அங்கோ..,..
நிஷா,ஷீலா,வர்ஷா,வேணி, கயல், மிருதுளா,தேவி என தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர்.

நிஷா தான் முதலில் துவங்கினாள்,.,.... 

"நீங்க ரொம்ப லக்கி....சக்தி எவ்ளோ நல்லவர் தெரியுமா".,,..

"நீங்கள் வாங்க போங்கன்லாம் பேச வேண்டா ஆதிரானே கூப்பி்டுங்க" ...என சிறு புன்னகையுடன் ஆதிரா கூற.

"ஹாஹா ஓகே ஆதிரா .  ஹான் எங்க விட்டேன். ம்ம்ம் நீங்க ரொம்ப லக்கி.
இங்க சக்தி 3 இயர்ஸ்க்கு மேல வொர்க் பன்றாரு. யாரையும் ஏறெடுத்துப் பார்த்தது இல்ல.ஏன் எங்க யாருக்கூடையும் பேசமாட்டாரு.தப்பா எடுத்துக்காதிங்க எங்க எல்லாருக்கும் சக்திய ரொம்ப பிடிக்கும். இங்க நிறைய பேர் அவருக்கு ப்ரப்போஸ் பன்னிருக்காங்க யாரையும் அக்சப்ட் பன்னல. அட இங்க ஒருத்தி ரெண்டு வருஷமா சக்தி பின்னாடி சுத்துனா. நோ யூஸ். .அவளுக்கும் அப்படி தான் வேணும். ஆனா இப்பதா புரியுது அவர் உங்கள லவ் பன்னிருக்காருனு. சக்தி மனசுல இடம் புடிச்ச பொண்ணு யாருனு பார்க்கனும்னு தோனுச்சு அதான் உங்கள தேடி வந்தோம்."...என்றாள்.

"ஹோ"...என்றவளுக்கு அதற்கு மேல் என்ன பேசுவதென்று தெரியவில்லை.

"அப்றம் உங்க லவ் ஸ்டோரிப் பத்தி சொல்லுங்க"... என நிஷா ஆர்வமாக கேட்க.

அதுவரை  அமைதியாக அவள் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தவள். நிஷா அவ்வாறு கேட்கவும் திரு திருவென முழித்தாள்.

"என்ன ஆதிரா இப்படி முழிக்கிற"...என்றதும் ...

அதற்கு வேணி என்பவள் ..

"ஓ.,,. எங்க இருந்து ஆரம்பிக்கிறதுனு தெரியலயா. ஒகே நாங்க கேட்கறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க"... என அவள் முடிக்குமுன் அனைவரும் கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தனர்.

"எங்க மீட் பன்னிங்க?"...
"எப்படி மீட் பன்னிக்கிட்டிங்க?"...
"மோதல்ல ஆரம்பிச்ச காதலா?"...
"யாரு பர்ஸ்ட் லவ் சொன்னது?",..

இவர்களின் கேள்வியில் ஆதிராவிற்கு தலை சுற்றுவது போல் இருந்தது...

இதய திருடா Onde histórias criam vida. Descubra agora