நள்ளிரவு 2 மணி.....
ஆளில்லா அந்த சாலையில் சீறி பாய்ந்து கொண்டு இருந்தது அந்த இன்னோவா கார்....😎
உள்ளே முழு போதையில் ஃபோன் பேசி கொண்டே போய் கொண்டு இருந்தான் அவன்...... கண்மண் தெரியாத வேகம்...அப்போது தான் அது நடந்தது......😨😨
எங்கிருந்து வந்ததோ அந்த லாரி.....படு வேகத்தில் இந்த காரை நோக்கி வந்தது....கண்ணிமைக்கும் நேரத்தில் காரை மோதி சர சரவென இழுத்து சென்றது அந்த லாரி...அடுத்த பத்தாவது நிமிடம் லாரிக்கு கீழே நொறுங்கி போய் கிடந்தது அந்த கார் 😨😨😨😰😰😰😰😰.....
விடிந்தது்.....அந்த இடம் கூட்டத்தால் நிரம்பி விட்டது....இறந்தவன் ஒரு scientist மகன்.....அவன் உடல் கூட கிடைக்கவில்லை... வழித்து அள்ளி பொட்டலம் போட்டு கொடுத்தனர்...அவன் தாய் அங்கேயே நெஞ்சை பிடித்து கொண்டு விழுந்தார்....😨😨😨😰😰😰...அவன் அப்பா scientist என்பதால் உடனே வர முடியவில்லை..😓😓😓
CENTRAL BUREAU OF INVESTIGATION....
எல்லாரும் வந்தாச்சா??... chief ஆனந்தன் கேட்டார்....
Yes..chief....
அவன் வந்தாச்சா???
யாரு chief??
அதான்யா.😐😐24 மணி நேரமும் என்னைய கடுபேத்துறத பத்தியே யோசிப்பானே அவன் தான்!!!😠😠
சார் அவரு இன்னும் வரல சார்...கேட்டா அதை விட முக்கியமான வேலைல இருக்காராம்..😕😕😕
சந்தோஷம் அவன் வரவே வேணாம்....நாம ஆரம்பிப்போம்....
இறந்து போனவன் கேஸ் காவல் துறையில் இருந்து சிபிஐ க்கு மாற்ற பட்டு இருந்தது....யார் அந்த லாரி டிரைவர்??என்ற விசாரணை...மேலும் அந்த லாரி எங்கிருந்து வந்தது??இது ஆக்சிடென்ட் தானா??இல்லை கொலையா???
அங்கு தீவிர பேச்சு வார்த்தை நடந்து...முடிவாக சீனியர் officer ராமநாதன் அதை கண்டுபிடிக்க நியமிக்க பட்டார்.....
என்ன ராம நாதன் சார்...ரொம்ப நாளைக்கு அப்புறம் case வந்துருக்கு??சந்தோஷமா??
இந்த தடவ இந்த கேசை சீக்கிரம் முடிச்சு அவனை விட நான் சீனியர் , நாதான் பெஸ்டுனு காட்டுறேன்..😏😏😐😐மீசையை முறுக்கினார் ராமநாதன்....
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
PRIME MINISTER OFFICE....
பிரதமர் காவல்துறை அதிகாரிகள் பெரிய பெரிய அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் இருந்தார் ....
பிரஸ்க்கு விஷயம் போக கூடாது....அரசாங்கம் இவளோ அலட்சியமானு பேசுவாங்க??
ஸ்பெஷல் ஆபீசர் போட்டு investigation ஸ்டார்ட் பண்ணிடீங்களா???
எல்லாம் ஓவர் சார்...ரொம்ப சீக்ரெட் தான்...சின்ன பையன் தான் ஆனா ரொம்ப திறமை ஆன பையன்....
நல்லது...அந்த உளவாளி யாருனு எவ்ளோ சீக்கிரம் கண்டு பிடிக்கிரோமோ அந்த அளவு நம்ம நாட்டுக்கு நல்லது👍👍
ரொம்ப முக்கியமான விஷயம்னா மட்டும் மீட் பண்ணுவோம் ....
அனைவரும் களைந்து சென்றனர்.....
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
விக்டர் இந்த தடவை நீ போறதுக்கு முன்னாடி உனக்கு நிச்சயம் பண்ணிட போறோம்....அவன் அம்மா அப்பா சொன்னதும் மனதுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது விக்டருக்கு...😍😍😍😍
எனக்கு ஓகே தான் அம்மா..ஆனா...ஏஞ்சல் இன்னும் படிக்கிறாள்...அதான் யோசிச்சேன்...,😕.
அதை பற்றி கவல படாத....நிச்சயம். தான் பண்றோம்...நான் போய் மலர் வீட்டுல பேசுறேன்..நிச்சய வேலைகளை ஆரம்பிக்கனும்......
