நறுமுகை 55

3.6K 194 61
                                    


முகி pov:

    நான் ரேஷ்மாவ பாத்து சிரிச்சிட்டே நின்னுட்டு இருந்தேன்....அவ அமைதியா என்னைய பாத்துட்டே நின்னுட்டு இருந்தா....

"என்ன ரேஷ்மா இப்புடி நீ அமைதியா நின்னா என்ன அர்த்தம் சொல்லு....வழக்கமா கெத்தா வீர வசனம்லாம் பேசுவ அதெல்லாம் நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன்....எங்க எனக்காக பேசு பாக்கலாம்...."னு சொன்னேன்...

"ஏய் என்ன திமிரா.....இப்ப என்ன வேணும் உனக்கு....."னு கோவமா கேட்டா

"அப்பா இத இதைத்தான் நான் எதிர்பாத்தேன்....தேங்க்ஸ் டி செல்லம்....ஆமா என்ன கேட்ட எனக்கு என்ன வேணும்னுதான சொல்லுறேன் அதுக்குதான கூட்டிட்டு வந்துருக்குறேன்...."னு நான் சொன்னேன்...

அவ என்னைய பாத்துட்டு மொரச்சிட்டே நின்னுட்டு இருந்தா....

"இனிமேல் நீ கிரிஷ் கிட்ட நெருங்கவே கூடாது.....அவன பத்தின நினைப்ப அடியோட எடுத்துடனும்...."னு சொன்னேன்

அவ நான் சொன்னதை கேட்டு திமிரா சிரிச்சிட்டு பேச ஆரம்பிச்சா...

"என் அண்ணா சொல்லி என் அம்மா சொல்லியே கேட்காத நான் அஃப்ட்ரால் நீ சொல்லி நான் கேட்பேன் நினைக்குறியா...."னு கேட்டா

"ம்ம் கரெக்ட்டு தான் நீ இதைத்தான் சொல்லுவன்னு எனக்கு நல்லாவே தெரியும்....
ஆனா நீ நான் சொல்லுறதை கேட்கலன்னா உன் அம்மா பண்ண கேவலமான விஷ்யத்தை எல்லாருக்கும் சொல்ல வேண்டியது வரும்...."

"என்ன டி ரொம்பதான் மெரட்டுற....ஆமா எங்க அம்மா தான் உன்னைய கொலப் பண்ண ட்ரை பண்ணுனாங்க....அதையும் தாண்டி  பொலைச்சிக்கிட்டியே.....
உன்கிட்ட இதுக்கு எல்லாம் என்ன ஆதாரம் இருக்குது.....உன்னால என்னையோ என் அம்மாவையோ ஒன்னும் பண்ண முடியாது...."னு சொன்னா

"அம்மு குட்டி நான் என்ன நினைச்சேனோ அதைக் கரெக்டா பேசிட்ட டா....ஒரு நிமிஷம் இரு.....அம்மா ஸ்வாத்தி ஷுட்டிங் முடிஞ்சு மா நீ வாமா...."னு ஸ்வாத்திக்கு ஃபோன் பண்ணி சொன்னேன்....

 நறுமுகை!! (முடிவுற்றது)Dove le storie prendono vita. Scoprilo ora