சூடாக இருந்த வடையை பிய்த்து மெதுவாக சாப்பிட ஆரம்பித்தான்.

'அய்யோ பசிக்குதே. எனக்கு பிடிச்ச வடையை எப்படி சாப்பிடறான் பாரு. எனக்கு பிடிக்கும்னு என்னை வெறுப்பதேவே வாங்கி சாப்பிடறானோ? செஞ்சாலும் செய்வான். உடம்பெல்லாம் கொழுப்பு. தீனி மூட்டை.' என்று திட்டிக் கொண்டிருந்தாள்.

அருகில் வந்த சப்பிலையரிடம், "இன்னும் மூணு வடை. ஒரு டி கொண்டு வாங்க." என்று தான் சாப்பிடுவதை தொடர்ந்தான்.

'சாப்பிடறது மட்டும் தான் இவனோட முக்கியமான வேலை மாதிரி தின்றான் பாரு.' என்று திட்டி கொண்டிருக்க, சூடாக வடை வந்ததும் அவளிடம் நகர்த்தி, "சாப்பிடு. நா சாப்பிடறதையே பார்த்திட்டு இருந்தா.. எனக்கு தான் வயிறு வலிக்கும்." என்று குனிந்து சாப்பிட்டான்.

'அவ்ளோவும் திமிரு. நல்லா நாலு மொத்து மொத்தினா நல்லா இருக்கும்.' என்றவள் விழிகள் வடை மீது பட, மீண்டும் சிவாவை பார்த்தாள். அவன் இவளை கண்டு கொள்ளாமல் சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

'சாப்பிடுன்னு அக்கறையா ஒரு வார்த்தை  சொன்னா என்ன?' என்று திட்டி கொண்டே சாப்பிட்டாள்.

தலையை நிமிர்த்தாமலே ஓரக்கண்ணால் அவள் சாப்பிடுவதை பார்த்து கொண்டிருந்தான்.

'கொழுப்பு அவ்ளோவும் கொழுப்பு... உங்கண்ணன் கொடுத்த செல்லம். எல்லாத்தையும் கரைக்கிறேன்டி.' என்று காபியை எடுத்து குடித்தான்.

இருவரும் சாப்பிட்டு முடித்து இவர்கள் வீட்டிற்கு வந்து நின்றனர்.

ஷிவா வீட்டில் கூறியது தெரியாமல், என்ன சொல்ல போறார்களோ என்று உள்ளுக்குள் பயந்து வண்டியில் இருந்த மெதுவாய் இறங்கினாள்.

வண்டி சத்தம் கேட்டு வெளியே எட்டி பார்த்த ஷிவாவின் அப்பா, ஒரு நொடி அதிர்ந்து கோபமாய் அவர்கள் முன் வந்து நின்றார்.

"எவ்ளோ ஒரு தைரியம் இருந்தா இப்படி ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்து நின்னுருப்ப...?"  என்றார்.

தன் அப்பா விளையாடுகிறார் என்று தெரிந்து கொண்ட ஷிவா எதுவும் பேசாமல் நின்றான்.

இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாய் நிற்க, "தயவு செஞ்சு என் வீட்டுக்குள்ள வராதிங்க. எப்போ வீட்ல இருக்க பெரியவர்களை மதிகாம உன் இஷ்டத்துக்கு யாரோ ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிட்டு வந்தியோ அப்போவே நீ என் பையன் இல்லைடா.. இனிமே என் மூஞ்சிலையே முழிக்காத." என்றார்.

தன்னால் தான் ஷிவா திட்டு வாங்குகுறான் என்பதை பொறுக்க முடியாமல், "அவர் மேல எந்த தப்பும் இல்லை. அவரை எதுவும் திட்டாதிங்க." என்றாள் மெதுவாய்.

'பரவால்லையே நம்மாளுக்கு நம்மளை திட்டினா கோவமெல்லாம் வருது. அப்போ இனி சரியாகிடுவா. சீக்கிரமே என் வழிக்கு கொண்டு வந்துருவேன்.' என்று யோசித்திருக்க,

"நீ யாரும்மா. நான் என் பையன்கிட்ட பேசுறேன். இனி என் வீட்டுக்குள்ள வராதிங்க. அப்படியே போய்டுங்க." என்றார் கோபமாய்.

என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு)Where stories live. Discover now