சுற்றிலும் பச்சை பட்டாடை உடுத்தியது போலிருந்த வயல்வெளியில் உள்ள நெற்கதிர்கள், வீசும் தென்றல் காற்றிற்கு ஏற்ப நர்த்தனம் செய்து அவர்களை வரவேற்ப்பது போலிருந்தது . மலைத்தொடர்களின் அழகினை இரசித்துக்கொண்டே வந்த விஷ்ணுவின் கண்களுக்கு ஒரு வித்தியாசமான இடம் புலப்பட்டது. அது ஒரு குன்று அதில் பல விசித்திரமான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.

"டேய் ராம் அது என்னடா அந்த குன்று ரொம்ப வித்தியாசமா இருக்கு… என்னென்னவோ பெயிண்ட் பண்ணி வச்சிருக்காங்க… " என ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டான்.அக்கேள்வியை கேட்ட மாத்திரத்தில் ராமின் முகம் சுருங்கியது.உடனே பேச்சை திசை திருப்பினான் ராம்.

ராமின் முகமாற்றத்தைக்  கவனித்த விஷ்ணு சட்டென்று ஏதும் கேட்காமல் அமைதியானான். ஆனால் மனதிற்குள் அந்த குன்றைப்பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் உருப்பெற ஆரம்பித்தது.

விஷ்ணுவின் மனதினில் உருவான ஆர்வத்தினை அறியாத ராம் "அப்பாடா  நல்ல வேளை பேச்சை மாத்திட்டோம். இல்லைன்னா அந்த கிரகம் பிடிச்ச குன்றை பத்தி சொல்லியிருக்கனும்" என பெருமூச்சுவிட்டான். 

சிறிது நேரத்திலேயே நம் நண்பர்கள் குழு  ராமின் வீட்டை அடைந்தனர். அதைப்பார்த்து யாரும் வீடு என்று சொல்ல மாட்டார்கள் ஏனேனில் பார்பதற்கு அரண்மனை போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தது அவ்வீடு. 

ராமின் குடும்பம் விடையூரில் புகழ்பெற்ற குடும்பம் .காலம் காலமாக அவ்வூர் சிவன் கோவிலில் தர்மகர்த்தாவாக இருப்பவர்கள். விடையூரில் உள்ள அநேக இடங்கள் இவர்களுடையது பல நாட்கள்  கழித்து  வரும்  பிள்ளைக்காக அவன் வீட்டில் சமையல் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.

  வீட்டினுள் நுழைந்தவுடன் வந்த சமையலின் நறுமணம் ஜீவாவின் நாசியைத் துளைத்தது." நண்பா இன்னைக்கு உங்க வீட்ல செம விருந்து போல வாசமே கமகமனு வருதே "என்றான்

"டேய் சாப்பாட்டு ராமா வாசனைய வச்சே கண்டுபிடிக்கிறயேடா அல்டிமேட் மச்சி நீ.ஆனா ஒரு தப்பு செய்துட்ட டாக்டர்க்கு படிச்சதுக்கு பதிலா போலீஸ் ஆகிருக்கலாம் மொப்ப நாய் செலவாவது மிச்சமாகியிருக்கும் கவர்ன்மென்ட்க்கு" என்று விஷ்ணு ஜீவாவை கேலி செய்தான்

அது மட்டும் ரகசியம்Donde viven las historias. Descúbrelo ahora