ஜீவாவின் இந்த ஆறுதல் விஷ்ணுவிற்க்கு கட்டாயம் தேவைப்பட்டது . இதுநாள் வரையில் யாருக்கும் தெரியாமல் தன் மனத்திற்க்குள்ளேயே போட்டு உழன்றுகொண்டிருந்தவனுக்கு இந்த தேற்றுதல் பசியில் இருந்த குழந்தைக்கு வயிறு நிறைய ஆகாரம் கிடைத்த திருப்தியை உண்டுபண்ணியிருந்தது .
“ ரொம்ப தேங்க்ஸ் ஜீவா … இப்போ கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்குடா …. “ என்றவன் சட்டென்று ஏதோ நினைவு வந்தவனாக “ஜீவா …. இப்போ ராம் வெளியதானே போய்ருக்கான். வா அவன் ரூம்ல ஏதாவது கிடைக்குதான்னு பார்ப்போம். ஐ ஆம் நாட் ஷ்யூர் அங்க எதுவும் கிடைக்கலாம் மே பீ கிடைக்காமலும் போகலாம் . ஆனா ஏன் சான்ஸ மிஸ் பண்ணணும் . ட்ரை பண்ணி பார்க்கலாமே !” விஷ்ணுவிடம் ஒரு விதமான பரபரப்பு தொற்றிக்கொண்டது .
"ஹே… ஆமாண்டா … நீ சொல்றது சரிதான்… இது ஏன் ஃபர்ஸ்டே நமக்கு தோணாம போய்டுச்சு… வா வா சீக்கிரம் போகலாம். அவன் வறர்துக்குள்ள ஏதாவது மாட்டுதான்னு பார்க்கலாம்" என்றவனுக்கு விஷ்ணுவின் பரபரப்பு இடம்மாறியது.
இருவரும் விஷ்ணுவின் அறையிலிருந்து வெளிவந்தனர் . விஷ்ணுவின் அறை மாடியில் இருப்பதால் அவன் அறை வாசலிலிருந்து பார்த்தால் கூடத்தில் நடப்பவை அனைத்தும் தெரியும் . இருவரும் அப்போது சரியாக கூடத்தைத்தான் பார்த்தனர் . அங்கே ஒருவரும் கண்களுக்கு அகப்படவில்லை . ராம் இன்னும் வரவில்லை என்பது அவனது கார் வீட்டின் முகப்பில் இல்லாததில் இருந்து ஊர்ஜிதமானது.
ராமின் அறையை அடைந்தவுடன் முதல் வேளையாக கதவை தாழிட்டனர் இருவரும் . ஆளாளுக்கு ஒவ்வொரு இடத்தில் ஆராய ஆரம்பித்தனர் . டேபிள் ட்ராயர் , அலமாரி, ஏன் டஸ்ட்பின் முதற்கொண்டு தேடிக்கொண்டிருந்தனர் . இன்ன பொருளைத்தான் தேடுகிறோம் என்று நினைத்து தேடினாலே அப்பொருள் சற்று நீண்ட இடைவெளிக்கு பிறகுதான் கைக்கு வரும் . இவர்கள் என்ன தேடுகிறார்கள் என்று இவர்களுக்கே தெரியாத பட்ஷத்தில் இவர்களின் தேடுதலின் ஆயுட்காலமும் நீண்டு கொண்டே சென்றது
YOU ARE READING
அது மட்டும் ரகசியம்
Mystery / Thrillerகதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....