தினமும் சிட்டியில் நடக்கும் கொடூர நிகழ்வுகளை தொலைக்காட்சியிலும், செய்தித்தாளிலும் பார்த்து அறிந்தவளுக்கு பட்டணம் பற்றிய பயம் இருந்தாலும் படிப்பிலும் வேலையிலும் இருந்த ஆர்வம் அவளை இங்கு அழைத்துவந்தது.ஆனால் தனிமையில் வந்திருப்பவளின் மனதில் பயம் ஆட்சிக் கொள்ள அதற்கு அடிமையானவள் போல் அனைத்திற்குத் பயப்பட தொடங்கினாள் நம் மதியழகி.

சக்தி வீட்டிற்கு வந்தபோது ஆதிரா வீட்டில் இல்லை.அவளை போனில் பலமுறை அழைத்தும் தோல்வியே.புல் ரிங்காகி கட்டானது.

எப்பொழுதும் டியூட்டி முடிந்தவுடன் நேராக வீட்டிற்கு வருபவள் இன்னும் வந்து சேராதது சக்திக்குப் பதட்டத்தைத் தந்தது.

ஒரு நொடிக் கூட தாமதிக்காமல் பைக்கில் ஆதிரா பணிபுரியும் மருத்துவமனைக்கு விரைந்தான்.

அவனது போன் சத்தமிட அதை எடுத்துப் பார்த்தவன் நிம்மதி அடைந்தான்.

கால் செய்தது நம் ஆதிரா தான்.

பைக்கை ஓரமாம நிறுத்தியபடி போனை காதில் வைத்தான்.

ஹலோ .,,.ஆதிரா எங்க இருக்க. ஏன் போன் பன்னா எடுக்கமாட்ற என அவன் பாட்டிற்குப் பேச எதிர் புறத்தில் ஆதிராவின் அழு குரல் கேட்டது.

மனம் பதற .,ஆதிரா ஏன் அழற.,.உனக்கு எதுவும் இல்லல.,என்னாச்சுனு சொல்லு ..,

சக்.,,சக்தி...என அவள் தேம்ப மனமுடைந்தவன்.

ஆதிரா ப்ளீஸ் ரிலாக்ஸ்.,..அழாத என்ன ஆச்சுனு சொல்லு..

அப்.,.,அப்பாக்கு ஆக்ஸிடன்ட் சக்தி என மீண்டும் தேம்பியவளிடம் ,,.

அப்பாக்கு ஒன்னும் ஆகாது நீ எங்க இருக்கனு சொல்லு நான் வரேன் என விவரத்தைப் பெற்றுக் கொண்டவன் ஹாஸ்பிட்டலிற்கு விரைந்தான்.

ஆதிரா பணிபுரியும் எஸ் கே மருத்துவமனையில் தான் அவளது தந்தையை அட்மிட் செய்யப்பட்டிருப்பதாகவும், ஆதிரா அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையிலிருப்பதாகவும் கூறினாள்.

மின்னல் வேகத்தில் அந்த மருத்துவமனையை அடைந்தவன் ரிசப்சனில் ஆதிராவின் அறை எதுவென கேட்டு அறிந்துக்கொண்டு விரைந்தான்.

சக்தி அந்த அறையின் கதவைத் திறக்க ஆதிரா டேபுளிற்கு அருகில் தரையில் அமர்ந்து கண்களை மூடியபடி சுவரில் தலை சாய்த்தமர்ந்திருந்தாள்.

அந்த நிலையில் ஆதிரா கண்டவன் அவளைத் தன்னோடு அனைத்து ஆறுதல் கூற வேண்டுமென்பது போல் இருந்தது.தனது இயலாமையை எண்ணி நொந்துக் கொண்டான்.

சக்தி ஆதிரா என அழைத்த அடுத்த நொடி சிறு பிள்ளைப் போல் தேம்பியடி ஓடி வந்து அவன் முன் நின்றாள்.

சக்தி ,,அப்பா அப்பா.,, நான்.,.. என தேம்பலில் திக்கியவளை சேரில் அமர வைத்து தண்ணீர் குடிக்கவைத்தான்..

Hi frds na indha story ku iruvar mattum nu title vachi sakthi aadhira voda lyf pathi mattum sollalamnu irundhen .....aaana varun kum jodi irundha nalarukum nu dha madhiya konduvandhen......avaloda flashback sathiyama mokkaiya irukumnu enakey therium idhukumela enoda brain edhaium yosikamaatangudhu frds ......romba mokkaiya irundha ena thittadhinga.......bye frds

இதய திருடா Dove le storie prendono vita. Scoprilo ora