காதல் ♥️♥️♥️ (Completed)

By sweetylovie2496

356K 9.2K 1.9K

நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே... More

Characters introduction
CHAPTER 1
CHAPTER 2
CHAPTER 3
CHAPTER 4
CHAPTER 5
CHAPTER 6
CHAPTER 7
CHAPTER 8
CHAPTER 9
CHAPTER 10
CHAPTER 11
CHAPTER 12
CHAPTER 13
CHAPTER 14
CHAPTER 15
CHAPTER 16
CHAPTER 17
CHAPTER 18
CHAPTER 19
CHAPTER 20
CHAPTER 21
CHAPTER 22
CHAPTER 23
CHAPTER 24
CHAPTER 25
CHAPTER 26
CHAPTER 27
CHAPTER 28
CHAPTER 29
CHAPTER 30
CHAPTER 31
CHAPTER 32
CHAPTER 33
CHAPTER 34
CHAPTER 35
CHAPTER 36
CHAPTER 37
CHAPTER 38
CHAPTER 40
CHAPTER 41
CHAPTER 42
CHAPTER 43
A/N
A/N

CHAPTER 39

5.8K 190 75
By sweetylovie2496


Jai pov:

    நான் பொருமையா கல்யாணத்துக்கு ரெடியாகிட்டு இருந்தேன்.....

கண்டிப்பா தாரா எடத்தை கண்டுபுடிச்சிருப்பா....
ஏன்னா நானும் விஷ்ணுவும் கிளம்பரதுக்கு முன்னாடி தாரா என்னைய ஹக் பன்னா....

"ஜெய் எதுவும் பேசாத நான் சொல்றத மட்டும் கேட்டுட்டு அமைதியா இரு...எந்த ரியாக்ஷனும் காட்டாத.."னு சொன்னா

என் பாக்கெட்ல யாருக்கும் தெரியாம செய்ன் மாதிரி ஏதோ போட்டா.நான் அவள பாத்தேன்.

"ஜெய் இது செய்ன் இல்ல ட்ராக்கர்....இது யாருக்கும் தெரிய வேண்டாம்..... அங்க ப்ரீயா அப்பாவ வெளில எடுத்ததுக்கு அப்புறமா அந்த ஆள்கே தெரியாம ட்ராக்கர போட்டுருங்க....கண்டிப்பா அவன் ப்ரீயாவ பாக்க போவான்....அத வச்சு நம்ம ப்ரீயா எங்க இருக்குறா....கலை ரேஷ்மி எங்க இருக்குறாங்கன்னு ட்ரேஸ் அவுட் பன்னி தெரிஞ்சுக்கலாம்....கவலப்படாம தைரியமா போ....."னு சொன்னா...

அதுக்கப்புறம் நானும் விஷ்ணுவும் கிளம்பிட்டோம்......அப்புறம் அந்த ஆள போய் வெளில எடுத்தோம்....அவன் பாக்கெட்ல தாரா சொன்ன மாதிரி அவனுக்கே தெரியாத மாதிரி எப்புடி போட்றதுன்னு யோசிச்சிட்டே நின்னுட்டு  விஷ்ணுவ பாத்தேன்....

அப்பதான் ப்ரீயா எனக்கு கால் பன்னா....அந்த ஆள்கூட எங்களையும் ப்ரீயா வர சொல்லுவான்னு நாங்க எதிர்பார்க்கல.....வேலை மிச்சம் டா ஸாமி..ட்ராக்கர் நம்மகிட்டையே இருக்கட்டும்னு நினைச்சிட்டு நானும் விஷ்ணுவும் அந்த ஆள் கூட கிளம்புனோம்....
அதுவும் நல்லதுக்கு தான் ஏன்னா கலை...ரேஷ்மி இருக்குற எடத்தை தெரிஞ்சுக்க ஈஸியா இருக்கும்னு நினைச்சேன்

