின் வீட்டு வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு சித்ரா கண்களை துடைத்துக்கொண்டு வாசல் கதவை திறக்க வாசலில் நின்றிருந்தது யாருன்னு...
Mr.SK lead தந்துட்டாரு....
SO இனிமே 7 to 8 parts இந்த AC stry முடியும் வரை என்னோட அடுத்த எந்த stry யும் upadate பண்ண முடியாது.....🙏மீண்டும் இதே கற்பனை கதையில் சந்திப்போம்..
urs SK
and 🔱