அர்ஜூன் வீட்டில்..
கல்யாணம் நல்லபடியா முடிஞ்சு.. சக்தி அர்ஜூன் வீட்டுக்குள்ள தன்னோட வலது காலை எடுத்து வைச்சு வந்தாச்சு..
முதலிரவுக்கு அர்ஜூனோட அறை முழுக்க பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தயாரா இருக்கு.
சக்தி அர்ஜூனோட அறைக்குள்ள போறா. சக்தி மனசில.. "எவ்ளோ கனவோட இந்த நாளை எதிர்பார்த்திருப்பேன்.. ஏதோ கடனேனு போற மாதிரி மனநிலைல இருக்கேன் இப்ப.."னு நினைக்கிறா.
சக்திக்கு என்ன பேசுறதுனு எதுவும் தோணலை.. சக்தி அர்ஜூனை பார்க்கிறா.
அர்ஜூன் கோபமா இருக்கிற மாதிரி தோணுது.. ஆனா எதுக்குனு சக்திக்கு புரியலை.
சக்தி "ஏன் இவன் இப்ப கோபமா இருக்கான்.."னு மனசில நினைக்கும் போதே.. அர்ஜுன் பேச்சை தொடங்கிறான்..
"எனக்கு இந்த கல்யாணத்துல கொஞ்சங் கூட விருப்பமில்லை.. எங்க அம்மாவுக்காக தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிகிட்டேன்.. நீ உன் விருப்பம் போல இருந்துக்கோ.. ஆனா என்னோட மனைவிங்கிற உரிமைல என்னை நெருங்க நினைக்காத.."னு அர்ஜூன் சொல்லி முடிச்சிட்டு பால்கனிக்கு போயிடுறான்.
சக்தி ஓரளவுக்கு இது எதிர்பார்த்தது தான்.. ஒரு ஓரத்தில கொஞ்சோண்டு வருத்தம் இருந்தாலும்.. அதை பெரிசா எடுத்துக்காம தூங்கலாம்னு நினைக்கிறா.
கட்டில்ல.. heart shapeல ரோஸ் வச்சு டெக்கரேட் பண்ணிருக்காங்க.. சக்தி அது பக்கத்தில படுத்தபடி.. அந்த பூவை கையால தடவியபடி அன்னைக்கு நடந்த எல்லாத்தையும் யோசிக்கிறா.
"எவ்ளோ சந்தோஷமா இருந்த என்னை.. இப்டி கல்யாணம்னு சொல்லி.. எப்டி மாத்திட்டாங்க..
ஆனா வேற வழியில்லை.. இனிமே இத ஏத்துக்கிட்டு தான் ஆகணும்..
அர்ஜூனுக்கு ஏன் என்னை பிடிக்கலை.. சரி எதுவா இருந்தாலும் அது மாறும்.."னு சக்தி தனக்கு தானே சமாதானம் சொல்லிட்டு இருக்கா.
நிரஞ்சனோட பாட்டி கிட்ட ஆசிர்வாதம் வாங்கும் போது.. பாட்டி அர்ஜூன் கிட்ட.. "உன்னை நினைச்சா கொஞ்சம் பாவமா தான் இருக்கு.. நீ இவளை என்ன வேணாலும் செய்ய சொல்லு.. ஆனா மறந்து கூட பாட சொல்லிடாத.. அவ்ளோ சூப்பரா பாடுவா.."னு சொல்றாங்க.
சக்தி.. "பாட்டி.."னு சொல்லி முறைக்கிறா.
அதுக்கு அர்ஜூன் சிரிச்சது சக்தி கண் முன்னால வந்து போகுது.. ஏதோ ஒரு இனம்புரியா ஈர்ப்பு.. அந்த சிரிப்பில்..
சக்தி அர்ஜூனோட சிரிப்பை நினைச்சிட்டே தூங்கிடுறா.
அதே நேரம்..
அர்ஜூன் பால்கனில நின்னு ஏதேதோ யோசனை பண்ணிட்டு இருக்கான்..
கொஞ்ச நேரம் கழிச்சு.. அர்ஜூன் ரூமுக்குள்ள வர்றான்.. சக்தி நல்லா தூங்கிட்டு இருக்கா.
அவளை கொஞ்ச நேரம் கண் இமைக்காம பார்த்தபடி இருக்கான் அர்ஜூன்.. சக்தி தூக்கத்துல அசைய.. அர்ஜூன் தன் பார்வையை விலக்கிட்டு.. நகர்ந்தான்.
அர்ஜூன் கொஞ்ச நேரம் தேடி ஒரு டைரியை எடுக்கிறான்.
ஒரு பேனா எடுத்துட்டு.. டைரி எழுத உட்கார்றான்.
அந்த டைரியில.. அர்ஜூனும் உதய்யும் இருக்கிற போட்டோ இருக்கு.
உதய்..
எனக்கு இன்னைக்கு கல்யாணம் டா.. ஆனா என் மனசில கொஞ்சங்கூட சந்தோஷமே இல்லை..
நான் என் லைப்ல வரப்போற பொண்ணு எப்டி லாம் இருக்கணும்னு ஆசைப்பட்டேனு உனக்கு தான் நல்லா தெரியும்..
அவளுக்கு அம்முன்னு பேர் வச்சு.. அவளை நினைச்சு கவிதை லாம் எழுதி.. கற்பனையிலே அவளை நினைச்சு வாழ்ந்தேன்..
கொஞ்ச நாளைக்கு முன்னாடி facebookல அம்முன்னு ஒரு பொண்ணு கூட ஃபிரெண்டானேன்.. எனக்கு நிறைய தடவை அவ கூட பேசும் போது அவ தான் நான் ஆசைப்பட்ட என்னோட அம்முன்னு தோணுச்சு..
அவ என்கிட்ட நாம நேரில மீட் பண்ணலாமானு கேட்ட போது.. நான் அவளை நேரில பார்த்து.. என் மனசில உள்ளதை சொல்லலாம்னு நினைச்சேன்.. ஆனா ஏனோ அவ என்னை பார்க்க வரலை.. அதோட அவகூட பேசவும் முடியலை.
சரி அவளுக்காக காத்திருக்கலாம்னு நினைச்சேன்.. ஆனா அதுக்குள்ள அம்மா எனக்குனு ஒரு பொண்ண முடிவு பண்ணிட்டாங்க..
அம்மாவோட சந்தோஷத்துக்காக நான் கல்யாணம் பண்ணிகிட்டேன்.. ஆனா என்னால அவளோட முழு மனசோட பேசக்கூட முடியலை..
நீ என்னை விட்டு.. இந்த உலகத்தை விட்டு.. போய்ட்ட.. இப்ப என் மனசில இருக்கிறத சொல்லக்கூட ஆளில்லையே டா..
எழுதி முடிக்கும்போது அர்ஜூனோட கண்ணீர் துளியும் சேர.. அந்த டைரியை மூடிவச்சிட்டு அப்டியே அதில தலை வைச்சபடி தூங்கிடுறான் அர்ஜூன்..