உன்னை விடமாட்டேன் - 1ஜீவானந்தம் ❤️ முல்லை
மணமேடையில் ஜீவா. அழகிய தேவதையாக முல்லை மணவரை நோக்கி வருகிறாள்.
ஐயர் மந்திரம் ஓத உற்றார் உறவினர் புடைசூழ மாங்கல்யத்தை முல்லை கழுத்தில் கட்ட தயாரானான் ஜீவா.
அப்போது ஒரு குரல் ....நிறுத்துங்க........
அனைவரும் திரும்பி பார்க்க அது மீனா.
மாங்கல்யத்தை கீழே போட்டு விட்டு மணவரையில் இருந்து எழுந்தான் ஜீவா.
அதிர்ச்சியில் அமர்ந்து இருந்துதாள் முல்லை.
மொத்த குடும்பமும் என் நடக்கிறது என்று புரியாமல் முழிக்க.
மீனா தானும் ஜீவாவும் காதலிப்பதாகவும் தங்களை சேத்து வைக்க வேண்டும் என கூறினாள்.
(PS ல வர same டைலாக் அதனால நா அதலாம் எழுதல. நீங்களே கற்பனை பண்ணிக்கோங்க.)
பார்வதி:என் பொண்ணுக்கு ஒரு வழி சொல்லுங்க
முருகன்:அவங்க என்ன வழி சொல்ல போராங்க வா நாமா போவோம்.
லெட்சுமி:முருகா என்ன மன்னிச்சுடுடா. எனக்கு இதலாம் தெரியாது.
தனம்:முதல ஜீவா கல்யாணம் முடியட்டும்
மூர்த்தி:ஆமாமா... அப்புறம் மத்தத பேசலாம்..
பார்வதி:என் பொண்ணு வாழ்க்கைய அழிச்சுட்டு. கல்யாணம் பண்ண போறீங்கள.
முருகன்:அம்மாடி.. முல்ல.. எழுந்துவாமா. நாம போவோம். இங்க இருந்து இதலாம் பாக்க நமக்கு தலை எழுத்தா.
லெட்சுமி:முருகா... அவசரபடாத டா... ஜீவா.. கல்யாணம்.....
முல்லை:அத்த.... என ஆக்ரோசமாக சத்தமிட...
அனைவரும் சற்றே பதறி போயினர்.
முல்லை:என்ன ஏமாத்திட்டு.. அவருக்கு கல்யாணமா...
தனம்:மீனா பாவம்....
இடைமறித்து முல்லை:அப்போ நா....
எனக்கு இப்போ கல்யாண நடந்தே ஆகனும்.
தனம்:அது எப்படிமா... ஜீவா மீனாவ விருப்புறான்.