உன்னை விடமாட்டேன் - 2
காலை உணவை முடித்தவுடன் அனைவரும் ஹாலில் அமர்ந்து இருந்தனர்.
லெட்சுமி திருமணமான புது தம்பதிகளை கோவிலுக்கு போய்வரும் படி கூறினார்.
நால்வரும் சரி என்றனர்.
தனம்: ஜீவா நீ பெரிய வண்டிய எடுத்துக்கோ. கதிர் நீ சின்ன வண்டிய... என்று முடிப்பதற்குள்
சட்டென முல்லை நாங்க பெரிய வண்டில போக போறோம்.
தனம்: எப்பவும் ஜீவா தான் பெரிய வண்டி எடுத்துட்டு போவான்.
முல்லை: ஏன் நாங்க எடுத்துட்டு போனா வண்டி ஓடாதா
கதிர்: முல்ல...
முல்லை: நா பெரிய வண்டில தான் வருவேன். நா போய் கோவிலுக்கு கிளம்புறேன்.நீயும் சீக்கிரம் வா என்றால் கதிரிடம்.
மீனாவும் ஜீவாவிடம் சண்டையிட்டால் பெரிய வண்டிகாக.
ஜீவா தன் தம்பி தன்னால் கஷ்டப்படுகிறான். அவனை மேலும் கஷ்டப்படடுத்த வேண்டாம் என கூறிவிட்டு சென்று விட்டான்.
மீனாவாள் அதற்கு மேல் பேச முடியவில்லை.
நால்வரும் கோவிலுக்கு செல்ல தயராகி வந்தனர். நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
கதிர் அம்மாவிடம் மட்டும் சொல்லிவிட்டு வேறெதுவும் பேசாமல் அமைதியாக சென்றுவிட்டான்.
தனம்: என்ன மாமா கதிர் எதுவும் பேசாம போரான். கடமைக்குனு போரான் மாமா. முல்லைய அவனுக்கு சுத்தமா பிடிக்காது. அவன் பாவம்
மூர்த்தி: அவசர படாத தனம் கொஞ்ச நாள் ஆகட்டும். அவன் சரியாகிடுவான்.
லெட்சுமி: தனம் உன் வேலைய பாரு. அவன் அவனோட வாழ்க்கைய பாத்துபான்.
KM இருவரும் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். கோவில் வாசலில் பூக்கடையை பார்த்த முல்லை
முல்லை: கதிர் பூ வேணும்
கதிர்: வாங்கிகோ
வாங்கிய பூவை கதிரிடம் நீட்டி
முல்லை: வைச்சுவிடு
கதிர்: நானா
முல்லை: நீ தான்
கதிர்: முடியாது
முல்லை: சத்தியம் ஞாபகம் இருக்கிள்ள
கதிர்: இருக்கு இருக்கு குடு நானே வைச்சு தொலையுறேன்.
இருவரும் சாமி கும்பிட்ட பின் அங்கு இருந்து கிளம்பினார்.
JM இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
மாலை வரை KM வீட்டிற்கு வரவில்லை.
தனம்: ஐய்யையோ... மாமா... இவங்க இரண்டு பேரையும் இன்னும் காணும் என்ன பிரச்சனைனு தெரியலையே மாமா. இரண்டு பேரும் சண்ட போட்டு இருப்பாங்களோ.
மூர்த்தி: இவ ஒருத்தி கொஞ்ச நேரம் சும்மா இருடி
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது இருவரும் உள்ள நுழைந்தனர்.
தனம்: டேய்.. கதிரு.. எங்கடா போனீங்க?
ஏன் இவ்வளவு நேரம்?
எதாவது பிரச்சினையா?
நீங்க இரண்டு பேரும் சண்ட போட்டிங்களா?
வாய தொறந்து பேசுடா
முல்லை: Hello ஒரு நிமிஷம் அவர பேசவிடாம நீங்க பேசுனா நாங்க எப்படி பதில் சொல்றது.
லெட்சுமி: எங்கமா போனீங்க. ஏன் நேரமாச்சு
முல்லை: அத்த.... நாங்க படத்துக்கு போனோம்.
அனைவரும் அதிர்ச்சியுடன் கதிரை பார்க்க அவன் குனிந்த தலை நிமிரவில்லை.
கண்ணன்: கதிரண்ணா... தப்பு பண்ணிடியே
முல்லை:என்னடா தப்பு
கண்ணன்: இந்த குடும்பத்துல தனியா படத்துகெல்லாம் போக கூடாது.
