என்ன சக்தி திடீர்னு...என கேட்டவளிடம்.,..
சும்மாதான் தோனுச்சு...போலாமா,.
என்றவனிடம் ,..அழகாக தலையை ஆட்டியபடி போலாம் என்றாள்.மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷத்துடன் அவன் பினன்னால் அமர்ந்தவள்.,,.
என்ன ஸ்பெஷல் புதுசா கோவிலுக்கெல்லாம் கூட்டிட்டுப் போற என்றவளிடம் ...
சொல்றேன் என்றவன் வண்டி ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.
அருகிலுள்ள அம்மன் கோவிலின் முன் வண்டியை நிறுத்தி இருவரும் இறங்கி கோவிலின் வாயிலை நோக்கிச் சென்றனர்.
திடீரென சக்தி நிற்கவும் தானும் நின்றவள்..
இப்ப என்ன...
இங்க வா என அவளைப் பூக்கடைக்கு அழைத்துச் சென்றவன் .,
ஒரு முழம் மல்லிகைப் பூவும் ஒரு சிவப்பு நிற ரோஜாவும் வாங்கி அவளதுக் கையில் கொடுத்தான்.
பூவை சூடிக் கொண்டவளின் உள்ளம் சந்மோஷத்தில் துள்ளிக் குதித்தது.
சாமிக்கு மாலையும் பூஜைத் தட்டையும் வாங்கிக் கொண்டவர்கள் உள்ளே சென்று அம்மனை தரிசித்தனர்.
யார் பேர்ல அர்ச்சனை என குருக்கள் கேட்கவும்.,..
முந்திக் கொண்ட சக்தி ...பேரு
ஆதிரா பரணி நட்சத்திரம் மேஷம் ராசி என்றிட குருக்கள் மந்திரத்தை உச்சரித்தபடியே பூசையைத் தொடங்க ஆதிரா சக்தியையே புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.அவளிடம் சாமியக் கும்பிடு என சைகை செய்தவன் தானும் கண்மூடி அம்மனிடம் மனதார வேண்டிக் கொண்டான்.
பிரஷாதத்தைப் பெற்றுக் கொண்டு சன்னதியில் இருவரும் அமர ஆதிரா தான் முதலில் ஆரம்பித்தாள்,.,
போதும் சக்தி இதுக்கு மேலத் தாங்காது. சொல்லு என்ன திடீர்னு கோவிலுக்கு கூட்டிட்டு வர என் பேர்ல அர்ச்சன பன்ற எனக்கு ஒன்னும் புரியல...
சக்தி அவளிடம் கை நீட்ட ஆதிராவும் நீட்டினாள்.
அவளது கையை மென்மையாகப் பிடித்துக் குலுக்கியவன்,., சிரித்துக்கொண்டே ...
BẠN ĐANG ĐỌC
இதய திருடா
Lãng mạnஎதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்