என் காதல்-34

3.2K 217 70
                                    

மும்பை மண்ணை தொட்டதும் என்ன செய்வது என்று தெரியாமல்.... முதலில் ஒரு ஹாட்டலுக்கு சென்று ரூம் புக் செய்தாள்

ரூம் மிக அழகாக இருந்தது வாசம் வீசிக்கொண்டும் குளிர்ந்து கொண்டும் இருந்தது.... முதலில் ரெஸ்ட் ரூம் சென்று குளித்து விட்டு சுடிதார் ஒன்றை அணிந்து கொண்டே டவலை உலர்த்த வெளியே சென்றாள்....
யாரோ முனங்கும் சத்தம் கேட்டதும் டவலை பெல்கனியில் போட்டு விட்டு தலையை திருப்பி தேடினாள் விது

அந்த முனங்கும் சத்தம் மிக அருகில் கேட்டது.. சத்தம் கூடிக்கொண்டு வேறு சென்றது... அவள் சுற்றி சுற்றி பார்தது விட்டு.
"யாரோ வேணும் என்று இப்படி பன்றாங்க" என்று பயந்து கொண்டு அறைக்குள் நுழைந்து கதவை லாக் செய்தாள்..... 

தெரியாத ஊர் தெரியாத மொழி தெரியாத மனிதர்கள் என்று கண் திறந்தும் இருட்டில் திரியும் உணர்விது இதற்குள் முனகல் வேறா....

நேரம் இரவு 7மணியை தாண்டி விட்டது டீவி பார்த்துக்கொண்டு இருந்தவள்..
இரவு உணவுக்கான ஓடரை கொடுத்து விட்டு டவலை எடுக்க  கதவை திறந்தாள்...

டவலை எடுக்கும் போது பக்கத்து பெல்கனியில் ஒருவன் தன் கையில் பல வெட்டுக்களை போட்டு கொண்டு அதில வந்த இரத்தத்தை பார்த்து அழுது கொண்டு இருந்தான் அவனை கண்டதும் விதுக்கு தன் பழைய நினைவுகள் வந்து விட்டது...  உடனே அவனை பார்த்து

"அய்யோ அம்மா என்ன பன்றீங்க சார்?"என்று கத்தினாள் பிரச்சிணை என்றாளோ சந்தோசம் என்றாளோ.... முதலில் நம்மோடு அதை பகிர வருவது நம் தாய் மொழி தானே அவளது கூச்சலில் தன் கண்ணீரை துடைத்தவன்  ஒரு பார்வை பார்த்தான் அதில் ஆயிரம் அர்த்தங்கள்...
..பின்பு தலையை கீழே போட்டு கொண்டான்

சிவந்த கண்கள்... கண்ணீருக்கு பதில் இரத்தம் தான் வந்து கொண்டு இருந்தது போல் ஒரு சிவப்பு.... முகமும் அப்படித்தான்.... ரோஜா நிறம் ஆனால் அழுது கொண்டு இருப்பாதால் போலும் இரத்தத்தின் நிறம் கன்னங்கள் மூக்கு... உதடு காது எல்லாம் சிவந்து தொட்டால் இரத்தம் வெளி வந்து விடும் போல் இருந்தது... கையை இருக்க பொத்திக்கொண்டு இருந்தான் அவன் கொடுத்து கொண்டு இருக்கும் அழுத்தத்தில் இரத்தம் அதிகமாக வெளியாகியது....
அவனை பார்க்க கவலையாக இருந்தது விதுக்கு

நீ தான் என்காதலா(முடிவுற்றது)Where stories live. Discover now