முல்லை: அந்த சட்டம் யார் போட்டா
கண்ணன்: திருட்டு முழி விழிக்க
முல்லை: அத்த...எனக்கு அசதியா இருக்கு நா போய் ரெஸ்ட் எடுக்குறேன்.
லெட்சுமி: சரிமா போ
முல்லை: கதிரை பார்த்து.. உங்களுக்கு என்ன தனியா சொல்லனுமா வாங்க என்று கூற கதிர் அவள் பின்னே சென்றான்.
மொத்த குடும்பமும் வியப்புடன் பார்த்தது கதிரை.
கதிரின் அமைதி காரணம் என்ன?
பிடிக்காத கல்யாணமா?
திடீர் கல்யாணமா?
பிடிக்காத முல்லையா?
அம்மாவின் வாக்கா?
அண்ணானின் துரோகமா?
மீனாவின் முல்லை மீதான விரோதமா?
மறுநாள் காலை.....
தனம் மூர்த்தி கோவிலுக்கு சென்று விட்டனர்.
கண்ணன் கல்லூரிக்கு சென்று விட்டான்.
லெட்சுமி அம்மா தன் அறையில் உறங்கி கொண்டிருக்கிறார்.
ஜீவா கடைக்கு கிளம்பி கொண்டிருக்க ஹாலில்
ஜீவாவிடம் வந்த மீனா அவனிடம் ஆசையாக பேச அவன் குற்ற உணர்ச்சியுடன் நிற்க மீனா ஜீவாவை முத்தமிட போக அப்போது அங்கே எதிர்பாராமல் வந்தால் முல்லை.
முல்லையை பார்த்த மீனாவிற்கு கோவம் தாங்கவில்லை.
மீனா: அறிவில்ல உனக்கு
புருஷன் பொண்டாட்டி தனியா இருக்கும் போது எட்டி பாக்குற
இன்னும் நீ ஜீவாவ நினைச்சுட்டு இருக்கியா
வெக்கமா இல்ல
உனக்கு புருஷன் இருக்காருல
என் புருஷன ஏன் பாக்குற
என்று மீனா வாய்க்கு வந்தபடி பேச முல்லை எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க.
மீனா: மரியாதைமா இருந்துகோ
உனக்கு முத்தம் கொடுக்க ஆள் இல்லையா. இங்க வந்து எட்டி பாக்குற
என்ட வச்சுகாத
ஒதுங்கி போயிடு
என்ன பத்தி தெரியாது உனக்கு
முல்லை: கதிரு......கதிரு.....கதிருருரு என வேகமாக கத்த
பதறி அடித்துக்கொண்டு வந்து நின்றான் கதிர்.
ஜீவா மீனா அவனையே பார்த்தனர்.
கதிரின் அருகே நெருங்கிய முல்லை
மீனாவை ஒரு ஏலன பார்வை பாத்துவிட்டு
கதிர் கன்னத்தில் 😘 முத்தத்தை பதித்தாள்.
JM இருவரும் வாயை பிளந்தனர்.
கதிர் அதிர்ச்சியில் உறைந்து போனான்.
முல்லை: நீ ஹால்ல நின்னா நாலு பேர் பாக்கதான் செய்வாங்க.
நா உன் room ல வந்து எட்டி பாத்த மாதிரி பேசுற.
எனக்கு முத்தம் கொடுக்க ஆள் இல்லாம உன்ன எட்டி பாக்கல
பாத்தியா என் ஆள
என்ட வைச்சுகாத சொல்லிடேன்.
உன் பேச்சுக்கு பயப்படுற ஆள நா இல்ல.
நா முல்ல.... முல்லை கதிரவன்... புரிஞ்சுதா
கதிரை நோக்கி
வா கதிரு நாம மீதிய உள்ள போய் பாத்துகலாம் என்று கூறி கதிரின் கையை பிடித்து அழைத்து சென்றாள்.
அப்படி இவங்க இரண்டு பேர் இடையே என்ன ரகசியம் இருக்கு?
கல்யாண நாள் அன்றைய இரவு என்ன நடந்தது?
அது என்ன சத்தியம் செய்தார் கதிர்?
நாளை பார்ப்போம்......
கதிர்க்கு டைலாக் இல்லை என திட்ட வேண்டாம் அடுத்த பகுதியில் இருந்து கதிர் முல்லை conversation தொடரும்.🙏