அடியே.. அழகே..

By jamunaguru

449K 15K 1.8K

மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்ல... More

💕
1💕
2💕
3💕
4💕
5💕
💝
6💕
7💕
8💕
9💕
10💕
11💕
12💕
💞
13💕
14💕
15💕
16💕
17💕
18💕
19💕
21💕
22💕
23💕
24💕
25💕
26💕
27💕
28💕
29💕
30💕
31💕
32💕
33💕
34💕
35💕
36💕
37💕
38💕
39💕
40💕
41💕
42💕
43💕
44💕
45💕
46💕
47💕

20💕

8.2K 311 19
By jamunaguru

நிச்சயதார்த்தம் சிம்பிளா நடந்த மாதிரி கல்யாணமும் சிம்பிளா நடந்தா நல்லா இருக்கும்னு சக்தியும் அர்ஜீனும் மனசில நினைக்கிறாங்க.

ஆனா எல்லாமே அவங்க நினைக்கிறதுக்கு எதிரா நடக்குது.

இந்திரா குருப் ஆப் கம்பெனிஸ் எம்.டி கல்யாணம் சாதாரணமாகவா நடக்கும்..

இன்விட்டேஷன் இரண்டு வீட்டுக்கும் பொதுவா ப்ரிண்ட் பண்றாங்க..

சக்திக்கு ப்ரெண்ட்ஸ் யாரையும் கூப்பிடணும்னே தோணலை. ஆனா எல்லாரையும் சுந்தரத்துக்கு தெரியுங்கிறதால.. எல்லாரையும் இன்வைட் பண்ணிட்டாங்க.

கல்யாணத்துக்கு எல்லாருக்கும் டிரெஸ் செலக்ட் பண்ண ரொம்ப பிரபலமான கடைக்கு போறாங்க.

இந்திரா சக்திகிட்ட "அம்மு உனக்கு பிடிச்ச டிசைன் செலக்ட் பண்ணு.."னு சொல்றாங்க.

சக்தி சரினு தலையாட்டுறா.

அர்ஜீன் "அம்மா இவளை ஏன் அம்முனு கூப்பிடுறாங்க.."னு முறைச்சிட்டு நிக்கிறான்.

"அர்ஜீன் நீயும் பாரு.. சக்திக்கு எது நல்லா இருக்கும்னு சொல்லு.."னு இந்திரா சொல்றாங்க.

அர்ஜீன் வேற வழி இல்லாம தலையாட்டுறான்.

எல்லாமே விலை அதிகமா இருக்கு. சக்தி பார்த்து பார்த்து செலவு பண்ற டைப்.. அதனால என்ன பண்றதுனு புரியலை. வெறுமனே பார்த்துட்டே நிக்கிறா.

"அம்மு.. என்னாச்சு.. பிடிக்கலையா உனக்கு எதுவும்.."னு இந்திரா கேட்கிறாங்க.

"அது.. அது.. எல்லாமே ரொம்ப காஸ்ட்லியா இருக்கு.."னு சக்தி சொல்றா.

"அதெல்லாம் நீ யோசிக்காத.. உனக்கு எது பிடிச்சிருக்கு னு மட்டும் சொல்லு.."னு இந்திரா சொல்றாங்க.

சக்தி சரினு தலையாட்டுறா.

அர்ஜீன் அவனுக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி நின்னுட்டு இருக்கான்.

இந்திரா.. "அர்ஜீன்.. நீயும் வந்து அம்முவுக்கு ஹெல்ப் பண்ணு.."னு சொல்றாங்க.

அர்ஜீன் என்ன சொல்றதுனு தெரியாம.. அவனும் ஏதோ செலக்ட் பண்ற மாதிரி பார்க்க ஆரம்பிச்சான்.

நிறைய பார்க்கிறாங்க.. எதுவுமே பிடிக்கலை. இந்திரா அவங்க இரண்டு பேரும் செலக்ட் பண்ணட்டும்னு தனியா விட்டுட்டு போயிடுறாங்க.

அர்ஜீன் ஒரு சேரி எடுக்கிறான் அது அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு.. இந்திரா கிட்ட காட்டலாம்னு திரும்புறான்.. சக்தியும் வேற ஒரு சேரி செலக்ட் பண்ணிருக்கா..

இந்திரா வர்றாங்க.. இரண்டு பேரும் ஆளுக்கு ஒன்னு கையில வச்சிட்டு நிக்கிறத பார்த்துட்டு.. "என்ன எது.. செலக்ட் பண்ணிருக்கீங்க.."னு கேட்கிறாங்க.

இரண்டு பேரும் திருதிருனு முழிக்கிறாங்க.. எதை சொல்றதுனு தெரியாம..

