14 ரசிகை

Start from the beginning
                                    

அவளை காரில் அமர வைத்துவிட்டு குகனுக்கு ஃபோன் செய்தான் ஸ்ரீராம்.

"எஸ் ஆர் கே..."

"மிஸ் ஆனந்த், சேஃபா இருக்காங்க"

"தேங்க் காட்..."

"அவங்க அட்ரஸ்ஸை எனக்கு டெக்ஸ்ட் பண்ணு. நான் அவங்களை வீட்டுல விட்டுட்டு வறேன்"

"ஓகே"

அழைப்பைத் துண்டித்து விட்டு, மிதிலாவை சீட் பெல்டுடன் பிணைத்தான். அப்பொழுது அவளது முகத்தைப் பார்த்தான். எப்பொழுதும் பளிச்சென்று இருக்கும் அவளது முகம் முழுக்க, கண்ணீர் வரைந்த கோடுகள் பரவிக்கிடந்தது. அவளும் ஒரு சர்க்கரை நோயாளி என்பதால், அவளது சர்க்கரையின் அளவு குறைந்து போயிருக்கும். காரின் டேஷ்போர்டில் இருந்து, தான் எப்பொழுதும் தற்காப்புக்காக வைத்திருக்கும் தேன் பாட்டிலை எடுத்தான்.

தனது இடது கையால் அவள் முகத்தை ஏந்தி, லேசாய் கண்ணங்களை அழுத்தி, அவள் வாயை திறக்கச் செய்தான். மெல்ல அந்த தேனை அவள் வாயில் ஊற்றினான். கொஞ்சம் விழுங்கி, கொஞ்சம் துப்பினாள் மிதிலா. தண்ணீரால் அவள் முகத்தை துடைத்து விட்டான். கார் கதவின் மேல் சாய்ந்துகொண்டு, அவளை பார்த்துக் கொண்டு நின்றான்.

அவளுக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்திருந்தால் என்னவாகியிருக்கும்? அவள் இங்கு வந்ததற்கு அவன் பொறுப்பல்ல என்றாலும், அது விஷயமே அல்ல. இழப்பு ஏற்பட்ட பின், தவறு யாருடையதாய் இருந்தால் என்ன? அவள் அவனைப் பற்றி என்ன நினைத்து கொண்டிருக்கிறாளோ என்று அவனுக்கு கவலையாயிருந்தது. அவன் மீது தான் எந்த தவறும் இல்லையே...!

குகன் அனுப்பிய முகவரியை நோக்கி காரை செலுத்தினான் ஸ்ரீராம்.

மிதிலாவின் வீட்டுக்கு முன்னால் காரை நிறுத்தினான். மிதிலா, அவன் தோளில் சாய்ந்திருந்தாள். வழக்கமாய், பெண்கள் அவனை தொட்டாலே அவனுக்கு பிடிக்காது. ஆனால், இப்பொழுது ஏன் அவனுக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை என்று அவனுக்கு புரியவில்லை.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now