விக்டர்....29 வயது இளைஞன்....பார்க்க நல்ல உடல் வாகு.....இஸ்ரோ ஆராய்ச்சியகத்தில் உதவி SCIENTIST ஆக பணி புரிகிறான்...விடுமுறைக்கு வந்துள்ளான்...
ஏஞ்சல்....அவன் வாழ்வின் ஏஞ்சல் கூட அவள் தான்....😍😍விக்டரின் அத்தை மகள்...பத்தாம் வகுப்பில் இருந்து காதலிக்கிறான்😍😕😕..ஆனால் அவளுக்கு தெரியாது....அவன் விருப்பம் அறிந்த அவன் பெற்றோரும் ஏஞ்சல் வீட்டில் கேட்க....இஸ்ரோ வில் பணிபுரியும் SCIENTIST க்கு எவன் பெண் தர மறுப்பான்??பேசி முடித்து இதோ நிச்சயம்.....
உன் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லிடு...விக்டர்....
அம்மா...எனக்கு இருக்கிறது ஒரே friend... அவன் வராம எப்படிமா??வருவான்....நான் கால் பண்றேன்....
இங்கு நிச்சய வேலைகள் நடந்து கொண்டு இருக்க....அங்கு ஏஞ்சல் வீட்டில்...
அம்மா.....அப்பா...நான் ஒரு பையனை காதலிக்கிரேன்னு சொல்லியும் இந்த நிச்சய ஏற்பாடு செஞ்சா என்ன அர்த்தம்??👿👿👿👿😠😠😠
என்னால முடியாது...நான் வினோத்தை தான் கல்யாணம் பண்ணிபேன்...😠😠
அவன் வேற மதம்...ஜாதி...இதெல்லாம் ஒத்து வராது...நீ விக்டரை தான் கல்யாணம் பண்ணனும்...இல்லேனா எங்கள உயிரோட பாக்க முடியாது....😠😠😠சொல்லி சென்றனர்..அவள் பெற்றோர்...
அவள் திகைத்து நின்றாள்...கையில் ஃபோன் ஒளிர்ந்தது.....வினோ my life....calling.....
15 ஆண்டு கால காதலா???கல்லூரி காதலா???
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
ஷில்பா... கிளம்பு டி....இந்த புடவையை கட்டு....கீழ மாப்பிளை வீட்டு காரங்க காத்துட்டு இருக்காங்க.....
அவள் அசையாமல் அமர்ந்து இருந்தாள்...கையில் ஃபோன்...தொடர்ந்து அழைத்து கொண்டே இருந்தாள்...அவள் அழைத்த நபரோ தொடர்பு எல்லைக்கு வெளியே என்று வந்தது......
வேறு வழியில்லாமல் அந்த புடவையை வேண்டா வெறுப்பாய் கட்டி கொண்டு கீழே வந்தாள்..😨😨😨..மாப்பிள்ளை கமலேஷ்....பார்த்ததும் இவளை அவனுக்கு பிடித்து விட்டதாம்....IT company யில் வேலை...இவள் ஒருத்தி சம்மதம் வாங்காமலே அங்கு நிச்சயம் நந்து விட்டது...பொம்மை போல அவர்கள் சொன்னதை செய்து கொண்டு இருந்தாள்😓😓😓😓...
கமலேஷ் கண்களில் காதலுடன் அவளை பார்த்து கொண்டு இருந்தான்😍😍😍😍....
என்னடி.கொஞ்சம் சிரியேன்....😓😓
அதை விடு...அவன் ஃபோன் எடுத்தானா???
அண்ணாக்கு ஃபோன் போகல??நான் என்ன செய்ய??
ச்சே...இவனை போய் காதலிச்சென் பாரு என்ன சொல்லணும்...😬😬😬
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
இவர்கள் எல்லாரும் யாரை பற்றி பேசினாரோ அந்த அவன்..
திருநெல்வேலி மாவட்டத்தில் காலடி எடுத்து வைத்தான்.....
ரெட் கலர் ஷர்ட்...ப்ளூ ஜீன்ஸ்...கண்களில் cooling கிளாஸ்....போட்டு ரெயிலில் இருந்து இறங்கினான்....
போனை எடுத்தான்....ஸ்விட்ச் on செய்ததும்..முதல் அழைப்பு ஷில்பா....
சொல்லு... ஷில்லு ...
அறிவு கெட்ட முண்டம்...உனக்கெல்லாம் எதுக்கு லவ்??எதுக்கு கல்யாணம்??வண்டை வண்டையாக திட்டினாள்....