அங்க போனதும் அந்த லூசு என்கிட்ட அவள கல்யாணம் பன்னனும் அப்பனாதான் கலை...ரேஷ்மிய விடுவேன்னு சொல்லிட்டு அவுங்கள கட்டிபோட்ருக்குற வீடியோவ காமிச்சா....
அதை பாத்துட்டு அவள அப்புடியே கழுத்த நெருச்சு கொன்றலாம் போல கோவம் வந்துச்சு......சரி அவ வழிலையே போய் தாரா வர வரைக்கும் நேரத்தை கடத்துவோம்னு நினைச்சு நான் கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன்...விஷ்ணு நான் நிஜமாவே அவள கல்யாணம் பன்னிக்க ஒத்துக்குட்டேன்னு என்னைய திட்டுனான்....நான் அவன கண்ணுலையே அமைதியா இருக்க சொன்னேன்.....அவனும் நான் ஏதோ ப்ளேன் பன்றேன்னு நினைச்சிட்டு அமைதியாகிட்டான்....நான் ப்ரீயாக்கிட்ட  கடைசியா ஒரு தடவ கலைக்கிட்ட பேசனும்னு சொன்னேன்....அந்த லூசும் அதுக்கு ஒத்துக்குச்சு.....

நான் கல்யாணத்துக்கு ரெடியாகிட்டு இருந்தேன்.....அந்த ப்ரீயா நான் நிஜமாவே அவள கல்யாணம் பன்னிக்க ரெடியாகுறேன்னு நினைச்சிட்டு சந்தோஷமா இருந்துச்சு.....

எப்புடியும் அர்ஜுனும் தாராவும் போலீஸ் எல்லாரையும் கூப்டுட்டு வந்துருவாங்கன்னு எனக்கு தெரியும்....அதுவரைக்கும் நான் நேரத்தை கடத்தனும்....வீட சுத்தி ஆளுங்க நின்னுட்டு இருந்தாங்க அதுனால அவளுக்கு சின்னதா என்மேல சந்தேகம் வந்துட்டாகூட அவ்ளோதான்.....எல்லாரு உயிருக்கும் ஆபத்து அதுனால பொறுமையா இருந்தேன்.....

கொஞ்ச நேரம் கழிச்சு நான் ரெடியாகிட்டு இருக்குற ரூம்க்கு வந்தா.கல்யாணப் பொன்னு மாதிரி அலங்காரம் பன்னிட்டு வந்து நின்னா......மூஞ்ச பாரு இதுக்கு அலங்காரம் வேற கேடு...நினைச்சிட்டே அவள பாத்தேன்...

"என்ன மாப்ள ஸார் ரெடியாகிட்டியா...."னு கேட்டா

உடனே கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டோம்....இப்பவும் அமைதியா இருந்தா சந்தேகம் வந்துரும் ஆக்ட் பன்றா ஜெய்னு நினைச்சிட்டே அவக்கிட்ட பேச ஆரம்பிச்சேன்

"ப்ரீயா ப்ளீஸ்.....இதெல்லாம் வேண்டாம்....ஏன் இப்புடி பன்ற....நான் யாருக்கிட்டையும் உன்னை பத்தியோ உன்னோட அப்பாவ பத்தியோ சொல்லமாட்டேன்....நீங்க எவ்வளவு பணம் கேக்குறிங்களோ நான் குடுத்துடுறேன்.....கலை,ரேஷ்மிய விட்டுரு...."னு சொன்னேன்.

"அப்புடி ஈஸியா உங்கள விட்டுறதுக்கா நான் இவ்வளவும் பன்னிட்டு இருக்குறேன்.....உன்னைய கல்யாணம்  பன்னிட்டு நான் அந்த வீட்ல மகாராணி மாதிரி இருப்பேன்...அந்த திமுரு புடிச்ச கிழவி...அந்த கிழவன என் காலடியில அடிமையா இருக்க வைப்பேன்.....கிட்டதட்ட அங்க என்னோட ராஜ்ஜியம் மட்டும்தான் இருக்கனும்.....அதுமட்டும் இல்லாம நான் உன்கூட இருக்குறத பாத்து பாத்து  அந்த கலை கொஞ்சம் கொஞ்சமா சாகனும்.....அப்பதான்  இந்த எட்டு மாசம் நான் பட்ட எல்லா கஷ்டத்துக்கும் ஈடாகும்....உனக்கு இப்ப வேர வழியே இல்லை ...நீ என்னைய கல்யாணம் பன்னா அட்லீஸ்ட் கலையவும் உன் குழந்தையவும் பாத்துட்டாவது இருக்கலாம்....மாட்டேன்னு அடம்புடிச்சன்னா....பாவம் அலபாய்சுலையே போய் சேந்துருவா உன் கலை "னு சொன்னா.

