💔11💔

2.1K 128 131
                                    

சிந்துஜாவின் உடைமைகள் என அந்த வீட்டில் சேகரித்ததை எண்ணி சரியாக நான்கு பிக் ஷாப்பருக்குள் அடக்கி சித்தார்த்தின் வீட்டிற்கு எடுத்து வந்தனர்.

ஒருவித தயக்கத்துடனேயே அவன் வீட்டில் காலடி எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள் சிந்து. தருண் தான் ஆர்வமாக வீடு முழுக்க சுற்றி சுற்றி வந்து பார்த்தான்.

அதைக் கண்ட சித்து, "என்ன தலைவரே வீட்டை சுற்றி சுற்றி வருகிறீர்கள்? எதுவும் நிறை குறை உண்டா?" என அவனிடம் குனிந்து கேலியாக கேட்க, ஹாங்... என விழித்த தருண் "நீங்கள் பேசறது எனக்கு புரியலைப்பா?" என்று அழகாக கை விரித்தான்.

கலகலவென்று நகைத்தவன், "அது... நம் வீடு எப்படி இருக்கிறது என்று கேட்டேன்!" என விளக்கினான்.

"ம்... நல்லா தான் இருக்கு. ஆனால் ஏன் ஒன்னுமே இல்லை, கட்டில், பீரோ, சோபா எதுவுமேயில்லை?" என்று யோசனையோடு கேட்டான்.

அவனை தாழ்த்தி மதிப்பிடுவதாக சித்து எதுவும் தவறாக நினைத்துக் கொள்ளப் போகிறான் என்ற பதட்டத்தில் தருணை அதட்டினாள் சிந்து.

"தருண் என்ன பழக்கம் இது? இப்படித்தான் பேசுவார்களா?" என லேசாக முறைத்துப் பார்த்தாள்.

"உஷ்... இப்பொழுது எதற்கு குழந்தையை விரட்டுகிறாய்? அவன் மனதில் என் மீது தோன்றியிருக்கின்ற உரிமையை தான் இது காட்டுகிறது. தன் அப்பா என்கிற எண்ணத்தில் கேட்கிறான், இதில் எந்த தவறும் இல்லை. தயவுசெய்து அவனை ஏதாவது அதட்டி எங்களுக்குள் உருவாகும் நெருக்கத்தை கெடுத்து விடாதே... அவனிடம் எதையும் நீ திணிக்க வேண்டாம், அவனியல்பு போல அவன் நடக்கட்டும். ஏதாவது தவறிழைத்தால் நானே சுட்டிக் காட்டுகிறேன்!" என்றான் தீர்மானமாக.

அவள் எதுவும் பேசாமல் தலைக்குனிய, சில நொடிகள் பார்த்தவன் அவளை நெருங்க சிந்துவின் முகத்தில் லேசான மிரட்சி தோன்றியது.

'இது என்ன இவ்வளவு தூரம் எடுத்து சொல்லியும் இப்படி பயப்படுகிறாள்? சரி போக போக தான் சரியாகும். தருண் மாதிரி இருந்தால் கூட நம்பும் விதமாக இவளுக்கும் ஏதாவது கதையை உருவாக்கி அவனைப் போலவே இவளையும் இயல்பாக பழகும்படி செய்து விடலாம்!' என்றெண்ணியவனுக்கு சிரிப்பு வந்தது.

நானொரு சிந்து...Where stories live. Discover now