மனதை தீண்டி செல்லாதே

By riyasundar

19.8K 504 17

Higest Ranking #26 tamil #57 romance #79 காதல் #42 தமிழ் #35 குடும்பம் #11 உறவு #14 affection #14 நாவல் #4 பு... More

1. வீழ்ச்சியிலும் நிதானம் முதன்மை
2. தாய்மையின் பதட்டம்
3. சூழ்நிலைகளால் தவறாகும் கணிப்பு
5. என் முதல் ஹீரோ
6. முதல் சந்திப்பிலேயே ஏனோ தொலைந்தேன்
7. உன்னிடம் பேச துடிக்கிறேன்
8. மனதால் நெருங்கினாலும் அறிவால் விலக துடிக்கிறேன்
9. புதிதாக ஒரு பந்தம்
10. உன்னைக் காணவே காத்திருந்தேன்
11. கண்ணுக்கு கண்ணாக நான் பார்த்துக் கொள்ள மாட்டேனா?
12. முன்னரே உணர்ந்திருந்தால்..
13. மனதை மறைக்கும் வழி தெரியாமல்
14. கைகோர்த்து காதல் மொழி பேச
15. விலகிட நினைத்தாலும் விதி இணைக்கிறதே
16. என்னுள்ளே மாற்றம் செய்தாயடா!
17. உன்னில் பல வண்ணங்கள்
18. இதயம் ஒரு நொடி துடிக்க மறந்தது
19. எப்போது என்னுள்ளே காதல் வந்தது?
20. புரிதலிலும் அன்பிலும் ஆழமாகும் நேசம்
21. எனக்காக நீ செய்யும் ஒவ்வொன்றும்
22. உன் ஒரு பார்வை இதயத்தை கிழித்ததே..
23. நீ இல்லாமல் நானும் வெறும் உடலே..
24. புரிதலிலே உருவான உறவு (இறுதி அத்தியாயம்)
மற்றுமொரு இன்பம் நெஞ்சினிலே (ஆ/ப)

4. தவறை திருத்தினாலும் சுவடுகள் எங்கோ?

911 25 0
By riyasundar

முதலில் இவனைக் கண்டதும் கோபமும் மறுபுறம் பயமும் ஒருசேர அதிகரிக்க நின்றவர்கள் இவன் விளக்கியதும் சற்று தெளிந்ததனர். சிறு காயம் என்றாலும் தவறு பெரிது என்பதால் அவன் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கேட்டான் இனியன். உடனே பதறி தூக்கியவன் தான் முழுமனதாக மன்னித்து விட்டதை வெளி காட்டினான்.

அவனது பண்பு புரிந்ததால் வீட்டில் ஒருவராய் நினைத்த அவன் தாய் காபி போட்டு வந்து கொடுத்தார். பெரிய வீட்டில் வளர்ந்திருந்தாலும் அந்த சிறு வீட்டின் மனிதர்களை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் இரு தங்கைகளும் தனக்கும் தங்கைகள் போலவே தோன்றியது இனியனக்கு.

ராகவன் தந்தை சிறு விபத்தில் இறந்துவிட மொத்த பொறுப்பையும் அவனது தாயார் ஏற்றுக்கொண்டது தெரிந்தது. நல்ல கல்வி இருப்பினும் வேலை சரியாக கிடைக்காமல் ராகவன் இருப்பதை உணர்ந்து அவனுக்கு தன் கம்பெனியிலேயே வேலை வழங்க உறுதி அளித்தான். அவர்கள் தடுத்தும் கேளாமல் அந்த பணத்தையும் மேலும் உதவி வேண்டுமென்றால் தொடர்புகொள்ள தன் தகவல்களையும் கொடுத்தான்.

அந்த வீட்டை விட்டு வந்த பின்னர் மனம் ஒரு பெரிய பாரத்தை இழந்தது போல லேசானது. அடுத்து தனது அன்னையை நினைத்து பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவாறே தன் கம்பெனிக்கு சென்றான். இதையெல்லாம் தாண்டி மனதில் ஏதோ ஒரு தவறு செய்த படபடப்பும் தோன்றியதை யோசித்தபடி காரில் விரைந்தான்.

சென்னை மாநகரம் நிற்கக்கூட நேரமில்லாமல் விரைந்து கொண்டு இருக்கும் மனிதர்களின் நிழற்குடை. தன்  Handbag அய் எடுத்துக்கொண்ட பார்க்கவியும் தான் துணை மேலாளராக பணி புரியும் K.V.P IT Solutions இற்கு cab இல் விரைந்தாள்‌. நல்ல நிலையில் இருந்தாலும் எளிமையாய் இருப்பதையே பெரிதும் விரும்பினாள். அதனாலேயே தன் சித்தப்பாவின் கம்பெனி என்றாலும் அங்கே இருக்கும் cab இலேயே பயணம் செய்வாள்.

தன் திறமை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு வருடம் சிறப்பாக பணி புரிந்த இந்த பதவியை பெற்று இருந்தாள். அவளுடைய குணம் அறிந்ததால் அவளது சித்தப்பா கிருஷ்ணாவும் அதை ஆமோதித்தார்.

'தந்தையை போலத்தானே மகளும். இன்னும் அதே பள்ளி ஆசிரியராய் தன் அண்ணன் மாதவன் தன்னோடு எவ்வளவு அழைத்தும் வராமல் அந்த சிறு தொகையில் விடாப்பிடியாய் மகிழ்ச்சியாய் இருப்பதை அவரும் அறிவார். அவர் மகள் வேறெப்படி இருப்பாள்? அண்ணி லட்சுமி இறந்திருந்தால் மனம் மேலும் நிறைந்திருக்கும். ம்‌ஹும் திடீர் விஷக்காய்ச்சல் அவரை காவு வாங்கும் என யார் கண்டது'
என அடிக்கடி அவர் மனம் எண்ணி வருந்துவதுண்டு.

