உன்னை விடமாட்டேன் - 8
அன்றைய பொழுது இன்பமாம் கடந்து போக இருவரும் நிம்மதியாக உறங்கி போயினர்.
மதியம் முதலில் கண்விழித்தாள் முல்லை.
முல்லை: தூங்குறத பாரு அப்பாவி மாதிரி ஆனா சரியான கேடி பயடா கதிரு நீ.
தூங்கும் தன் கணவனை ரசித்தபடி அமர்ந்து இருந்த முல்லைக்கு சட்டென ஒன்று நினைவிற்கு வர வேகமாக எழுந்து குளிக்க சென்றுவிட்டாள்.
தன்னை கடந்து செல்லும் முல்லையை பார்த்த தனத்திற்கு கடுப்பாக இருந்தது.
தனம்: எவ்வளவு திமிரு இவளுக்கு. கூப்பிடா வர முடியாதுனு திமிரா பேசுரா.
இந்த கதிர் பையலும் இவ பேச்ச கேட்டுக்கிட்டு ஆடுறான்.
போற போக்கப்பாதா நம்ம கைமீறி எல்லாம் போயிடும் போலயே.
இரவு முல்லை லெட்சுமி அறைக்கு சென்றாள்.
முல்லை: அத்தை
லெட்சுமி: வாம்மா..
முல்லை: நாளைக்கு நாங்க வெளிய போறோம். உங்க கிட்ட சொல்லிட்டு போலாம்னு
லெட்சுமி: சந்தோஷமா போய்டுவாங்கடா...
நாளைக்கு என்ன திடீர்னுமுல்லை: நாளைக்கு 1 ஆம் தேதி அத்த
லெட்சுமமிக்கு புரிந்து விட்டது. கண்களில் கண்ணீருடன்
லெட்சுமி: இந்த வீட்ல யாருக்கும் இது ஞாபகம் இருக்காதும்மா.....
இப்போ நீ வந்துட்டல அது போதும். எனக்கு சந்தோஷமா இருக்கு
முல்லை: அத்த... அப்புறம்..... நாளைக்கு சம்பளத்தை தர சொன்னீங்கனா.
லெட்சுமி: இதுக்கு ஏன்டா தயங்குற.... நா மூர்த்திட சொல்றேன்.
முல்லை: நன்றி அத்த.... அப்புறம் நாங்க வெளிய போறத யார்டயும் இப்போ சொல்ல வேணாம். கதிர்ட கூட நா இன்னும் சொல்ல pls
லெட்சுமி: சரிடா மா... நா சொல்லல
அனைவரும் இரவு உணவு முடித்துவிட்டு ஹாலில் அமர்ந்து இருந்தனர்.