சக்தி அர்ஜீன் கையில இருக்கிறத காட்ட.. அர்ஜீன் சக்தி கையில இருக்கிறத காட்டுறான்.

இந்திரா அவங்க இரண்டு பேரும் பண்றத பார்த்து சிரிக்கிறாங்க. "சரி இரண்டுமே இருக்கட்டும்.. ஒன்னு முகூர்த்தத்துக்கு.. இன்னொன்னு.. சாயந்திரம் ரிசப்ஷனுக்கு.."னு சொல்லிட்டு.. அர்ஜீனுக்கு டிரெஸ் செலக்ட் பண்றாங்க.

இங்கேயும் இரண்டு பேரும் ஆளுக்கு ஒன்ன எடுத்தா.. காமெடியா இருக்கும்னு சக்தி சும்மா வேடிக்கை பார்த்துட்டு நிக்கிறா.

அர்ஜீனுக்கும் டிரெஸ் எடுத்துட்டு எல்லாரும் கிளம்புறாங்க.

சுத்தி இருக்க எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க.. சக்தி.. அர்ஜீன் தவிர.. இரண்டு பேருக்குமே இது சரியா வருமாங்கிற குழப்பம் இருந்துட்டே இருக்கு.

கல்யாணத்துக்கு முந்தின நாள்.. சக்தி வீட்டில எல்லாரும் மண்டபத்துக்கு கிளம்பிட்டு இருக்காங்க.

நிவேதா நிரஞ்சன் கிட்ட.. "தலை சுத்துற மாதிரி இருக்கு.."னு சொல்றா.

"மண்டபத்துக்கு போய்ட்டு நீ ரெஸ்ட் எடு.. கல்யாணம் முடிஞ்சதும் நாம டாக்டர் கிட்ட செக் பண்ணலாம்.."னு நிரஞ்சன் சொல்றான்.

"எனக்கு என்னமோ happy news ஆ இருக்கும்னு தோணுது.."னு நிவேதா சொல்றா.

"Happy news ஆ இருந்தா.. double சந்தோஷம்.. சரி வா போகலாம்.."னு நிரஞ்சன் சொல்ல.. இரண்டு பேரும் கிளம்புறாங்க.

நிலாவும் பாட்டியும் சக்தியை கிண்டல் பண்ணிட்டே இருக்காங்க.. சக்தி உண்மையான சந்தோஷத்தோட இருந்திருந்தா.. அவங்கள ஒரு வழி பண்ணிருப்பா.. ஆனா.. இப்ப வெறுமனே சிரிச்சு.. சமாளிச்சிட்டு இருந்தா.

அர்ஜீனும் நடக்கிற எதுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி நடந்துக்கிறான்.

கல்யாணத்துக்கு முந்தின நாள் இரவில்.. சக்தி நிலவை பார்த்தபடி யோசிச்சிட்டு இருக்கா.

இனிமே நடக்கப்போற எதையும் என்னால மாத்த முடியாது.. இனி அர்ஜீன் தான் என் வாழ்க்கை.. அதை நான் புரிஞ்சு ஏத்துக்கிட்டு தான் ஆகணும்.. அதுதான் எல்லாருக்கும் நல்லது..

அர்ஜீனும் அதே மாதிரியான மனநிலையில தான் இருந்தான்.

கல்யாண நாள்.. ஜோடிப் பொருத்தம் நல்லா இருக்குன்னு ஊரே ரசிச்சிட்டு இருக்கு..

தன்னை சுத்தி இருக்கிறவங்களோட சந்தோஷம் முக்கியம்னு சக்தியும் அர்ஜீனும் நினைக்கிறாங்க..

மணமேடையில உட்கார்ந்து இருக்கும் போது அர்ஜீன் தன் அப்பா அம்மா முகத்தை பார்க்கிறான்.. அவங்க சந்தோஷம்.. அவன் மனசை கொஞ்சம் திடமாக்குது..

மேளச்சத்தம் முழங்க.. எல்லாரும் வாழ்த்தி அட்சதை தூவ.. அர்ஜீன் சக்தி கழுத்தில தாலி கட்டுறான்..

சக்தி தன் அப்பா அம்மா முகத்தை பார்க்கிறா.. அவங்க முகத்தில இருந்த  சந்தோஷம் அவளுக்கு மனபலத்தை கொடுக்கிறது..

இனிதே திருமணம் முடிந்தது.

Continue Reading

You'll Also Like

23.4K 1.1K 63
ஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்த...
145K 5.9K 49
உறவுகளின் உன்னதம்
449K 15K 50
மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படிய...