💕💕💕திருமணத்திற்கு பிறகு எப்படியாவது நடந்த அனைத்து உண்மையையும் அனுவிடம் கூறி அவளை சமாதனச் செய்துவிட முடியும் என வருண் எண்ணியிருந்த அனைத்து கனவுக் கோட்டையும் அனுவின் கடிதத்தை படித்தபின் நொருங்கிப் போனது.....
அவனது நண்பர்கள் மூலம் முடிந்த அளவிற்கு அனு இருக்குமிடத்தை அறிய எண்ணியவனிற்கு ஏமாற்றமே மிஞ்சியது....அனு வேலை செய்யும் அலுவலகத்தை நம்பியும் எந்த பயனும் இல்லாமல் போனது...
அனு சென்ற முதல் மூன்று நாட்களில் எதுவும் சாப்பிடாமல்,லோ பிபி ஆகி அவள் அன்னை மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலைக்கு சென்ற பின்னே.....அனு பெங்களூரில் இருப்பதாகவும் அதற்கு மேல் தங்கள் இருவருக்கும் எந்த ஒரு தகவலும் தெரியாது என சாதனா,மாதவி கூறினர்....அதன் பின்னரே அவர் சற்று தெளிந்தார்.....
இனி வருங்காலத்தில் தன் மகளின் உணர்வை வருண் க்ராண்டட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவும் அவள் இல்லாத நாட்களில்தான் அவன் செய்த தவறை அவன் முழுமையாக உணர்ந்து தெளிவடைவான் என்பதற்காகவும் அனுவின் அன்னை அவளின் தோழிகளுடன் சேர்ந்து அனு இருக்குமிடத்தை வருணிடம் இருந்து மறைத்தார்....
ஒவ்வொறு முறையும் தன் நண்பர்களிடம் இருந்து அழைப்பு வரும்போதெல்லாம் அனுவை பற்றிய தகவல் ஏதேனும் கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்புடனே வருண் அந்த அழைப்புகளை ஏற்பான்...கல்யாணம் நிச்சயித்த தேதிக்கு இன்னும் ஒரு மாதமே இருக்க,கல்யாண வேலைகளை தொடர்வதா வேண்டாமா என்ற குழப்பத்திலையே எல்லோரும் இருந்தனர்.....
வருண் மட்டும் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் வேலைகளை தொடர்ந்தான்......
அலுவலகத்தில் அனுவின் நெருங்கிய தோழி ஒருவளிடம் பல மாதங்களாய் பின் தொடர்ந்து கேட்டதிற்கு பயனாக வருண் அன்று பெங்களூரில் அனு தங்கியிருந்த லேடிஸ் ஹாஸ்டலின் அட்ரெஸை பெற்றான்....
யாரிடமும் சொல்லாமல் அங்கு சென்றவன்.....உள்ளே இருப்பவர்கள் மூலம் அனு இன்னும் அலுவலகத்தில் இருந்து வராததை அறிந்தவன்,ஹாஸ்டலின் வெளியே அவளுக்காக காத்திருந்தான்.....
YOU ARE READING
நீயே காதல் என்பேன் !!!(completed√)
Non-FictionHighest ranking - 2 in nonfiction 1 in tamilstory மூன்று உயிர் தோழிகளான மாதவி, சாதனா மற்றும் அனுஷியாவின் நட்பின் ஆழத்தையும்....அவர்களின் வாழ்வில் இடம்பெறும் காதல், திருமணம், ஊடல் என்று அனைத்தையும் பேசப் போவதே " நீயே கா...