அவ என் அம்மா அப்பாவ மரியாத இல்லாம பேசுனப்போ எனக்கு கோவம் பயங்கரமா வந்துருச்சு....அப்புடியே அவ முடிய புடிச்சு அடிக்கனும் போல இருந்துச்சு...ஆனா இப்ப கோவப்பட்டா போட்ட ப்ளேன் எல்லாம் வேஸ்டா போய்டும்...உன்னை கடைசில கவனிச்சுக்குறேன்னு நான் பொருமையா இருந்தேன்.....

"சரி நான் கல்யாணம் பன்னிக்குறேன்.....ஆனா அதுக்கு முன்னாடி கலைக்கிட்ட ஒரே ஒரு தடவ தனியா பேசணும்...நான் உன்னைய கல்யாணம் பன்னதுக்கு அப்புறமா எப்புடியும் கலை என்னைய ஏத்துக்க மாட்டா...என்கிட்ட பேசமாட்டா....ஸோ ப்ளீஸ் ஒரே ஒரு தடவ அவள பாக்க விடு....."னு கேட்டேன்

"சரி பாக்க விடுறேன்....ஆனா பத்து நிமிஷம்தான் டைம் அதுக்குள்ள நீ என்ன பேசனுமோ பேசிக்கோ..."னு சொல்லிட்டு என்னைய கூட்டிட்டு போனா...

அவ என்னைய ஒரு ரூம்குள்ள கூட்டிட்டு போனா...அங்க கலைய கட்டிப்போட்டு வச்சுருந்தாங்க...அவள அப்புடி பாத்ததும் என்னால முடியல....நானும் ப்ரீயாவும்  பட்டு வேஷ்டி புடவையில நிக்கவும் அவ எங்கள பாத்துக்குட்டே இருந்தா..

"என்ன டி அப்புடி பாக்குற.....இன்னும் கொஞ்ச நேரத்துல எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்....கவலைப்படாத  கண்டிப்பா நீயும் அந்த கல்யாணத்துல கலந்துப்ப....உன் கண் முன்னாடியே இவன் என் கழுத்துல தாலி கட்டுவான்....அதுக்கு முன்னாடி உன் புருஷன்......ஸாரி ஸாரி....என்னோட வருங்கால புருஷன் உன்கிட்ட ஏதோ தனியா பேசுனுமா....பேசு"னு கலைக்கிட்ட ப்ரீயா சொன்னா..

அவ அதை கேட்டு அழுதுட்டே என்னைய பாத்தா...ப்ரீயா இருந்ததுனால நான் அமைதியா நின்னுட்டு இருந்தேன்...என்னால எதுவும் பேச முடியல....

அப்புறம் ப்ரீயா கலைய கட்டிப்போட்டு இருந்த கயிற அவுத்து விட்டு பத்து நிமிஷம்தான்னு சொல்லிட்டு போனா....நான் அவ வெளில போனதும் டக்குன்னு போய் கதவ சாத்திட்டு கலை பக்கத்துல போனேன்....

அவ நான் பக்கத்துல போனதும் என்னைய அரைய ஆரம்பிச்சுட்டா.

"ஏன்டா இப்புடி பன்ற....இதுக்கு நீ என்னைய பேசாம கொன்ருக்கலாம்"னு சொல்லிட்டே என்னைய அடிச்சா.

நான் அவ கைய புடிச்சு அடிக்குறத நிறுத்துனேன்...

அவ என்னைய தள்ளி விட்டுட்டே இருந்தா....எனக்கு அவள எப்புடி அமைதியாக்குறதுன்னு தெரியல....அதுனால அவள என் பக்கத்துல இழுத்து கிஸ் பன்னேன்....அவ அப்புடியே அமைதியாகிட்டா...
அவ அமைதியானதும் நான் கிஸ் பன்றத நிறுத்திட்டு அவள ஹக் பன்னிட்டு மெதுவா சத்தமே இல்லாம அவக்கிட்ட பேச  ஆரம்பிச்சேன்....

"கலை நான் சொல்றத பொறுமையா கேளு....இன்னும் கொஞ்ச நேரத்துல தாராவும் அர்ஜுனும் போலிஸ் கூட்டிட்டு வந்துருவாங்க......அதுவரைக்கும் நம்ம பொறுமையா இருந்துதான் ஆகனும் வேர வழி இல்லை....."

