பகுதி 10

101 10 6
                                    

குறை ஒன்றும் இல்லை..

பகுதி 10

"வா ரோஜா கார் வந்துடுது.... நானும் உன் கூட அப்பாவை பாக்க வரேன்"... என்று கனகா சொன்னதும்... ரோஜா கண்களை துடைத்து கொண்டு தன் காலணிகளை அணிந்தப்படி கனகாவின் வீட்டில் இருந்து வெளியே வந்தவள் கண் எதிரில் காருடன் நின்று இருந்தான் துர்வன்....

"என்ன மா அப்படி பாக்குற.... உன் அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லன்னு கனகா துர்வாவுக்கு call பண்ணாள் .... நான் தான் நம்ம எல்லோருமே போய் உன் அப்பாவை பாக்கலாம்ன்னு சொன்னேன்... வா நம்ம காருலேயே உன் ஊருக்கு போகலாம்".. என்று துர்வாவின் தாத்தா சொல்ல.... குழந்தை திக்ஷி காரின் பின் இருக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

"எதை பற்றியும் யோசிக்காத ரோஜா..அப்பாவுக்கு பயப்புடுற மாதிரி ஏதும் நடக்காது... நீ வா நம்ம துர்வா காருல போகலாம்".. என்று கனகா ரோஜாவிற்கு தைரியம் சொல்ல.... ரோஜா,துர்வா, கனகா, தாத்தா என்று அனைவரும் குழந்தை திக்ஷியுடன் ரோஜாவின் ஊருக்கு கிளம்பினார்கள்.....

வழியெல்லாம் ரோஜா தன் தந்தையை நினைத்து கவலையாக அழுதவளை ஆறுதல் படுத்தியது துர்வா தாத்தாவின் வார்த்தைகள்...

குழந்தை திக்ஷி காரில் பயணம் செய்யும் களைப்பில் நிம்மதியாக உறங்கி கொண்டு வந்தாள்...

பயணிக்கும் வழியில் வண்டியை நிறுத்தி வயிற்றுக்கு உணவை தந்தவர்கள்.... சில மணி நேர பயணத்தில் ரோஜாவின் ஊரை சென்று அடைந்தார்கள்...

"ரோஜா.... என் தம்பிக்கு நான் call பண்ணிட்டேன்... உன் அப்பாவை இப்போ தான் ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து இருக்காங்களாம்... சோ நம்ம உன் வீட்டுக்கே போயிடலாம்".. என்று கனகா சொன்னதும்.. துர்வா தன் காரை ரோஜாவின் வீட்டை நோக்கி விரட்டினான்...

தன் வீட்டு வாசலில் துர்வாவின் கார் நின்றதும்.. ரோஜா காரில் இருந்து வேகமாக தன் வீட்டுக்குள் இறங்கி ஓடியவள்.. கண் எதிரில் சோர்வாக கட்டிலில் அமர்ந்து இருந்தார்
ரோஜாவின் அப்பா....

ℝ𝕆𝕁𝔸🌹Where stories live. Discover now