ஸ்ரீராமின் கண்கள், மிதிலாவின் முகபாவத்தை கவனித்தபடி அவள் முகத்தில் வேரூன்றி நின்றது. அவன் தொண்டையை அடைத்த ஏதோ ஒரு கடினமான உருண்டையை மென்று முழுங்கினான் ஸ்ரீராம். இது கத்தி மேல் நடப்பது போன்ற மிக மோசமான சூழ்நிலை. அவனுக்கு தெரியும், இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், சமுதாயம் பெண்களின் வார்த்தையைத் தான் பெரும்பாலும் நம்புகிறது. ஏனென்றால், இந்த விஷயத்தில் பெண்கள் பொய்யுரைக்க மாட்டார்கள் என்பது அதன் கணிப்பு. ஏனென்றால், இது பெண்களின் மதிப்பு, மரியாதை, கௌரவம் சம்பந்தப்பட்ட விஷயம். அதுவும் கண்ணெதிரில் காணும் போது, யார் தான் ஆணின் பக்கம் இருக்கும் உண்மையை ஆராய்வார்? மிதிலாவுடனான தனது காதல் கதை, முடிவை நெருங்கிவிட்டதை போல உணர்ந்தான் ஸ்ரீராம்.
"நம்ம இதை பத்தி அப்புறம் பேசலாம். வா இங்கயிருந்து போகலாம்" என்றாள் பிரியா.
"இதுக்கு மேல பேச எதுவுமே இல்ல கா. எல்லாமே முடிஞ்சு போச்சு. இவரோட ரூமுக்கு வந்து என் தலையில் நானே மண்ணை அள்ளிப் போட்டுகிட்டேன். இவர் இவ்வளவு கீழ்த்தரமானவரா இருப்பார்னு நான் நினைச்சு கூட பாக்கல. இவ்வளவு தரம் கெட்டுப் போவார்னு நான் நினைக்கல கா"
அருமையாய் ஒரு கதையை ஜோடித்தாள் லயா. அப்பொழுது அவளை நோக்கி மிதிலாவின் கேள்விக்கணை பாய்ந்தது.
"எங்க ரூம்ல நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க? எதுக்காக நீ இங்க வந்த?" என்றாள்.
"ஸ்ரீராம் தான் கூப்பிட்டாரு" என்றாள் லயா.
"ஃபோன் பண்ணி கூப்பிட்டாரா இல்ல மெசேஜ் பண்ணி கூப்பிட்டாரா?"
லயாவுக்கு தெரியும், மிதிலா நிச்சயம் அவளது கைபேசியை காட்டச் சொல்லி கேட்பாள் என்று. அதனால் தன்னை சுதாகரித்துக் கொண்டு, தன் அழுகை நாடகத்தை தொடர்ந்தபடி, மிதிலாவுக்கு பதில் கூறினாள் லயா.
"இவர் ஆஃபீஸ்ல இருந்து வீட்டுக்கு வந்த போது, நான் லிவ்விங் ரூமில் இருந்தேன். அப்போ தான் அவருடைய ரூமுக்கு வரச் சொல்லி கூப்பிட்டார்"
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...
64 அடி மேல் அடி
Start from the beginning