"அதுக்காக அவ உன்னைய கல்யாணம் பன்னிப்பா நான் பாத்துட்டு அமைதியா இருக்கனுமா...."

"யாரு இப்ப அவள கல்யாணம் பன்னிக்க போரா....."னு சொன்னேன்

கலை என்னைய பாத்தா

"நீயும் அவளும் கல்யாணம் பன்னிக்க போரிங்கன்னு அவதான சொன்னா...."

"நீ என்னைய அவளோதான் புரிஞ்சு வச்சிருக்க.....நீ மட்டும்தான் என் பொண்டாட்டி....வேற யாரும் அந்த எடத்துக்கு வர முடியாது....இது எல்லாம் தாரா அர்ஜுன் வர வரைக்கும்தான்...."

"ஒருவேள தாரா வர லேட் ஆகிடுச்சுனா.....என்ன பன்றது..."னு கேட்டா

"எதாவது பன்னி டைம கடத்தனும்.....வேர வழி இல்லை."னு சொன்னேன்.

அவ சரின்னு அழுதுட்டே என்னைய ஹக் பன்னா..

"ஜெய் ரேஷ்மிய தனியா அடச்சி வச்சிருக்காங்க....அவளுக்கு எதாவது ஆகிடுமோன்னு எனக்கு பயமா இருக்குது...."

"எதுவும் ஆகாது நான் பாத்துக்குறேன்."னு சொல்லிட்டு அவ நெத்தில கிஸ் பன்னேன்..

"அவள கல்யாணம் பன்னிக்க மாட்டல்ல..."னு கலை கேட்டா..

"மாட்டேன்....கொஞ்சம் பொறுத்துக்கோ....அதுமட்டும் இல்லாம நீ என்மேல கோவமா இருக்குற மாதிரியே இரு....அப்பதான் அவளுக்கு சந்தேகம் வராது......"னு சொன்னேன்

"உன்னைய ரேஷ்மிய அவ எதுவும் பன்ன மாட்டா....அதுனால தைரியமா இரு....நான் போரேன் அந்த லூசு பத்து நிமிஷம் தான் குடுத்துருக்கு...."னு சொன்னேன்.

அவளும் சரின்னு தலையாட்டுனா..நான் போகலான்னு திரும்புனேன்...அவ என் கைய புடிச்சு நிருத்துனா. நான் திரும்பி அவள பாத்தேன்...டக்குன்னு என் பக்கத்துல வந்து என்னைய கிஸ் பன்னா....நானும் அவள கிஸ் பன்னேன்....

"ஐ லவ் யு...."னு சொல்லிட்டு அவ நெத்தில கிஸ் பன்னிட்டு கதவ திறந்துட்டு வெளில போனேன்

அங்க கல்யாணம் பன்ன ரெடி பன்னிட்டு இருந்தாங்க....நான் அமைதியா விஷ்ணு பக்கத்துல போய் உக்காந்தேன்....ப்ரீயாவும் அவ அப்பாவும் எதோ தூரத்துல நின்னு பேசிட்டு இருந்தாங்க

"என்னாச்சு மச்சான்...."னு மெதுவா கேட்டான்

"கலை மட்டும்தான் பாக்க முடிஞ்சது....ரேஷ்மிய தனியா வச்சுருக்காங்க."னு மெதுவா அவன்கிட்ட சொன்னேன்.

அதுக்கப்புறம் ரெண்டு பேரும் அமைதியா எதுவும் நடக்காத மாதிரி உக்காந்து இருந்தோம்.....

தாரா....அர்ஜுன் ரெண்டு பேரும் என்ன பன்றிங்கன்னே தெரியல....சீக்கிரம் வந்துருங்க பான்னு மனசுக்குள்ளையே பேசிட்டு உக்காந்து இருந்தேன்...

அந்த நேரம் பாத்து கல்யாணம் பன்றதுக்கு ஐயர் வந்தாரு....அவரு பின்னாடி ஒரு லேடி வந்தாங்க...நடக்காத கல்யாணத்துக்கு எதுக்குடா ஐயர்னு நினைச்சிட்டே உக்காந்நு இருந்தேன்....தாரா ஏன் லேட் பன்ற சீக்கிரமா வா.......

