25 மிக பெரிய டீல்

Comincia dall'inizio
                                    

டெண்டர் முடிவுக்காக காத்திருந்த மிதிலாவை பார்த்தான் ஸ்ரீராம். ஒருவேளை அவள் தவறு செய்திருந்தால், அவளால் இவ்வளவு அமைதியாக இருக்க முடியுமா? அவள் தவறானவளாக இருப்பாள் என்று அவனால் நம்பவே முடியவில்லை.

முடிவு வெளியிடப்பட்டது...

"மிக குறைந்த தொகையாக, வெறும் அறுபத்தி ஐந்து கோடியை கோட் செய்து, இந்த டெண்டரை கைப்பற்றுகிறது எஸ்ஆர் ஃபேஷன்ஸ்" என்று ஒலிபெருக்கியில் கூறினார் சம்பந்தப்பட்ட அதிகாரி.

நிம்மதி பெருமூச்சுவிட்டு மிதிலாவை பார்த்த ஸ்ரீராம், தனது பார்வையை வேலாயுதத்தின் பக்கம் திரும்பினான். வேலாயுதத்தின் முகத்தில் அதிர்ச்சி தாண்டவமாடியது. அந்த கூடம் கரவொலிகளால் அதிர்ந்தது. ஆனால், அந்த சத்தம் ஸ்ரீராமின் காதுகளை எட்டவில்லை. அனைவரும் அவனுக்கு வாழ்த்து கூற துவங்கினார்கள். ஆனால், அவனது கண்கள் மிதிலாவின் மீதே இருந்தது. அவளை நோக்கி ஓடிச் சென்று, அவளை எவ்வளவு இறுக்கமாய் அணைத்துக் கொள்ள முடியுமோ, அவ்வளவு இறுக்கமாய் அணைத்துக் கொள்ள வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு. அவள் தவறானவள் அல்ல... அவள் உண்மையானவள்... சுத்தமானவள். அவனது கண்கள் சந்தோஷத்தில் கலங்கியது. ஸ்ரீராம் கருணாகரன் தெரிந்துகொண்டான், மிதிலா தனக்கு எவ்வளவு முக்கியம் வாய்ந்தவள் என்பதை. அவள், அவனுக்கு, இந்த உலகத்தில் எல்லாவற்றையும் விட முக்கியமானவள். அவனது மூச்சுக் காற்றை போல் இன்றியமையாதவள். அவள் தான், தனது வாழ்க்கையின் மிக பெரிய டீல் என்று உணர்ந்தான் ஸ்ரீராம்.

"நான் சொல்லல? எனக்கு தெரியும் மிதிலாவை பத்தி." என்றான் பல்லைக் கடித்தபடி. ஆனால், அது கோபத்தின் வெளிப்பாடல்ல. அவன் முகம் சந்தோஷத்தால் மின்னியது.

வேலாயுதத்தின் முகம் பேயறைந்தது போல் இருந்தது. ஏமாற்றம் அவர் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. மிதிலாவை பார்த்த ஸ்ரீராம்,  அவள் வேலாயுதத்தின் முகத்தைப் பார்த்து விஷமப் புன்னகை பூத்ததை கவனித்தான். அவனுக்கு தெரியாத ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. ஒருவேளை, வேலாயுதம் அவளிடம் தனக்கு சாதகமாய் நடந்து கொள்ளும்படி கேட்டிருக்கலாம். அவரிடம் ஒத்துக் கொள்வது போல் நடந்துகொண்டு விட்டு, அவள் அவரிடம் விளையாடி இருக்கலாம். அவனது மனம், ஓய்வில்லாமல் யோசித்துக் கொண்டிருந்தது.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Dove le storie prendono vita. Scoprilo ora