பின்னே திடீரென்று இலக்கியாவின் பிம்பம் தோன்றி Super என்று கை அசைத்து கூறுவதை போல் தோன்ற மாறன் சட்டென்று பின்னால் திரும்ப அவளின் பிம்பமும் மறைந்திருந்தது.

தன் தலையில் சிரித்தபடி"முத்திப் போச்சு மாறா"என்று  தட்டிக்கொண்டவன் வெளியே வர அனைவரும் அவர்களின் குல தெய்வக் கோவிலிற்கு கருப்பத்தேவரின் மகிழுந்தில் ஏறினர்.

ராஜா தனது வேட்டியுடன் பொராடியபடி வந்தவன் கண்கள் அடர் பச்சை வண்ண பட்டுசேலையில் இடை தாண்டி இருந்த முடியை பின்னலிட்டு தோளில் உரசுமாரு மல்லிகை பூவுடன் வகிட்டில் நிறைந்த குங்குமத்துடன் அவள் அந்த மகிழுந்தின் அருகில் மகதியுடன் நின்று சிரித்து பேசிக்கொண்டிருக்க கண்கள் இமைக்கவும் மறந்து அவளை வேறொரு கோணத்தில் ரசிக்க வைத்தது .

மஹதி எதேற்ச்சையாய் அவனை கண்டவள்  அவனின் பார்வையின் அர்த்தம் புரியாது"அக்கா உன் புருஷன் ஏன் இப்டி பல நாள் பட்னி கிடந்தவன் பிரியாணி பொட்டலத்த பாக்குற மாறி பாத்துட்டு இருக்காரு"என்க

இளவரசி ராஜாவின் புறம் திரும்பி என்ன என்று ஒற்றைப்புருவம் தூக்க அதில் தெளிந்தவன் ஒன்றுமில்லை என்று வேக வேகமாய் தலை ஆட்டிவிட்டு வேட்டி நழுவுவதைப் போல் தோன்ற உள்ளே மீண்டும் அறையை நோக்கி ஓடினான்.மனம் ஒரு நிலையில் இல்லாமல் பட படவென்று அடித்துக் கொண்டிருந்தது.

மனதில்"கடவுளே இவ்வளவு நாளா  இதே கண்ணுல தான அவள பாத்தேன் அப்பொலாம் இவ்வளவு அழகாக தெரிஞ்சது இல்லயே இப்போ மட்டும் ஏன் இப்டி என்று தன்னை தானே நொந்து கொண்டு வெளியே வர அதற்குள் அனைவரும் மகிழுந்தில் ஏறி இருந்தனர்.

கருப்பத்தேவர்"செய் மகனே என்னடா கனவு கண்டுகிட்டு நிக்குற ஏரு என்க அந்த மகிழுந்தில் அனைத்து இடமும் நிரம்பி இருந்தது.ராஜா அப்பொழுதே வந்து சேர கருப்பதேவரோ " இடம் இல்லையே மகனே நீ bulletla வந்துருறியா "என்க

ராஜாவோ மகாவின் முகத்தை பார்த்தவன் அவளை வம்பிழுக்க வேண்டி "அவசியம் இல்லை பெரியப்பா நானும் இதிலேயே வரேன்"என்க

உன் அன்பில் சுகமாய் தொலைந்தேனடி(முடிவுற்றது)Where stories live. Discover now