2. அன்னையர் தினம்

29 2 8
                                    


20 செப்டம்பர் 2000

முத்துலட்சுமியின் கணவன் மாணிக்கத்திற்கு பட்டாளத்தில் வேலை. நான்கு நாட்கள் முன்பு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலை எதிர்த்து போராடி உயிர் இழந்த இந்திய ராணுவத்தினருக்கு கேம்பில் இறுதி மரியாதை நடந்து கொண்டிருந்தது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் வருகை தந்து, அஞ்சலி செலுத்தி, வீரர்கள் சிலரின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொண்டிருந்தார்.

வந்திருந்த முக்கியஸ்தர்களுக்கான தேநீரும் சிற்றுண்டியும் தயார் ஆனதும் கேம்ப் உணவகத்திலிருந்து வெளிப்பட்டான் அந்த கேம்பின் சமையல்காரன் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த மாணிக்கம்.

 கேம்ப் இருந்த இடத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு இருந்தது. வீரர்களின் உறவினர்கள் வந்த பேருந்திலிருந்து ஒரு முகமுடி உருவம், மத்திய மந்திரிக்கு குறிவைத்தது. இதை தற்செயலாக கவனித்த மாணிக்கம்

"மந்திரி ஜி..." என அலறியபடி அவரை முழூ பலத்தோடு தள்ள, துப்பாக்கியின் குண்டு அவன் நெற்றியில் பாய்ந்தது.

****

உளுந்தூர்பேட்டை அருகே ஒரு கிராமம்:

ஒரு வயது அஞ்சுகத்தை இடுப்பில் சுமந்திருந்த முத்துலட்சுமிக்கு தந்தி மூலம் வந்த தகவலை தெரிவித்தார் அவளது மாமனார்.

"இல்ல மாமா அது அவங்க இல்ல.. பாப்பாவை இன்னும் இவங்க பாக்கவே இல்ல மாமா. லீவு கேட்டு ஆபிஸருக்கு கடுதாசி போட்ருக்காக. காது குத்துக்கு நாள் குறிக்க சொன்னாங்க தான? அவரு வந்துருவாரு.."

"பைத்தியக்காரி அப்ப இது என்ன டீ"
கதறினார் தந்தியை அவள் கையில் திணித்து.

தட்டச்சு எழுத்துக்கள் எல்லாம் சிதறிய எள் மணிகளாக தெரிந்தன. இடம் வலமாக தலையை வேகமாக ஆட்டி, தந்தி காகிதத்தை கீழே போட்டாள்.

"அது சும்மா மாமா" கண்கள் கலங்க, தொண்டைக் குழியிலும் வயிற்றிலும் ஆயிரம் ஈட்டிக்கள் இறங்க நிதர்சனத்தை ஏற்க மறுத்தது அவளது காதல் நெஞ்சம்
"த.. த...தமாசு காட்றதாம் என்னமோ சொன்னாகளே சேக்காளிங்க கூட கே... கேம்புல இப்புடி தமாசு... கா... காட்டி..."

நல்லதோர் வீணை செய்தே..Место, где живут истории. Откройте их для себя