இப்ப நீ சொல்லலனு வையி...கழுத்த நெறிச்சிக் கொன்னுடுவேன் என்றவன் அவனது பிடியை இன்னும் இறுக்கினான்.

சார் சார் சொ,சொல்லிடுறேன் விட்ருங்க சார்,என தினறியவனை விடுவித்தவன் ...

அவன் மூச்சுவாங்குவதற்காக சில நிமிடங்கள் இடைவெளி விட்டான்.

இப்ப சொல்லு எதுக்கு அப்படி பன்ன.,என சக்தி அவனது கையை முறுக்கியபடி கேட்க.,.

பயத்தில் எச்சிலை விழுங்கியவன் ...என் என்ன காசுக் குடுத்து அப்படி பேச சொன்னாங்க சார்...

யாரு ...

ரேஷ்மா ...என அவன் கூறவும் சக்திக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ரேஷ்மாவா என்ன சொல்ற ...என சக்திக் கேட்க,.

ரேஷ்மா தான் .,அவங்க என்னோட காலேஜ் சீனியர்,என்னைய ரேகிங்லாம் கூட பன்னிருக்காங்க,,....நான் நல்லா நிமிக்கிரி பன்னுவேன்
காலேஜ் படிக்கும் போது.,...

மூனு நாளைக்கு முன்னாடி என்ன அவங்க பாக்க வந்தாங்க,..யாரோ மதனாம் அவங்க வாய்ஸ் ரெக்காடிங்க என்கிட்ட குடுத்து இந்த வாய்ஸ்ல பேசிகாமினு சொன்னாங்க. நானும் பேசி காமிச்சேன்.

அப்றம் ஆதிரானு ஒருத்தவங்களோட நம்பர குடுத்து மதனோட வாய்ஸ்ல மிரட்ட சொன்னாங்க. காசு தரதா சொன்னாங்க. சரினு நானும் செஞ்சிட்னேன்.என சொல்லி முடித்தவன் பயத்துடனே .,,

சார் நீங்க...என இழுக்க,.

சக்தி டா.,நீ கொல்லப்போறதா சொன்னியே அது என்னத்தான் என்றவன் ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தியபடி பார்க்க.,.

அதில் நடுங்கியவன் .,.

காசுக்காக அப்படி பன்னிட்டேன் சார் மத்தபடி உங்கள யாருனு கூட எனக்குத் தெரியாது...

ம்ம்ம் காசு வாங்கிட்டியா...

சார் என இழுத்தவனிடம் .,

ரேஷ்மாக்கிட்ட காசு வாங்கிட்டியானுக் கேட்டேன் என சக்தி குரலை உயர்த்தவும்...பம்மியவன்...

அட்வான்ஸ் மட்டும் தான் தந்துருக்காங்க மீதிய இன்னக்கி தரதா சொன்னாங்க ...

இதய திருடா Where stories live. Discover now