2 முதல் சந்திப்பு

Start from the beginning
                                    

அவள் எந்த நிறுவனத்தில் வேலை செய்கிறாள் என்பதை புரிந்து கொள்ள, இப்பொழுது ஸ்ரீராமுக்கு எந்த கஷ்டமும் இல்லை. இருந்தாலும் அதை நிச்சயப்படுத்திக் கொள்ள அவன் நினைத்தான்.

"ஆனா, மிஸ்டர் தர்மராஜ், ரெக்கவர் ஆகுறார்னு கேள்விப்பட்டேனே..." என்றான், ராஜ் மோட்டார்ஸில் நடப்பது என்னவென்று தனக்கு தெரியாதது போல.

"ஆமாண்ணா... ஆனா, டாக்டர் அவரை வேலை செய்யக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்களாம்" என்றான் பரத்.

"ஓஹோ..."

அப்படி என்றால், அவள் தனது வேலையை இழக்கப் போகிறாள். ஒருவேளை, அதன் பிறகு அவள் இங்கு வர வாய்ப்பு இருக்கிறது. வரட்டும், அவனது குடும்பத்தார் அப்பொழுது தெரிந்து கொள்வார்கள், அவள் உண்மையில் யார் என்பதை.

......

ஸ்ரீராம் எதிர்பார்த்தபடியே, தனது வேலையை ராஜினாமா செய்த பின் தான் மிதிலா பூவனம் வந்தாள். அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய ஸ்ரீராம், வரவேற்பறையில் ஒருவரும் இல்லாமல் அமைதியாய் இருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தான். அப்பொழுது, வேலைக்கார சுப்ரமணி காபி தம்ளர்கள் நிறைந்த தட்டுடன் பாட்டியின் அறைக்கு செல்வதை பார்த்தான் அவன்.

"இதை எங்க எடுத்துக்கிட்டு போற, சுப்பு?" என்றான்.

"பாட்டி எல்லாருக்கும் காபி கொண்டு வர சொன்னாங்க. அங்க தான் எடுத்துக்கிட்டு போறேன், அண்ணா"

"ஏன் எல்லாரும் அங்க இருக்காங்க? அங்க என்ன செய்யறாங்க?"

"மிதிலா மேடம், பாட்டிக்கு ஏதோ சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. எல்லாரும் அங்க தான் இருக்காங்க" என்று கூறிவிட்டு காபி தட்டுடன் நடையை கட்டினான் சுப்பு.

"மிதிலாவா? எதுக்காக இவங்க எல்லாரும் இப்படி ஓவர் ரியாக்ட் பண்றாங்க?" என்று எண்ணியப்படி தனது அறையை நோக்கி நடந்தான்.

பரத்தும், லக்ஷ்மணனும் இன்னும் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பவில்லை. ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற கான்ஃபரன்ஸ்ஸை முடித்துக்கொண்டு நேராக வீட்டிற்கு வந்திருந்தான் ஸ்ரீராம்.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now