உன்ன உங்க வீட்ல தேடுவாங்க. வா நான் கொண்டுப் போய் விட்டறேன் எனக் கிளம்பியவனை கைப் பிடித்து நிறுத்தியவள்...

இதுக்கு என்ன அர்த்தம்னு கேட்டேன் என்றாள் அழுத்தமாக,..

அவள் முகம் பாராமல்.,..

ஒரு அர்த்தமும் இல்ல. நீ முதல்ல உங்க வீட்டுக்கு கிளம்பு என்றவனின் காலரை இறுக்கிப் பிடித்தவள்.,..

ஏன்டா இப்படி இருக்க. உன்ன தேடித் தான வந்துருக்கேன்.இப்பக் கூட உனக்கு என்கிட்ட சொல்லனும்னு தோனலல..என்ன சொன்ன எங்க வீட்டுக்கு கிளம்பனுமா ..அங்க போயி உனக்கு டைவர்ஸ்  குடுத்துட்டு அவங்க பார்த்து வச்சிருக்கவன கட்டிக்கனும் அப்படி தான...என்ன எவனோ ஒருத்தனுக்கு விட்டுக்குடுத்துட்டு நீ என்ன பன்னபோற இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருக்க போற. என் அம்மா சொன்னா உடனே டைவர்ஸ் பேப்பர்ஸ்ல சைன் போட்டுக் குடுத்துருவியா .மனசுல பெரிய தியாகினு நினைப்பா. ம்ம்ம் சொல்லு நான் கேட்கறத்துக்கெல்லாம் பதில் சொல்லு.ஏன் இப்படியே வாய மூடிட்டு நிக்கிற.சொல்லமாட்டல்ல இப்பக் கூட எதுவும் சொல்லமாட்றல.,.என அவனைப் போட்டு உலுக்க சக்தியோ எந்தவித உணர்வும் இல்லாமல் நின்றிருந்தான்.

அவனை விடுவித்தவள்.,,.

ஆனா நான் சொல்றேன் கேட்டுக்கோ என அந்த விவாகரத்துப் பத்திரத்தை கிழித்து அவன் முகத்தில் எறிந்துவிட்டு.,.

நான் உன்ன விரும்புறேன் சக்தி. என்னால நீ இல்லாம இருக்கமுடியாது.நீ எனக்கு வேணும்டா. என் ஆயுள் முழுக்க நான் உன்கூட வாழனும்னு ஆசைப்பட்றேன் உனக்கு ஒரு தோழியா.,நல்ல காதலியா,அன்பான மனைவியா ,உன் குழந்தைக்கு அம்மாவா வாழனும்னு ஆசைப்பட்றேன். என்ன ஏத்துப்பியா என கண்ணீரும் காதலுமாய்  கேட்டவளை அதுவரை இறுக்கத்துடன் நின்றிருந்தவன் காற்றுப்புகாத அளவிற்கு இறுக்கி அனைத்து அவள் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான்.

அவன் கண்ணீர் அவள் தேகத்தை நனைக்க அவன் உதடுகளோ ஐ லவ் யூ ஆதிரா என முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

இதய திருடா Where stories live. Discover now