மிதிலாவையும் ஸ்ரீராமையும் கவனித்துக்கொண்டிருந்த, புஷ்பாவிற்கு பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டான் லக்ஷ்மன்.
மிதிலா தன்னை நோக்கி வருவதை பார்த்து, கண்களை துடைத்துக் கொண்டாள் நர்மதா. நர்மதாவின் அடுத்த பக்கத்தில் அமர்ந்திருந்த ஸ்ரீராம் எழுந்து நின்றான். அவன் அப்படி செய்வதை பார்த்து, தான் அங்கு வந்தது அவனுக்கு பிடிக்கவில்லையோ என்று நினைத்தாள் மிதிலா. ஆனால் அவளுக்கு ஆச்சரியம் அளிக்கும் வண்ணம், தன் அக்காவின் பக்கத்தில் இருந்த இடத்தை கைகாட்டி,
"உக்காருங்க" என்றான்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த புஷ்பாவிற்கு மட்டுமல்ல, அனைவருக்குமே ஆச்சரியமாகத் தான் இருந்தது. அவன் தான் தன்னுடைய இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காதவன் ஆயிற்றே...! முக்கியமாய் நர்மதாவின் பக்கத்தில்...! நர்மதாவின் பக்கத்தில் அமர்ந்து, அவளை பார்த்து புன்னகைத்தாள் மிதிலா. தினேஷுக்கு பக்கத்தில் அமர்ந்து, அவர்கள் பேசுவதை கவனிக்கலானான் ஸ்ரீராம்.
"உங்களால தான் மாமா, அக்கா அழுதுகிட்டு இருக்காங்க..." என்றாள் தினேஷிடம்.
"என்னது... என்னாலயா? என்ன இப்படி சொல்றீங்க?" என்றான் பதட்டத்துடன்.
"பின்ன... பாருங்க அவங்க எப்படி அழறாங்கன்னு... நீங்க ஜாக்கிரதையா இருப்பீங்கன்னு ஒரு உத்தரவாதத்தை அவங்களுக்கு கொடுத்திருந்தா, ஒரு சாதாரண மோதிரத்துக்காக இப்படி அழுவாங்களா...?"
அதைக் கேட்டு களுக்கென்று சிரித்தான் தினேஷ்.
"என்ன செய்றது மிதிலா... ஒரு சாதாரண மோதிரம் மேல வச்ச நம்பிக்கையை என்னோட பொண்டாட்டி என் மேல வைக்கலயே..." என்றான் பொய்யான கவலையோடு.
உதட்டை சுழித்து அவனைப் பார்த்து சினிங்கினாள் நர்மதா.
"நீங்க அக்காவை ஒன்னும் சொல்லாதீங்க மாமா. அவங்க உங்க மேல ரொம்ப பாசம் வச்சிருக்காங்க. அதனால தான், உங்களுக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயப்படுறாங்க"
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...
20 தீர்வு
Start from the beginning