வழக்கமான சம்பிரதாயங்களை முடிக்க, அழைக்கப்பட்டான் ஸ்ரீராம்.
கூடியிருந்த மக்கள், கலைந்து செல்லத் துவங்கினார்கள். வேலாயுதத்தை நோக்கி சென்ற மிதிலா, அவர் முன் கைகளைக் கட்டிக் கொண்டு புன்னகையுடன் நின்றாள். தூரத்திலிருந்து அந்தக் காட்சியைக் கண்ட ஸ்ரீராமுக்கு ஒன்றும் புரியவில்லை.
"நீங்க உங்களை அறிமுக படுத்திக்கிட்டப்போ என்னால உங்ககிட்ட பேச முடியல. அதுக்காக, உங்களுக்கு மரியாதை செய்யாம இருந்துட முடியாதுல்ல...?" என்றாள் நக்கலாக.
அவளைப் பார்த்து முறைத்தார் வேலாயுதம்.
"அல்பத்தனமான திட்டம் போட்டு இந்த டெண்டரை ஜெயிச்சிடலாம்னு நினைச்சிங்களா?"
"என்ன செஞ்ச நீ?"
"நான் ஏன் அதை உங்ககிட்ட சொல்லணும்? நீங்க என்ன எனக்கு சம்பளமா கொடுக்கிறீங்க?" என்று கிண்டலாக கேட்டுவிட்டு அங்கிருந்து அவள் செல்ல நினைத்த போது,
"இந்த டெண்டரை நீ எப்படி காப்பாத்தினேன்னு சொல்லு" என்றார் பல்லைக் கடித்தபடி.
அவரை நோக்கி திரும்பிய மிதிலா,
"யோசிங்க... யோசிச்சுக்கிட்டே இருங்க..." என்று கூறியபடி பின்னோக்கி நகர்ந்தாள் மிதிலா.
அவரிடம் ஒன்றும் கூறாமல், ஸ்ரீராமிடம் வந்த, அவள்,
"நம்ம கிளம்பலாமா சார்?" என்றாள்.
சரி என்று தலையசைத்தான் ஸ்ரீராம். அவளை தவறாக நினைத்தற்காக அவன் வருந்தினான். வேலாயுதத்தின் வார்த்தைகளை நம்பி, அவன் அவளை தவறாக நினைத்திருக்கக் கூடாது. அவன் தவறாக நினைத்தது வெகு சொற்ப நேரம் தான் என்றாலும், அவள் அப்படிப்பட்ட பெண் இல்லை அல்லவா...?
"இங்க என்ன நடக்குது மிதிலா?" என்றான்.
"நமக்கு டெண்டர் கிடைச்சிடுச்சு, சார்"
"அது எல்லாருக்கும் தெரியும். நான், திரைக்குப் பின்னால நடந்த விஷயத்தை பத்தி கேட்கிறேன்"
"நிச்சயமா சொல்றேன். ஆனா, இப்போ இல்ல... நம்ம ஆஃபீஸுக்கு போகணும்"
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...
25 மிக பெரிய டீல்
Start from the beginning