தென்றலாக என்னைத் தீண்டி
காதல் மழையில் நனைய வைத்து
மனதுக்குள் புதைந்தது யேனோ?
மண் வாசம் தாண்டி
உன் வாசம் வீச
என் சுவாசம் மறந்தேனே..
மழைத் துளி போல் துள்ளிக் குதித்து
மனதை அள்ளிக் கொண்டு வந்தேன்
இறுதியில்,
கண்ணீரில் மழை நீர் கலந்ததோ...
மழை நீரில் கண்ணீர் கரைந்ததோ...!