அன்றொருநாள் மாலை வீட்டுக்கு வந்தபோது, சோபாவில் அமர்ந்திருந்த தாரா அவனைக் கண்டதும் புன்னகைத்து எழுந்து வந்தாள்.

"உங்க AN க்ரூப்ஸ்ல, போன வருஷம் மட்டும் பதினெட்டு புது ப்ராடக்ட்ஸ் தயாரிச்சு மார்க்கெட்ல வெளியிட்டீங்களாமே?"

திடீரென சம்பந்தமே இல்லாமல் அவள் கேட்க, ஆதித் வியப்பாகப் பார்த்தாள்.

சிரித்தவள், தன் கையிலிருந்த புத்தகத்தைக் காட்டினாள். அது அவர்களது நிறுவனத்தின் ஆண்டு மலர். அவ்வாண்டின் முக்கிய நிகழ்வுகள், சாதனைகள், முதலியன அதில் வெளியிடப்படும்.

"போரடிச்சது.. ஷெல்ஃப்ல இது இருந்தது.. அதான் எடுத்துப் படிச்சேன். உங்களுக்கு போன வருஷம் 'மோஸ்ட் சக்செஸ்ஃபுல் டிசைன்ஸ்' அவார்ட் கிடைச்சதாமே..? பேர் மட்டும் இருக்கு.. ஃபோட்டோ இல்லையே..?"

"அவார்ட் வாங்க நான் இல்ல"

"ஓ.. என்னாச்சு?"

ஆதித் பொறுமையின்றி, "லேட்டானது, கிளம்பி வந்துட்டேன்" என்றான். தாரா உதட்டை சுழித்தாள்.

"ஓ.."

அவன் அதற்குமேல் பேச்சை வளர்க்காமல் மாடிக்குச் சென்றுவிட, தாராவும் தோளைக் குலுக்கிவிட்டு மீண்டும் சோபாவிற்கே சென்றாள்.

***

வெள்ளிக்கிழமை காலை ஏழு பதினைந்து.

தன் அலுவலக அறையில் அமர்ந்து மும்முரமாக ஏதோ தட்டச்சு செய்துகொண்டிருந்த ஆதித்தை, அப்போதுதான் உள்ளே நுழைந்த ராஜீவ் பார்த்து சற்றே திகைத்தான்.

"கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரின்னு சொல்லுவாங்களே.. அது நீங்க தானா பாஸ்?"

ஆதித் நிமிராமல், "பேசிட்டே இரு, நாளைக்கு வேற புது அசிஸ்டென்ட் வரவேண்டியிருக்கும் உன் இடத்துக்கு" என்றான் சாந்தமான தொனியில். ராஜீவ் சிரித்தான்.

"உங்களை புரிஞ்சுக்கிட்டு வேலை பார்க்கறதுக்கு, நானே தேடினாலும் இன்னொரு ஆள் கிடைக்காது!"

"தற்புகழ்ச்சி போதும், அந்த எப்சன் ப்ரிண்ட்ஸ் டீல் ரினீவல் என்ன ஆச்சு? ஊர்ல இருந்தப்ப கூப்பிட்டுக்கிட்டே இருந்தாங்க; அப்பறம் நான் வந்ததும் பேச்சே இல்ல?"

காதல்கொள்ள வாராயோ...Where stories live. Discover now