Tara POV:

   நாங்க போனதும் எங்க கண் முன்னாடியே கலையவும் ரேஷ்மியவும் கடத்திட்டாங்க....
எங்களுக்கு என்ன பன்றதுன்னு தெரியல....அப்புறம் கேமரால வண்டி நம்பர் ரெக்கார்ட் ஆகிருந்துச்சு....நான் அதை நோட் பன்னி என்னோட டீம் கிட்ட குடுத்தேன்.....

அதுக்கப்புறம் ப்ரீயா ஜெய்க்கு ஃபோன் பன்னி அவ அப்பாவ ரிலீஸ் பன்ன சொல்லி மெரட்டுனா....ஜெய்யும் வேர வழி இல்லாம அதுக்கு ஒத்துக்கிட்டான்....

அவன்கூட விஷ்ணு போறேன்னு சொன்னான்...நான் ஜெய் பாக்கெட்லையும் குட்டி ட்ராக்கர் போட்டேன்....

அதுக்கப்புறம் ஜெய் கிட்ட எப்புடி யாவது இந்த ட்ராக்கர ப்ரீயாவோட அப்பா பாக்கெட்ல அவருக்கே தெரியாமல்  போட்டுருன்னு சொன்னேன்...அவனும் சரின்னு சொல்லிட்டு கிளம்பிட்டான்....

அதுக்கப்புறம் நானும் அர்ஜுனும்  ட்ரேஸ் பன்னிட்டே அவுங்கள ஃபாலோ பன்ன ஆரம்பிச்சோம்....ஜெய்யும் விஷ்ணுவும் உள்ள ரொம்ப நேரம் ஆகியும் வெளில வரல....என்ன பன்றாங்க இவ்வளோ நேரம்னு பாத்துட்டே இருந்தோம்....அப்ப கரெக்டா ஜெய்...விஷ்ணு ப்ரீயாவோட அப்பா மூனு பேரும் வெளில வந்தாங்க....ப்ரீயா அப்பா கூட ஜெய்யும் விஷ்ணுவும் போனாங்க....இவுங்க எதுக்கு அவன் கூட போறாங்கன்னு பாத்துட்டே அவங்கள ஃபாலோ பன்ன ஆரம்பிச்சோம்....

கடைசியா ஒரு எடத்துல போய் அவுங்க கார் ஸ்டாப் ஆச்சு......நாங்க அந்த எடத்துக்கு போய்டு தூரத்துல எங்க கார நிறுத்திட்டு என்ன பன்றாங்கன்னு பாத்தோம்.....அந்த வீட்ட சுத்தி வெளில நிறைய
ஆளுங்க இருந்தாங்க....

"தாரா இன்னும் என்ன பாத்துட்டு இருக்குற அதான் அவுங்க இருக்குற எடம் தெரிஞ்சுருச்சுல....உள்ள போலாம் வா...."னு அர்ஜுன் சொன்னான்...

"அவசர படாத அர்ஜுன்.....நிறைய ஆளுங்க இருக்குறாங்க...இப்ப நம்ம சைட் ஆளுங்க கம்மியா தான்  இருக்குறோம்.... இவுங்க கூட சண்டை போட ஆரம்பிச்சோம்னா ப்ரீயா அலர்ட் ஆகிடுவா அது ரொம்ப ரிஸ்கு.....அதுமட்டும் இல்லாம கலையும் ரேஷ்மியும் இங்கதான் இருக்காங்கலான்னு நமக்கு உறுதியா தெரியாது....நம்ம அவசரத்துனால அவுங்களுக்கு எதுவும் ஆகிடக்கூடாது....மொதல்ல உள்ள என்ன நடக்குதுன்னு நம்ம தெரிஞ்சுக்கனும்....அதுக்கு மொதல்ல என்ன பன்னலான்னு ஐடியா குடு..."னு சொன்னேன்...

டக்குன்னு அர்ஜுன் என்கிட்ட

"தாரா எனக்கு உடனே ஒரு லேப்டாப் வித் ஸ்பீக்கர் வேனும்."னு சொன்னான்

"இந்த நேரத்துல நீ பாட்டு கேட்கணுமா..."

"தெய்வமே.....நல்லா வருவ.....நீயெல்லாம் எப்புடி சீபிஐ ஆஃபீஸர் ஆன...."

"அர்ஜுன் நீ ரொம்ப பேசுற...."

