என் அன்புள்ள மரு மகளுக்கு ......

இந்த கடிதம் உன்னவந்தடையறப்ப நான் உயிரோடு இருப்பேனானு தெரியலமா. கொஞ்சனாளாவே உடம்புக்கு ஒரு மாதிரி இருக்கு வேலுக்கு தெரிஞ்ச துடிச்சி போயிருவான் மா அதான் நான் சொல்லல.அவன் என்னோட உயிருக்கும் மேலடா.  அவன விட்டுப் பிரிய எனக்கு மனசு இல்லடா.எல்லாம் விதி கைல. அவர் போனப்பறம் எனக்குனு யாரும் இல்ல வேலு மட்டும் தான். அவர் இருந்தப்ப மதிச்ச உறவுக்காரங்களாம் அவர் போனப்பறம் எங்கள மதிக்கல. என் பையன அவங்க முன்னாடி நல்ல நிலமைக்கு உயர்த்தனும்னு நினைச்சேன் முடிஞ்சளவு உயர்த்திட்டேன்.அவனுக்கு அங்க இருக்கறதுல விருப்பம் இல்ல எனக்கும் தான். ஆனா அத வெளிக்காட்டிக்கல. ஆனா அவன் புரிஞ்சிக்கிட்டான் என்ன இந்த டவுனுக்கு கூட்டியாந்துட்டான்.எனக்கு அவனுக்கு   ஒரு நல்ல வாழ்க்கைத்துணைய குடுக்கனும்னு ஆசை. அவன்கிட்ட சொன்னேன் ஆனா மறுத்துட்டான்மா.இந்த கூட்டுக்குள்ள நம்ம மட்டும் இருக்கலாம் வேற யாரும் வேண்டானு சொல்லிட்டான்.
அவனுக்கு என் மேல அளவுக்கடந்த பாசம் அதான்.அவன் மனசு வெள்ளை மா நம்புனவங்கள கை விட மாட்டான்.என்ன கொஞ்சம் அழுத்தக் காரன் அவ்வளவுதான். என்ன விட்டு எப்படி இருக்கப்போறானு தெரியல.அவன் நல்ல மனசுக்கு நல்ல வாழ்க்கை அமையும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அந்த ஆண்டவன் கை விட மாட்டான்.எனக்கும் மகன் மருமக பேரன் பேத்தினு வாழ ஆசை ஆனா விதி அதோட பக்கத்துக்கு என்ன இழுக்குதே. நான் சாகறத்துக்குள்ள நீ வந்த உன்ன பாத்துட்டு போயிருவேன். எனக்கு அந்த பாக்கியம் இல்ல போல இன்னும் கொஞ்ச நாள் தான்.அவன பாத்துக்கோடா டக்குனு மனசுல உள்ளத வெளிய சொல்லமாட்டான். உன்ன ராணி மாதிரி பாத்துப்பான் எந்த குறையும் வைக்கமாட்டான். நீ வருவன்ற நம்பிக்கைல தான் நான் போறேன். உனக்கு நான் சேத்து வச்ச நகை அதுக் கூட ஒரு புடவையும் சுத்தி அந்த துணிப்பைல வச்சி பீரோவுல வச்சிருக்கேன் இப்பவே எடுத்துக்கமா ஏதோ இந்த அத்தையால முடிஞ்சது.இதுக்கு மேல என்னால எழுத முடியல நெஞ்சு வலிக்குது. கண்டிப்பா நீ என்னோட மகன நல்லாபாத்துப்பன்ற நம்பிக்கைல நான் போறேன்.

இதய திருடா Dove le storie prendono vita. Scoprilo ora