'என்னடா இது எவன பார்த்தாலும் "நம்ம தமிழ் மாதிரி இருக்கீங்க" ன்னு சொல்றாங்க இவங்க எல்லாருக்கும் கனெக்ஷன் இருக்குமா இல்ல என்ன வெச்சி காமேடி பன்றாங்களா?'
'சனூ கிட்ட இன்னேக்கு தமிழ் யாருன்னு கேட்க்க வேண்டியது தான்' என்று நினைத்து கொண்டு காரை ஸ்டார்ட் செய்து வீட்டுக்கு சென்றான்
தந்தைக்கு கால் செய்தவன் அவர் தொடர்புக்கு வந்ததும் "அப்பா நான் காலைலயே ரீச் ஆகிட்டேன் பட் கால் பன்ன கிடைக்கல"
"இட்ஸ் ஒகே ப்பா லஞ்ச் சாப்டியா...?"
"சாப்டேன்ப்பா பட் வயிறுக்கு சரியாகலை"
"இதற்கு தான் சொல்றேன் கல்யாணம் பன்னிக்கோ பிடிச்ச மாதிரி சமைச்சி கொடுப்பான்னு"
"இன்னைக்கு சாப்ட சாப்பாட்டுக்கு அப்பறம் தான் எனக்கே தோனுது கல்யாணம் பன்னிப்போம்ன்னு"
"அப்போ கல்யாணத்திற்கு ஒகேயா?" என்றார் சலித்து கொண்டு அவர் தினமும் கேட்கும் கேள்வியல்லவா
"ஆமாப்பா பொண்ணு நான் பாத்துட்டேன் அவ எனக்காக பொறந்தவன்னு பார்த்ததும் தோனிச்சி ப்பா அப்டியே நம்ம அம்மா மாதிரி" என்றூ கூறும் போதே இடைபுகுந்தவர்
"பார்த்ததும் அந்த பொண்ண என்னோட லீலாவோட கம்பெயார் பன்னாத அப்பறம் அந்த பொண்ணும் நீயும் லவ்வா என்ன?"
"ஆமாப்பா லவ் தான் இன்னைக்கு மீட் பன்னி பேசினேன் அவங்க குடும்பத்தோட பேச சொன்னா அதான் உங்க கிட்ட பர்மிஷன் எடுக்க கால் பன்னேன்"
"என்கிட்ட என்ன கேட்குறதுக்கு நான் எப்பவும் உன் வழிக்கு குறுக்க வர மாட்டேனே"
"அது தெரியும் பட் எல்லாம் நானே முடிவு பன்னிக்க நான் ஒன்னும் அநாதை இல்லையெப்பா"
"சரிப்பா சரி நான் வரட்டும்மா"
"ஹம் நாளைக்கு நாம போலாம் நீங்க நைட்க்கே வாங்க"
"சரி பவன் டேக் ரெஸ்ட் வந்து பேசிக்கலாம்" தந்தை வந்ததும் பேசிப்போம் என்று விட்டான் பவன்
YOU ARE READING
கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது)
General FictionBorn-?05.25 Edit-Cover PIC ,description-?05.30 Starting-?08.29 செய்யாத குற்றத்திற்காக தன் வாழ்க்கை கம்பி எண்ணி கழிக்கும் பெண் தான் நம் நாயகி ப்ரியஹாஷினி அவளுக்கென தந்தை தாய் தமக்கை என்று பல உறவுகள் இருந்தும் விதியால் அநாதையாக்க படுகின்றாள் சட்டத்த...