"பின்ன இந்த நேரத்துல யாராவது பாட்டு கேப்பாங்களா..."

"அப்புறம் எதுக்கு லேப்டாப் ஸ்பீக்கர் கேட்ட..."

"நீ மொதல்ல தா....அதுக்கப்புறம் உனக்கே புரியும்...."னு சொன்னான்...

நானும் லேப்டாப் ஸ்பீக்கர் அவனுக்கு ரெடி பன்னி குடுத்தேன்...

அவன் என்னென்னமோ பன்னிட்டு இருந்தான்

"அர்ஜுன் என்ன பன்ற...."னு கேட்டேன்

"உள்ள என்ன பேசுறாங்கன்னு இந்த ஸ்பீக்கர்ல கேட்கலாம்...."

"அது எப்புடி முடியும்...."

"டெக்னாலஜி....தாரா ஜீ......"னு சொன்னான் நான் புரியாம அவன பாத்தேன்...

"புரியலையா......என் பென்ல விளையாட்டுதனமா ஒரு குட்டியா ஒரு வாய்ஸ் ரெக்கார்டர் செட் பன்னேன்....அதுல நம்ம பேசுறது நம்மல சுத்தி இருக்குறவங்க பேசுறதுன்னு எல்லாமே ரெக்கார்ட் ஆகும்....அந்த ரெக்கார்டர என் ஃபோன்கூட கனெக்ட் பன்னி அதை என் ஃபோன்லையும் கேட்குற மாதிரி செட் பன்னேன்....
அதை செக் பன்னறதுக்கு ஆள் தேடிட்டு இருந்தேன்.....சரி விஷ்ணுவ வச்சு டெஸ்ட் பன்னுவோம்னு அவன்கிட்ட போன வாரம்தான் அந்த பென்ன அன்பளிப்பா குடுத்தேன்....அது இப்ப கைக்குடுக்குது.....மச்சான் நீ பாசக்ககாரன் டா நான் குடுத்த பென்ன பாக்கெட்லையே வச்சிட்டு திரியுரன்னு காலையிலதான் கேட்டேன்.....ஆனா அவன் அப்புடி பன்னது இப்புடி ஹெல்பா இருக்கும்னு நினைக்கல"னு சொன்னான்...

"உன் மூஞ்சிய பாத்துட்டு நீ சரியான்னு பேக்குனு நினைச்சேன்....எப்புடி அர்ஜுன்."

"என்னது பேக்கா....சொல்லுவம்மா...."னு மொரச்சிட்டே சொன்னான்..

கொஞ்ச நேரத்துல அவுங்க பேசுறுது ஸ்பீக்கர்ல கேட்க ஆரம்பிச்சுருச்சு...

நான் சந்தோஷத்துல என்ன பன்றேன்னு தெரியாம அர்ஜுன கட்டிபுடிச்சு அவன் கண்ணத்துல கிஸ் பன்னிட்டேன்....அப்புறம்தான் நான் என்ன பன்னேன்னு என் மண்டைக்கு உறச்சது.....நான் அர்ஜுன பாத்தேன் அவன் நான் கிஸ் பன்ன ஷாக்குல என்னையவே வாய தொறந்துட்டு பாத்துட்டு இருந்தான்....

அதுக்கப்புறம் ரெண்டு பேரும் அமைதியா அவுங்க என்ன பேசுறாங்கன்னு கவனமா கேட்க ஆரம்பிச்சோம்

கடைசியா ப்ரீயா ஜெய்கிட்ட அவள கல்யாணம் பன்னிக்கனும் இல்லன்னா கலைய கொன்றுவேன்னு மெரட்டுனா....அவனும் அவள கல்யாணம் பன்னிக்க ஒத்துக்கிட்டான்....அப்போதான் கலையும் ரேஷ்மியும் இங்கதான் இருக்குறாங்கன்னு உறுதி பன்னிக்கிட்டோம்....

"உன் ஃப்ரெண்ட் என்ன சரியான மானங்கெட்டவனா இருக்குறான்....அந்த மூஞ்சிய எப்புடி கல்யாணம் பன்னிக்க ஒத்துக்கிட்டான்...."னு அர்ஜுன் ஜெய்ய கிண்டல் பன்னான்

"ஓவரா பேசாத....என் ஃப்ரெண்ட் ஒன்னும் விருப்பப்பட்டு ஒத்துக்கல....ப்ரீயா ....கலை அப்புறம் ரேஷ்மிய வச்சு மெரட்டுனதுனாலதான் ஒத்துக்கிட்டான்..."

