நாம் பேசிய முதல் நாள்
பசுமரத்தாணியாக உள்ளது என் உள்ளக் கூட்டில்....கண்டவுடன் காதல் இல்லை, என்றாலும்
ஏதோ ஒரு சலனம் நம் மனதில்....நாம் பழகிய நாட்கள் அடிக்கடி கூறும் நீ என்னவன் தான் என்று..
முழு நிலவை மறைக்கும் கார்முகில் போல என்னையே ஏமாற்றி என் மனதை மறைக்க முற்பட்ட நாட்களோ பல...
என் மனதை
மறைக்கவோ, ஒதுக்கவோ முற்படாலும், முடியவில்லை - உன் மீதுள்ள என் பொல்லாக் காதல்...என்னை வெற்றிப் பெற வைக்க நீ தோற்ற நொடிகள் ஆயிரம் ...
எனக்கு மட்டுமே தெரியும் வெற்றிக்கொண்டது நீ என்று...எத்தனை துன்பம்....
எத்தனை குழப்பம் ...
எத்தனை போராட்டங்கள்.....எட்டா நிலவை கை நீட்டி பிடிக்க அழும் குழந்தையாய்
மாறியது என் மனது.அன்பே உன்னை காட்டிலும்
யார் புரிந்து கொள்வார்
என் குழந்தை மனதை ?உனக்கென வாழ்வதில் அத்தனை மகிழ்ச்சி என் உயிருக்கு
உனக்கென துடிப்பதில் அத்தனை
இன்பம் இந்த இதயத்திற்குநாம் கை கோர்க்க எத்தனை சிக்கல் ?
உன் மனதில் இருக்கும் வலி
என் மனதில் இருக்கும் பாரம்
நம்மை பெற்றவர்களின் துயரம்
என அத்தனையையும் விரட்டுகிறாய்
தனி ஒரு காதல் வீரனாக..செல்ல சண்டையிட்டு உன் அன்பை
பெற நினைப்பேன் கலங்காதே..
என் செயல்கள் அனைத்தும் காட்டும் உன்
மீதான என் காதல் பைத்தியத்தைஉன் உரிமையை என் மீது
காட்டும் போது என் மனதில்
தோன்றும் மட்டற்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லைஆனாலும், நீ சிறிது முகம் காட்டினாலே
அனண போட்டும் அடங்காது வரும் அழுகையை
கட்டுபடுத்த தெரியாமல்
கலங்க செய்யும் என் காதல் உன்னையும் சேர்த்துநீ சமாதானம் பேசினால் வந்த இடம்
தெரியாமல் மறைந்துவிடும் அப்போதே..எது எப்படியோ
உன்னிடம் பேசிக் களித்தால் தான்
கழியும் என் பொழுதும், இரவும்..எனது இந்த குறும்பால் வருந்தாதே
சில நேரங்களில்.... உன்னை விட்டால்
வேறு ஒருவர் இல்லை எனக்கு
இனி நான் தானே விளையாட உனக்கு ? .வாழ்விலோ, சாவிலோ ஒன்றாகவே பயணிப்போம்.
இன்பத்தையோ, துன்பத்தையோ
ஒன்று போல பாவிப்போம்..நமக்கென ஒரு எதிர் காலத்தை நீ
அமைக்கும் அழகை காண ஏங்கி இருக்கிறேன்..இனி உனக்கும், எனக்கும்
திருமணமாம்........!கடவுளே....
இது என்ன கனவா?
இல்லை என்றாய் உன் காதல் பார்வையால்எனக்கென பிறந்த உனக்கு
பிறந்த நாளாம் இன்று.. ஏன்?
தினமும்
நீ என்னில் பிறந்துக்
கொண்டேதான் இருக்கிறாய்..
நானும் உன்னை சுமந்துக் கொண்டேதான்
இருக்கிறேன்...அடுத்த உன் பிறந்த நாளில்
நீ
என் கணவனாக அல்லவா இருப்பாய் ?காதலனே
அதற்கு முன்பு ஏற்றுக்கொள்
இந்த
முழுக் காதல்
கவியை
ஒரு தொகுப்பாக !கொண்டாடு இந்த ஒரு நாளை தனியாக..
வருவேன் நான் உன் மனைவியாகஎன் மனதில் உள்ளதை
வடிப்பதை தவிர என்ன கொடுக்க முடியும் என்னால்
தொலைவில் நீ இருக்க ? .இதை படிக்கும் போது
உனக்கு ஏற்படும் உணர்வுகளே...உனக்கான என் பிறந்த நாள் பரிசு .........
"Love You Lot Saheer ",
I will be there always for you.
Wishing you with a tight hug and a long kiss,
Happy Birthday my soon hubby !!
YOU ARE READING
பிறந்த நாள் பரிசு
Romanceதூரமாய் இருக்கும் உனக்கு என்னால் என்ன பரிசு தரமுடியும், என் காதலை தவிற. ஆசையும் கனவும் கற்பனையும் கலந்து ஊட்டுகிறேன் ஏற்றுக் கொள் என் அன்பே. என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் வருங்கால காதல் கணவா !!! உனக்கு தெரியும் இது யாரோவால் நமக்காக செதுக்கி...