அவன் குரல் ஒலித்த விதம், அவள் வயிற்றை கலக்கியது. இது அவர்களுக்கு திருமணம் ஆன முதல் நாள். முதல் நாளே அவன் இப்படியெல்லாம் வம்பு செய்ய ஆரம்பித்தால், வரப்போகும் நாளில் அவள் என்ன செய்யப்போகிறாள்? அந்த எண்ணம் மேலும் அவளுக்கு கலக்கத்தை தந்தது. ஸ்ரீராமின் அடுத்த வரிகள் அவளை நடுங்கச் செய்தன.
"அதுக்காக நான் அதிர்ஷ்டம் இல்லாதவன்னு சொல்லல. எனக்கு இப்போ அப்படி நடக்காமல் இருக்கலாம்... எல்லா நாளும் அப்படியேவா போயிடப் போகுது?" என்றான்.
அவனது இந்த பக்கத்தை அவளால் தாங்கவே முடியவில்லை. இதன் மூலம் அவன் கூற வருவது தான் என்ன? இதற்கு மேல் அதில் கூற என்ன இருக்கிறது? அவர்களுக்குள் நடக்காத ஒன்றை பற்றி தான் அவன் இப்படி வெட்டவெளிச்சமாய் பேசுகிறான்...!
"நான் அவசர படல... ஆனா, காத்திருக்கேன்..." என்றான்.
அவனைப் பிடித்துத் தள்ளும் நோக்கத்துடன் தனது கரங்களை அவன் நெஞ்சில் பதித்தாள் மிதிலா. இதே சூழ்நிலையை ஏற்கனவே எதிர்கொண்ட அனுபவம் இருந்ததால், அவள் செய்ய வருவதை யூகித்துக் கொண்டான் ஸ்ரீராம். சட்டென்று அவளது இரண்டு கரங்களையும் பற்றிக்கொண்டான். அவனுடைய எந்த கேள்விக்கும் அவளிடமிருந்து பதில் கிடைக்கவில்லை... அவள் பதில் கூறாவிட்டால் என்ன? அவன் கேட்ட கேள்விகள் தான் அவளை சென்று சேர்ந்து விட்டதே. அவனுக்கு அவள் பதில் கூறாவிட்டாலும், தனக்குத் தானே பதிலைத் தேடிக் கொள்வாள்.
"பரத் உன்கிட்ட லிப்ஸ்டிக்கை கொடுக்கல?"
ஆஹா... இதோ வந்துவிட்டது வினை... குகனையும், பரத்தையும், தோசையை திருப்பி போட்டு வேக வைத்ததைப் போல் இப்போது செய்துவிட முடியுமா அவளால்? எதற்காக இப்படிப்பட்ட கேள்விகளை எல்லாம் கேட்டு அவளை சங்கடத்திற்கு ஆளாக்குகிறான் ஸ்ரீராம்?
"அந்த லிப்ஸ்டிக் உன்கிட்ட தான் இருக்குனு எனக்கு தெரியும்"
அவன் கூறியதை மறுக்க நினைக்கும் முன், அடுத்து அவன் கூறிய வார்த்தைகள் அவளை வாயடைக்கச் செய்தது.
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...
57 அக்கறை
Start from the beginning