Untitled Part 1

4 0 0
                                    

தெய்வீகத்திரு பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் இன்று முகப்புத்தகத்தில் அருளிய சத்தியத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு:-

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி அல்லது மிகச்சிறந்த திருப்புமுனையைப் பெறும்பொழுது, நீங்கள் எந்த விதமான கொண்டாட்டத்தை மற்றும் எந்த வழியில் உங்களுக்கு நீங்களே சலுகைக்காட்ட விரும்புகிறீர்களோ அவ்வழி 'ஃபலா' என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது. 'ஃபலா' என்றால் தமிழில் பலன் என்று பொருள்.
ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள் 'ஃபலா' என்ற வார்த்தை வெறும் 'விளைவு'என்பதை மட்டும் குறிப்பதல்ல. ஆனால் நீங்கள் எவ்வழியில் அந்த விளைவுகளை அனுபவிக்க மற்றும் கொண்டாடவேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
நான் என் வாழ்வில் அனுபவித்து மகிழ்ந்த மிகப்பெரிய 'ஃபலா', ஒரு கிண்ணம் தயிர் சாதம் அல்லது பாரம்பரியமான உப்பு குறைவான புளியோதரை இவைகள்தான்.
எனக்கு மிகவும் எளிமையான மற்றும் சாத்விகமாக சுவைமிகுந்த வாழ்க்கை முறையை வழங்கியதற்காக எனது குருமார்கள் மற்றும் அருணாச்சலத்தின் (திருவண்ணாமலை) வாதாவரணம் (சுற்றுச்சூழல்) அமைப்பிற்கு மிகவும் நன்றி உணர்வோடு இருக்கிறேன்.
யாருடைய வாழ்வின் 'ஃபலா' (பலன்) மிகஎளிமையாகவும், சாத்விகமாகவும் உள்ளதோ, அவர் ஜீவன்முக்தியை வாழவும் வெளிப்படுத்தவும் செய்கின்றார்.
மேலும் அவர் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும், பரிமாணத்திலும் ஒரு அரசனைவிட உயர்ந்த வாழ்க்கையை வாழ்கிறார்.

உங்கள் ஒவ்வொரு நாள் செயல்பாடுகளிலும் பயம் மற்றும் பேராசை தொடர்பான குறுக்கீடு மற்றும் அனுமானங்களைக் காலாவதியாக்கும் நுட்பமே 'ராஜவித்யா' என்று அழைக்கப்படுகிறது.
உங்கள் இருப்பில் உள்ள பயம் மற்றும் பேராசையை தொடர்பற்ற தாக்கி பூமியில் வாழும்பொழுதே கடவுளைப்போல வாழ்வதே ராஜவித்யா ஆகும்.
வாழ்வில் எளிமையான சாத்வீகமான 'ஃபலா' - பலனை வளர்ப்பதே ராஜவித்யா குருகுல மாணவர்களுக்கான முதல்பாடம்.
'பரமசிவோஹம்' (நீங்கள் பரமசிவம்) என்ற உயர்ந்த சத்தியத்திற்கு உங்கள் மனம் மற்றும் உளவியல் இருப்பின் அடிப்படையை விழிப்புணர்வோடு உயத்தும்பொழுது, பயம் மற்றும் பேராசையை போன்ற குறையுணர்வுகளை பொறுத்தமற்றதாக ஆக்கிவிடுகின்றீர்கள்.
நான் கண்டறிந்த மிகப் பெருமைக்குரிய உயர்வான ஒரு சத்தியம் என்னவெனில், இந்துமதத்தில் மிகத் துல்லியமான சத்தியம் என்பது ஞானத்திற்கான சாதனையாகவும் தீர்வாக உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து ராஜவித்யா குருகுல மாணவர்களும் இந்த சிறந்த ஜீவன் முக்தி அறிவியலின் மிகச் சிறந்த ஒளியாகவும், தலைவர்களாகவும் திகழ்வதற்கான தீவிரமான சிறப்பு சக்தி வெளிப்பாடு பயிற்சி இப்பொழுது பெறப்போகிறார்கள்.
மனிதகுலத்திற்கு இழைக்கப்பட்ட மிக்பெரியக் குற்றங்களில் ஒன்று, இந்தப் புனிதமான 'ஜீவன்முக்தி அறிவியல்' அழிக்கப்பட்டதும் ஒவ்வொரு குழந்தைக்கும், மனிதனுக்கும் இதை கற்பிக்க அனுமதிக்காததும்தான். 

You've reached the end of published parts.

⏰ Last updated: Aug 01, 2019 ⏰

Add this story to your Library to get notified about new parts!

அவதார புருஷரின் சுயசரிதைWhere stories live. Discover now