மட்சியா மேடம்...
குரல் வந்த திசையை நோக்கினாள்.
செக்யூரிட்டி ஒருவர் மேடம் உங்களுக்கு கூரியர் வந்திருக்கிறது என்றார்.
என்ன கூரியரா?? உனக்கு யாருடி பண்ணிருப்பாங்க..? என சிவ்னேஷ் கேட்க..
அது.. அது... அப்பா ஒரு புக் கேட்டிருந்தார். அதைத் தான் ஆன் லைனில் ஆர்டர் செய்திருந்தேன். ஐ திங் அதுதான் வந்திருக்கும். நீங்க சாப்பிட ஸ்டார்ட் பண்ணுங்க நான் வந்திடறேன்.
ம் ஓகே...
ஏய் சீக்கிரம் வாடி.. என மதனா கூற, சரிடி.. என்றுவிட்டு வேகமாக நடந்தாள்.
அவள் தந்தையிடம் நான் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறிய அதே புத்தகத்தை தான் ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தாள்.
புத்தகத்தை கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டு அவசரமாக தன் டேபிளை அடைந்தாள். யார் கண்ணிலும் படாதவாறு தன் கபோர்டின் அடியில் மறைத்தாள்.
என்ன மட்சியா புக் வாங்காமல் வெறும் கையுடன் வருகிறாய் என மதனா கேட்க.. தடுமாறிப் போனாள்.
புக்... அது.. அப்பாவின் அலுவலகத்திற்கே அனுப்பிவிட்டேன். அப்பாவின் அலுவலக விலாசத்தை தான் முதலில் கொடுத்திருந்தேன். அங்கு இல்லை என்னும் பட்சத்தில் தான் நம் அலுவலக விலாசம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் மாற்றி அனுப்பிவிட்டார்கள். அதான் திருப்பி அனுப்பிவிட்டேன்.
சரி.. சரி... சாப்பிடுவோம்.. பசி தாங்கலை..
சிவ்.. டெய்லி கேன்டீனில் சாப்பிடுவதற்கு சலிப்பாக இல்லையா??
இருக்குதான் மதனா. ஆனால் என்ன செய்ய உன் தோழி வீட்டிற்கு வந்தால் தானே சமைப்பதற்கு...
ஓ..ஓ...
டேய் இந்த இதை சாப்பிடு... அம்மா செஞ்சதுதான். நான் உன்னுடையதை சாப்பிட்டுக் கொள்கிறேன்.
ம்... என் மாமியார் செய்ததா?? கொடு.. கொடு...
மூவரும் உணவினை பகிர்ந்து உண்டு முடித்தனர்.
அய்யோ... ஒரு முக்கியமான வேலையை மறந்துவிட்டேன்..நீங்கள் பொறுமையாக வாருங்கள்.. நான் செல்கிறேன் என்று மதனா தன் டேபிளுக்கு ஓடினாள்.
இருவர் மட்டும் அமர்ந்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர்.
மட்சியாவிற்கோ ஏதோ போல் இருந்தது. என்ன பேசுவதென்று புரியாமல் பதட்டமானாள். அவன் முன் இன்று புதிதாய் நாணம் கொள்ளத் தொடங்கினாள்.
மட்சியா.. ஏதாவது பேசுடி, அமைதியாகவே இருக்கின்றாயே??
என்ன பேசுவதென்று தெரியவில்லையே...நீயே ஏதாவது பேசு.. அல்லது நீ ஏதாவது கேள்.. நான் பதில் கூறுகிறேன்.
அப்படியா? சரி சொல்.. எதற்காக என்னையே பார்த்துக் கொண்டிருந்தாய்?? என்ன நினைத்தாய்??
உன்னையா? எப்போது??
ம்... நான் உனக்கு வேலையைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதுதான்...
அதிர்ச்சியுடன் பார்த்தாள். இவன் எப்போது கவனித்தான்?? என்னை பார்க்கவில்லையே..
ஓய்... என்னடி.... எதற்கு பார்த்தாய் எனக் கேட்டேன்...
உனக்கு எப்படிடா தெரியும்.. நான் உன்னைதான் பார்த்தேன் என்று??
டார்லிங்.. நான் என்னதான் வேலையாக இருந்தாலும்.. என் மனம் மட்டும் எப்பொழுதும் உன்னை மட்டுமே சுற்றித் திரியும். அதனால் இதனைக் கண்டறிவது பெரிய விஷயமல்ல...
ம்... ம்... இவ்வளவு அழகா இருக்கியேனு பார்த்தேன் டா என்றாள் வெட்கத்துடன்...
ஐயா.. எப்பவும் அழகுதான்டி...
அய்ய.... ரொம்ப பண்ணாத... என்னைத் தவிர வேற யாராவது உன்னைப் பார்த்தாங்க... அவ்வளவு தான்டா நீ..
அடிப்பாவி... என்னை தவிர வேற யாரையாவது பார்த்தீனா அவ்வளவு தான்னு சொல்வித் தான் கேள்வி பட்டிருக்கின்றேன். நீ என்னடி வேற யாராவது என்னைப் பார்த்தாலும் அவ்வளவு தான்னு சொல்லுற?
ஆமாடா.... நீ யாரையும் பார்க்க மாட்டனு தான் எனக்கே தெரியுமே.... ஆனால் வேறு யாராவது உன்னைப் பார்த்தால்?? அதுவும் எனக்கு பிடிக்காது.... நான் மட்டும் தான் ரசிக்கனும்.... எப்பவும் எனக்கு மட்டும் தான் நீ சொந்தம்...
நான் எப்பவும் உனக்காகத் தான் டி... அதேபோல் நீயும் எனக்காக மட்டுமே.... கவலைப்படாதே... எவ்வளவு தடைகள் வந்தாலும் நான் உன்னை அடைவேன்.
லவ் யூ டா... என கண்ணங்கள் சிவக்க... அவன் கைகளை பிடித்தாள்.
லவ் யூ டூ டி.. என்று அவளது கைகளை இறுகப் பற்றினான்.
அந்த இறுக்கத்தில் அவன் மீதிருக்கும் நம்பிக்கையை அவள் உணர்ந்தாள் .