அவள் அழுகையுடன் அவனை அனைக்கவும் சக்திக்கோ ஒன்றும் புரியவில்லை.கையில் வைத்திருந்த பேகையும் மொபைலையும் அப்படியே கீழே போட்டவன் அவள் வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருந்தான்.

மெல்ல அவனது கையால் அவளது தலையை வருடியவன்
உனக்கு என்ன ஆச்சு ஆதிரா.,.ஏன் அழறனு பர்ஸ்ட் சொல்லு என்றவனின் வார்த்தைகள் அவளின் காதில் விழவில்லை.

சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தாள்.

பாரு
எனக்கு ஒன்னும் ஆகல நான் நல்லாதா இருக்கேன்,..யாரால என்ன என்ன பன்னமுடியும் ...அவன் அவன் சொல்றியே அது யாரு...யாரச்சும் உன்கிட்ட பிரச்சன பன்னாங்களா...மதன் எதுவும் மிரட்டுனான என்றவுடன் திடுக்கிட்டு அவனிடமிருந்து விலகினாள்.

சக்தி அப்போது தான் கவனித்தான் ஆதிராவின் முகம் அழுது அழுது வீங்கியிருந்தது.அவள் முகத்திலிருந்த பயம் அப்பட்டமாகத் தெரிந்தது.

அவள் முகத்தை ஆராய்ந்தவன் ஏதோ பிரச்சனை என அறிந்துக் கொண்டான்.

என்னாச்சு ஏன் இப்படி அழுதுருக்க ...முகமெல்லாம் வீங்கிப் போயிருக்கு...என்றவுடன் அதிர்ச்சியிலிருந்து வெளி வந்தவள்,..

அது நீ போன் சுவிட்ச்டு ஆஃப் வர லேட்டு ஏன் உலற,..

அதுக்கா அழுத...போன் சார்ஜ் இல்லாம சுவிட்ச்டு ஆஃப் ஆகிருச்சு. நேத்து நான் பன்ன டிசைன்ல ஒரு மிஸ்டேக் அதான் அத ரீகரக்ட் பன்னிட்டு வர லேட்டாகிருச்சு,,டோர் கீய இங்கயே விட்டுட்டிப் போயிட்டேன் அதான் காலிங் பெல் அடிச்சேன் எனத் தெளிவாக விளக்கினான்.

ஆனால் அவள் தான் தெளியவில்லை ஒரே குழப்பமாக இருந்தது. மதன் சக்தியிடம் பிரச்சனை செய்யவில்லை என்பது தெளிவாகப் புரிந்தாலும் அவன் மிரட்டியது தன்னை பயமுருத்தி அழ வைப்பதற்காகவா இல்லை உண்மையிலேயே நான் சக்தியை விட்டுப் பிரிய வேண்டும் என்பதற்காகவா என குழம்பிக் கொண்டிருக்க ...அவளது தெளிவடையாத முகத்தைக் கண்டவன்...

என்னதான் ஆச்சு ஆதிரா ஏன் இப்படி அழுதுருக்க எதாவது பிரச்சனனா சொல்லு மதன் எதாவது பிரச்சன பன்னான .,எதாச்சும் சொல்லு என சக்தி உரக்கக் கத்தவும்.,

இதய திருடா Where stories live. Discover now