வேலையில் ஆழ்ந்திருந்தவளை மற்றொருவன் M.D அழைப்பதாகக் கூறிய உடனே காலையில் பார்க்க வேண்டும் எனக் கூறிய மஞ்சள்நிற ஃபைளை எடுத்துக்கொண்டு அவர் அறைக்குள் நுழைந்தாள்.

" May I come in Sir" என்று கேட்க,

" Yes. Come in" என்று தனது system ஐ பார்வையிட்டபடி கூறினார் கிருஷ்ணா.

உள்ளே நுழைந்தவளை கண்டவர் அமரச் சொல்லிவிட்டு,

"அட பார்கவி.. உன்ன தான் தேடிட்டு இருந்தேன்" என்று சிரித்தபடி கூறினார்.

அவளும்,

"அப்படியா அந்த work almost over. இந்த file ல அதோட details இருக்கு. கொஞ்சம் பாத்துட்டீங்கனா இன்னைக்குள்ள முடிச்சிடலாம் Sir" என்று புன்னகையோடு கூற அவரது முகம் சுருங்கியது.

" என்னடா இங்கதான் யாரும் இல்லையே. அப்பாவுக்கும் மகளுக்கும் இந்த வீராப்பு போகாது போல. அழகாய் சித்தப்பான்னே சொல்லு இது வேலை சம்பந்தமானது இல்லை" என்று அவர் சொன்னவுடன் கலகலவென சிரித்தபடியே தொடர்ந்தாள் பார்க்கவி.

"சரி சித்தப்பா. சொல்லுங்க வேற என்ன விஷயம். எப்பவும் வேலை தவிர மற்ற விஷயங்கள் பத்தி இங்க பேசினதில்லல. அதான் அப்படி சொன்னேன். சித்திக், காவ்யா, அருண் எல்லாரும் எப்படி இருக்காங்க?" என்று விசாரித்தாள்.

அதற்கு அவர், "ஹாஹா.. என்னை என்னமா செய்ய சொல்ற. வேலைன்னு வந்துட்டா வேறு எதுவும் தோண மாட்டேங்குது. எல்லாரும் நல்லா இருக்காங்க. உன் சித்தி தான் உன்ன பார்க்கனும் பார்க்கனும்னு சொல்லிட்டிருந்தா. ஒரே ஊர்ல இருந்துட்டு இப்படி தூரமாக இருக்கிறது நல்லாவா இருக்கு. சொன்னா அப்பாவும் மகளும் கேட்கவா போறீங்க" என வருத்தத்துடன் கூற,

பதிலுக்கு பார்கவி பேசும்முன் தடுத்து அவரே தொடர்ந்தார்.

"அத விடு நீ என்ன சொல்லப் போறேன்னு தான் தெரியுமே. விலகி இருந்தா தான் அன்பு ஜாஸ்தி ஆகும் அப்படி இப்படின்னு. சொல்ல வந்ததையே மறந்துட்டேன் பாரு. அருணுக்கு வர்ற ஞாயிற்றுக்கிழமை பிறந்தநாள் வருது. அவன் 20 வயச பூர்த்தி செய்றதால பெரிய Birthday party atrange பண்ணிருக்கா உன் சித்தி. முக்கியமான சில தொழிலதிபர்களும் வராங்க. சாக்கு போக்கு சொல்லாமல் நீயும் அண்ணனும் கண்டிப்பா வரணும். இல்லாட்டி சித்தப்பா மனசு ரொம்ப கஷ்டப்படும். பல நாள் ஆச்சு நம்ம எல்லாரும் சேர்ந்து பேசி. So no reasons accepted" என அன்பு கட்டளையிட்டார்.

" Party ஆ அப்பாவால இந்த Sunday கண்டிப்பா வர முடியாது. School ல Annual day function. உங்களுக்கே தெரியும் அவர்தான் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுச் செய்வார்னு "என்று சொன்னதும் அவர் முகம் வாடியதை காணப் பொறுக்காமல்,

"ஆனா நான் கண்டிப்பா வரேன். ஒரு Condition. என் friends அயும் சேர்த்து கூட்டிட்டு வருவேன் deal ஆ?" என்றாள் பார்க்கவி.

"ஹாஹா.. அதுக்கு என்ன ஒரு ஊரையே கூட கூட்டிட்டு வா. No problem. ஆனா மறக்காம அஞ்சு மணிக்கு sharp ஆ வந்திடனும்" என்று Invitation ஐ நீட்டினார். அதைப் பெற்றுக்கொண்டு அவரிடம் விடைபெற்று வந்து தன் வேலையில் மூழ்கினாள் அடுத்து வரும் நிகழ்வுகளின் வீரியம் அறியாமல்.

______________________________________
Hello makkale😁,

Late update Ku mannikavum. Pidichirntha vote Pani Inga karuthalayum solunga😍

Continue Reading

You'll Also Like

32.7K 2.6K 92
ஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூ...
16.2K 571 23
அக்கா தங்கையின் கதை... தாய் தந்தையை இழந்த சகோதரிகள் தங்கள் சொந்தங்களை தேடிச் செல்லும் கதை...
44.9K 2.9K 100
மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னாளில் யாரை படாத பாடு படுத்தினாளோ, அவனால்...
643K 17.1K 53
எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்கள...