மூன்று நாட்கள் கழிய இப்போது சென்னை போக தந்தையிடம் கேட்க வேண்டும் என்பதறகாக கையை பிசைந்தபடி வந்தவள் தன் தந்தையின் முன் மண்டியிட்டு அமர்ந்து ....
அப்பா அது,...அது வந்து நான் உங்க கிட்ட ஒன்னு கேட்டா கோவப்படமாட்டீங்ளே என்றாள் தரையைப் பார்த்தபடி,.
அவளது தலையை மெல்ல வருடியவர்...
என்னம்மா.....
நான் சென்னைக்குப் போகவா .,அத்..அதாவது மறுபடியும் வேலைக்குப் போகவா என திக்கிதிணறியவள் தன் தந்தையைப் பார்க்க.,.
அவரது முகபாவனை மாறாமல் அதே சிரிப்புடன்.,..ம்ம்ம் போயிட்டு வா மா,..
முப்பத்திரண்டுப் பல்லு தெரியும் அளவிற்கு சிரித்தவள் தேங்க்ஸ் பா ,..
சந்தோஷத்தில் பேக் செய்வதற்காக தன் அறையை நோக்கி ஓடிய மதியழகியை கம்பீரமானத் தன் தந்தையின் குரல் நிறுத்தியது.
மதிமா,..
சட்டன் பிரேக் அடித்து திரும்பியவள் சொல்லுங்கப்பா என்றிட...
நீ சென்னைக்குப் போ வேண்டானு சொல்லல ஆனா நான் பார்த்திருக்குற மாப்பிள்ளைய கல்யாணம் பன்ன சம்மதம்னு சொல்லிட்டுப் போ.,.
இந்த மூன்று நாட்களில் தன் பக்கத்து வீட்டு குட்டீஸ் உடன் சேர்ந்து ஆடிய ஆட்டத்தில் வருணை மறந்துப் போயிருந்தாள்.
இப்பொழுது திருமணத்தைப் பற்றி சங்கரன் பேசவும் வருணின் நினைவு வந்தது.
அன்று வருணிடம் இது போன்ற எண்ணம் எனக்கில்லை என அவன் காதலை மறுத்திருந்தாலும் மதியழகியின் மனதில் வருண் இருப்பது உண்மை.
நிச்சயம்
வருணைத் தவிர வேறு ஒருவனை தன் மணாளனாக மதியழகியினால் நினைத்துக் கூட பார்க்க முடியாது..
.
.
.
.
.
.
.ஆதிரா சக்தியை காதலிப்பதாக பாரதியிடம் கூற அவளுக்கோ தலைக்கால் புரியவில்லை.சந்தோஷத்தில் அஸ்வினை ஒரு வழியாக்கினாள்.ஆதிரா தான் சக்தியுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியையும் அணுஅணுவாக இரசித்து வந்தாள்.
ŞİMDİ OKUDUĞUN
இதய திருடா
Romantizmஎதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்