போனை காதில் இருந்து எடுத்தான்....இப்போ எதுக்கு இப்படி திட்டுறா??🤔🤔கேட்டா அதுக்கும் திட்டுவாள்....அவனுக்கு மறந்து விட்டது அவளுக்கு நிச்சயம் அவன் சென்று தடுக்க வேண்டும் என்பது....😓😓😓
ஒரு கட்டத்தில் திட்டி கொண்டே அழ ஆரம்பித்தாள்.....அவள் அழுததும் இவன் மனம் கலங்கி விட்டது....ஷில்லு.. அழாதடி....😖😖😖
எனக்கு இன்னிக்கு நிச்சயம்.....ஏண்டா வரல????😭😭😭...அவன் மோதிரம் போட்ட அந்த கையை வெட்டி போடலாம் போல இருக்கு😭😭😭
அவனுக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது😖😖😨😨😨...ஏய் .. சாரி டி.....சொன்னேன்ல ஒரு சீக்ரெட் கேஸ்.....இப்போ என்ன நிச்சயம் தான முடிஞ்சுது...கல்யாணம் இல்லையே??அப்புறம் என்ன???உன் கழுத்துல தாலி கட்ட போறது நான் தான்😐😐😳😳....என அவளை சமாதான படுத்தினான்.....சரி திரும்ப நானே கூப்டுவேன்...அது வரை கூப்பிடாதே...சரியா??
சரி...love you 😍..
Love you too ஷில்லு 😍😍😍....
போனை கட் செய்தான்....அவன் திரும்ப போகும் போது அவள் அவன் ஷில்லுவாக இருப்பாளா????அவன் வாழ்வை திசை மாற்ற போகும் இந்த கேசை நோக்கிய பயணம் ஆரம்பம்😎😎😎😎..
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
அந்த மாவட்டத்தில் அந்த கிராமத்தை கண்டு பிடித்து போய் அவனிடம் இருந்த போட்டோவை காட்டி கேட்டால் எல்லாரும் சொல்லிய ஒரே பதில் ஆறு மாதத்துக்கு முன் அந்த குடும்பம் வீட்டை காலி செய்து சென்றது...வேறு தகவல் இல்லை😐😐😐😐😐...
சொல்லி வைத்தார் போல அனைவரும் ஒரே பதில் கூறினார்கள்....ஓய்ந்து விட்டான்😐😐😐😨😨😨அப்போது ஒரு பெரியவர் தயங்கி தயங்கி அவனருகே வந்தார்...
அவன் கையில் ஒரு பேப்பரை திணித்தார்...சுற்றும் முற்றும் பார்த்து கொண்டே விரைவாக சென்று விட்டார்....😨😨
அவரையே பார்த்தவன்....கையில் இருந்த பேப்பரை விரித்தான்....அதில்..தம்பி அந்த குடும்பத்தில் அம்மா அப்பா இறந்து விட்டனர்...அந்த பெண் இருக்கும் இடம் இது தான் என ஒரு அட்ரஸ் இருந்தது.....
விரைவாக ஓர் ஆட்டோ பிடித்தவன் அந்த அட்ரஸை காட்டினான்....ஆட்டோ கிளம்பியது.......
அவன் நினைவு அவன் ஷில்லுவிடம் சென்றது.....கல்லூரி காலத்தில் இருந்து காதல்....அவன் அம்மாவுக்கு அவளை பார்த்ததும் பிடித்து விட்டது...ஆனால் ஷில்பா வீட்டில் காதல் என்றாலே எட்டி காய் தான்😓😓😓அதிலும் இவன் ஒரு முறை கையில் குண்டடி பட்டு மயங்கும் போது சரியாக ஷில்பா அப்பா பார்த்து விட..😨😨😨அதில் இருந்து ஷில்பாவுக்கு பிரச்சனை...அதையும் மீறி அவள் இவனிடம் பேசுவாள்..
காதலிக்கும் அனைவரும் திருமணத்தில் இணைய முடியுமா???? விதி இவனுக்கு வேறு ஒன்றை வைத்திருக்கிறதே??😓😓😓😓
சார்... நீங்க சொன்ன இடம் வந்தாச்சு....
நினைவுகளில் இருந்து களைந்தவன்....ஆட்டோவில் இருந்து இறங்கினான்....
நிமிர்ந்து பார்த்து அதிர்ந்தான்😨😨😨 அண்ணே... என்ன இங்க கொண்டு வந்துருக்கீங்க???😨😨
அந்த அட்ரஸ் இது தான் தம்பி.....அவர் சென்றார்....
அவன் வந்த இடம்.....அரசு மன நல காப்பகம்...😨😨😨😨
அவன் தேடி வந்தவளை சந்திப்பானா??😓😨😨
அவன் யார்??அவள் யார்???
விடைகளோடு அடுத்த பதிவில்......