"என்னக்கா... சொல்லாம திடீர்னு வந்திருக்கீங்க? "
"உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான் திடீர்னு வந்தோம்" என்றாள் பிருந்தா.
அவர்களை அமர வைத்து காபி போட்டுக் கொடுத்தார் வசந்தா.
"நாங்க ஒரு கல்யாணத்துக்காக வந்தோம். அப்படியே உனக்கும் அதிர்ச்சி கொடுக்கலாம்னு நினைச்சோம்" என்றார் சாந்தா சிரித்தபடி.
"நீ ஏன் இன்னைக்கு ஸ்கூலுக்கு போகல மிதிலா?" என்றாள் பிருந்தா.
அவளுக்கு பதில் கூறாமல் தனது அம்மா வசந்தாவை பார்த்தாள் மிதிலா. அது ஆனந்தனையும் சாந்தாவையம் ஒருவரையொருவர் கேள்விக்குறியோடு பார்த்துகொள்ள செய்தது.
"அவளுக்கு காலையில் கொஞ்சம் வயித்துவலி... அதனால தான் இன்னைக்கு ஸ்கூலுக்கு அனுப்பல" என்றார் வசந்தா.
"இங்க வா மிதிலா" என்று மிதிலாவை அழைத்தார் சாந்தா.
இந்த முறை, தனது அம்மாவின் முகத்தை பார்க்காமல், தனது பெரியம்மாவிடம் ஓடிச் சென்றாள் மிதிலா.
"நீ ரொம்ப நல்ல பொண்ணு. நீ பொய் சொல்ல மாட்டேன்னு எனக்கு தெரியும். நீ ஏன் இன்னைக்கு ஸ்கூலுக்கு போகல? என்கிட்ட சொல்லு"
தனது அம்மாவை நோக்கி முகத்தை திருப்ப முயன்ற மிதிலாவின் கன்னத்தை பற்றி, அவளை பார்க்க விடாமல் தடுத்தார் சாந்தா.
"என்கிட்ட உண்மையை சொல்ல மாட்டியா?"
"ஃபீஸ் கட்டலன்னு என்னை ஸ்கூல்ல இருந்து அனுப்பிட்டாங்க பெரியம்மா" என்று கூறினாள் தலைகுனிந்தபடி மிதிலா.
"அவ சொல்றது உண்மையா?" என்றார் ஆனந்தன் அதிர்ச்சியாக.
"எங்ககிட்ட இதைப் பத்தி நீ ஏன் சொல்லல?" என்றார் சாந்தா வேதனை நிறைந்த முகபாவத்தோடு.
"அவ எப்படி சொல்லுவா சாந்தா? இது அவ புருஷனுடைய கவுரவ பிரச்சனை ஆச்சே..." என்றார் ஆனந்தன் வெறுப்போடு.
"அம்மா பணம் கேட்டா, அப்பா அவங்களை அடிக்கிறாரு" என்றாள் கலங்கிய விழிகளோடு மிதிலா.
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...
34 சத்தியம்
Start from the beginning