"சரி இப்ப என்ன பன்றது"னு அர்ஜுன் கேட்டான்..."

"எனக்கும் அதான் தெரியல...."

"இப்புடி தெரியல தெரியலன்னு சொல்றதுக்குதான் டெல்ஹில இருந்து இங்க வந்தியா....சீக்கிரமா எதாவது யோசி இல்லன்னா உன் லூசு ஃப்ரெண்ட் என் அம்முவ விட்டுட்டு அந்த ராட்சஷிய கல்யாணம் பன்னிட போறான்..."

"கொஞ்ச அமைதியா இரு டா....என்னைய கொஞ்சம் யோசிக்க விடு....."னு சொன்னேன்...

அப்போதான் அவுங்க கல்யாணத்துக்கு ஐயர் வர சொல்லிட்டு இருந்தது ஸ்பீக்கர்ல கேட்டோம்....

அப்போதைக்கு கல்யாணத்தை நிறுத்தனும்...எல்லாரையும் சேஃபா கொண்டு வரனும்....எங்கக்கிட்ட ஆளுங்க நிறைய இல்ல நான் அர்ஜுன் அப்புறம் ரெண்டு ஆஃபீஸர்ஸ் மட்டும்தான் இருந்தோம்....டைம் வேர எங்கக்கிட்ட கம்மியா இருந்துச்சு....எங்க டீம் வர வரைக்கும் வெயிட் பன்ன முடியாது

அதுனால நானும் அர்ஜுனும் ஒரு ப்ளேன் போட்டு அவுங்க வர சொன்ன ஐயர பாதிலையே ஸாடாப் பன்னி அவுங்கல எங்க ஆளுங்க கஸ்டடில உக்கார வச்சிட்டு
நாங்க ஐயர் மாமி கெட்அப்ல யாரும் அடையாளம் கண்டுபுடிக்காத மாதிரி  ரெடியானோம்.....

"மிஸ்டர் சுரேஷ் நாங்க ரெண்டு பேரும் மொதல்ல போரோம்....நீங்க நம்ம டீம் மெம்பர்ஸ் வந்ததும் என்னோட ஃபோன்க்கு ஒரு மிஸ்ட் கால் குடுங்க......நாங்க அலர்ட் ஆகிப்போம்....நீங்க அதுக்கப்புறம் உள்ள வந்துருங்க...."னு ஆஃபீஸர்கிட்ட சொல்லிட்டு உள்ள போனோம்..

நாங்க உள்ள போனதும் ஜெய் எங்கள் பாத்தான்......

"ஒரு நிமிஷம் ரெண்டு பேரும் நில்லுங்க."னு ப்ரீயா எங்கள பாத்து சொன்னா

என்னைய அவளுக்கு தெரியாது அதுனால பிரச்சனை இல்லை...
ஆனா அர்ஜுன அவளுக்கு தெரியும்....அடையாளம் தெரிஞ்சுக்காத மாதிரிதான் கெட்அப் போட்டோம்....அப்புடி இருந்தும் கண்டுபுடிச்சுட்டாலோன்னு நானும் அர்ஜுனும் ஒருத்தர் ஒருத்தர் பாத்துக்கிட்டோம்....

To be continue....

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Hi frndzzz

Update epudi irukudhunu

Comment pannunga frndzzz
Kandipa vote pannunga frndzzz

Next update will be soon....























Continue Reading

You'll Also Like

173K 6.7K 36
ஏன்டா அவுட் டேட்டடா இருக்க.... அதைக் கூட விடு! நான் சேலை மூடும் இளஞ்சோலையா; யாராவது கேட்டா சிரிச்சுடுவாங்க பாவா; ஸ்கர்ட் போட்ட புதர் காடுன்னு வேணும்ன...
248K 8.8K 41
💖💘💘💔💓அன்பிற்காக ஏங்கும் அவன் அன்பே வடிவமாய் இவள் .உலைக்களமாய் இருக்கும் அவன் நெஞ்சில் தாலாட்டும் சங்கீதமாய் அவள் வந்த kadhai.
19.8K 852 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...