அவன் தன்னுடைய பெற்றோர்களை பார்க்க அவர்கள் அவன் தோளில் லேசாக திட்டி விட்டு நீ செய்தது சரி என்பது போல் சொல்லாமல் சொல்லி விட்டு உள்ளே செல்ல.
ஆதி " ஸ்வஸ்தி" என்று அழைக்க......நீ ஏதும் பேச வேண்டாம் என்பது போல் கை நீட்டி அவன் பேச்சை நிறுத்தினாள்.
இதற்க்கெல்லாம் அசறுபவனா நம் ஆதி ........."ஹே மங்கூஸ் உன்ன விட எனக்கு என் மச்சான் பத்தி நல்லாவே தெரியும் அவன் கண்டிப்பா உன்ன விட்டு வேற யாரையும் நினைச்சு கூட பார்க்க மாட்டான்.....நீ லூஸ் மாறி ஏதும் யோசிக்காம கல்யாணம் பெண்ணா லட்சணமா இரு அப்டியே, அவன எப்படிலாம் torture பண்லாம்னு யோசி"
என்ன நான் சொல்றது மண்டைல ஏறுச்சா??
ஒரு நிமிடம் யோசித்தவள் பின் புன்னகையுடன் தேங்க்ஸ் பாண்டா என்று அவனை கட்டி கொண்டாள்.
இது இதுதான் ஸ்வஸ்தி கோவம் வருத்தம் எந்த நிலைமையா இருந்தாளும் உடனே அதில் இருக்கும் நன்மைகளை எடுத்துகொண்டு சந்தோஷத்துடன் வளம் வருவாள்.
அதானால் தான் என்னவோ அவளால் ஒரு சாம்ராஜியத்தை இந்த இளம் வயதில் திறம்பட நடத்த முடிகிறது.
ஸ்வஸ்திகா புன்னகையுடன் அவள் அறை நோக்கி செல்ல
ஆதி அவள் செல்லும் வரை பார்த்து கொண்டு இருந்தவன் எண்ணம் கல்லூரி நாட்களை வளம் வந்தது.